Just In
- 4 min ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 1 hr ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 4 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 5 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
வெறும் 12 மணிநேரத்தில் மும்பை டூ டெல்லியை இணைக்கும் புதிய எக்ஸ்பிரஸ் சாலை!!
மும்பையிலிருந்து டெல்லியை வெறும் 12 மணிநேரத்தில் இணைக்கும் விதத்தில் புதிய அதிவிரைவு நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் வரும் டிசம்பர் 10ந் தேதி துவங்கப்பட இருக்கிறது. 1,250 கிமீ தூரத்திற்கு இந்த சாலை அமைக்க
மும்பையிலிருந்து டெல்லியை வெறும் 12 மணிநேரத்தில் இணைக்கும் விதத்தில் புதிய அதிவிரைவு நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் வரும் டிசம்பர் 10ந் தேதி துவங்கப்பட இருக்கிறது. இந்த சாலையின் முக்கிய அம்சங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே அதிவிரைவு போக்குவரத்து திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த வகையில், புல்லட் ரயில், அதிவிரைவு நெடுஞ்சாலைகள் மற்றும் ஹைப்பர்லூப் உள்ளிட்ட போக்குவரத்து முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையிலிருந்து தலைநகர் டெல்லியை அதிவிரைவாக இணைப்பதற்காக புதிய எக்ஸ்பிரஸ் சாலையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. ரூ.1 லட்சம் கோடி முதலீட்டிலான இந்த பிரம்மாண்ட திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.
இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலையின் கட்டுமானப் பணிகள் வரும் டிசம்பர் மாதம் 10ந் தேதி துவங்கப்பட இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறி இருக்கிறார்.
வரும் டிசம்பர் 10ந் தேதி துவங்கும் இந்த சாலைக் கட்டுமானப் பணிகள் அடுத்த 30 முதல் 36 மாதங்களில் நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. தற்போது மும்பையிலிருந்து டெல்லியை சாலை மார்க்கமாக செல்வதற்கு 1,450 கிமீ தூரம் பயணிக்க வேண்டும்.
இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலையானது 1,250 கிமீ தூரத்திற்கு அணைக்கப்பட இருக்கிறது. இதனால், பயண தூரம் 200 கிமீ தூரம் வரை குறையும். அத்துடன், தற்போது மும்பையிலிருந்து டெல்லியை அடைவதற்கு 24 மணிநேரம் பிடிக்கிறது.
இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலையில் வெறும் 12 மணிநேரத்தில் மும்பையிலிருந்து டெல்லியை அடைந்துவிடலாம். அதாவது, பயண நேரம் பாதியாக குறையும். அந்த அளவுக்க சிறப்பான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளுடம் நிர்மாணிக்கப்படுகிறது.
விரைவாக இந்த கட்டுமானப் பணிகளை முடிக்கும் விதத்தில், ஒரே நேரத்தில் 40 இடங்களில் கட்டுமானப் பணிகள் செய்யப்பட இருக்கின்றன. இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலையானது கிட்டத்தட்ட பழைய தேசிய நெடுஞ்சாலை எண்-8 அமைந்திருக்கும் பகுதியை ஒட்டியே பெரும்பாலும் செல்லும். சில இடங்களில் மட்டுமே வேறு பகுதி வழியாக செல்ல இருக்கிறது.
ரூ.1 கோடி மதிப்பிலான இந்த திட்டத்திற்கு தேவைப்படும் தொகையை பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை. பணம் பொருட்டாக இருக்காது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறி இருக்கிறார். எனவே, பணிகள் மிக விரைவாகவும், சுமூகமாகவும் நிறைவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி அருகேயுள்ள குர்கானில் துவங்கி மேவத், கோட்டா, ரத்லம், கோத்ரா, வதோதரா, சூரத், தஹீசர் வழியாக மும்பை வரை அமைக்கப்பட இருக்கிறது.
இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலை மூலமாக விபத்துக்கள் எண்ணிக்கை குறைவதுடன், தேசிய நெடுஞ்சாலை எண் 8 மற்றும் மேற்கு பகுதிகளிலிருந்து தலைநகர் டெல்லியை நோக்கி செல்லும் கனரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!