இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இவர்தான்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை கேட்க வேண்டாம்...

மிகவும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன கார் ஒன்றை வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெண் ஒருவர் பெற்றுள்ளார். பலவீனமான இதயம் உள்ளவர்கள், இந்த காரின் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்.

மிகவும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன கார் ஒன்றை வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெண் ஒருவர் பெற்றுள்ளார். பலவீனமான இதயம் உள்ளவர்கள், இந்த காரின் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்.

இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இந்த பெண்தான்... விலையை கேட்டால் அம்பானியே அதிர்ந்து போவார்...

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ரோல்ஸ் ராய்ஸ். பாரம்பரியம் மிக்க ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் அனைத்து லக்ஸரி கார்களும், உலகம் முழுக்க மிகவும் புகழ்பெற்று விளங்குகின்றன.

இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இந்த பெண்தான்... விலையை கேட்டால் அம்பானியே அதிர்ந்து போவார்...

ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு என இந்தியாவிலும் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. வாழ்க்கையில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன காரையாவது சொந்தமாக வாங்கி விட வேண்டும் என்ற கனவு நம்மில் பலருக்கும் நிச்சயமாக இருக்கும். ஆனால் அது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.

இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இந்த பெண்தான்... விலையை கேட்டால் அம்பானியே அதிர்ந்து போவார்...

ஏனெனில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் அனைத்து கார்களும் மிகவும் விலை உயர்ந்தவை. எனவே சாமானிய மக்களால், ரோல்ஸ் ராய்ஸ் கார்களை அவ்வளவு எளிதாக வாங்கி விட முடியாது. இதனால்தான் இந்திய சாலைகளில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பார்ப்பது அபூர்வமாக உள்ளது.

இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இந்த பெண்தான்... விலையை கேட்டால் அம்பானியே அதிர்ந்து போவார்...

இப்படிப்பட்ட சூழலில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கல்லினன் என்ற கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது எஸ்யூவி வகையை சேர்ந்த கார் ஆகும். ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வெளியிட்ட முதல் எஸ்யூவி வகை கார் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இந்த பெண்தான்... விலையை கேட்டால் அம்பானியே அதிர்ந்து போவார்...

உலகம் முழுக்க உள்ள பெரும்பாலான கார் ஆர்வலர்கள், தற்போது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் குறித்துதான் மிகவும் ஆச்சரியமாக பேசி கொண்டிருக்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக, இந்திய மார்க்கெட்டிலும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இந்த பெண்தான்... விலையை கேட்டால் அம்பானியே அதிர்ந்து போவார்...

உலகம் முழுக்க ஆச்சரியமாக பேசப்பட்டு வரும், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையை அபினி ஷோஹன் ராய் என்ற பெண் பெற்றுள்ளார். உலகிலேயே ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காருக்கான முதல் இந்திய வாடிக்கையாளர் இவர்தான்.

இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இந்த பெண்தான்... விலையை கேட்டால் அம்பானியே அதிர்ந்து போவார்...

ஆனால் இவர் இந்தியாவில் வசிப்பவர் கிடையாது. ஐக்கிய அரபு எமீரகத்தில் உள்ள துபாயில்தான், அபினி ஷோஹன் ராய் தற்போது வசித்து வருகிறார். ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை, அபினி ஷோஹன் ராய் வாங்கியதன் பின்னணி மிகவும் சுவாரசியமானது.

இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இந்த பெண்தான்... விலையை கேட்டால் அம்பானியே அதிர்ந்து போவார்...

அபினி ஷோஹன் ராயினுடைய கணவர் ஷோஹன் ராய் துபாயில் மிகவும் புகழ்பெற்ற தொழிலதிபர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ஷோஹன் ராய்-அபினி ஷோஹன் ராய் தம்பதியர், சமீபத்தில் தங்களது 25வது திருமண நாளை வெகு விமரிசையாக கொண்டாடினர்.

இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இந்த பெண்தான்... விலையை கேட்டால் அம்பானியே அதிர்ந்து போவார்...

அப்போது தனது வாழ்வில் இரண்டற கலந்துள்ள அன்பு மனைவிக்கு, ஏதேனும் வித்தியாசமான பரிசு ஒன்றை வழங்க வேண்டும் என தொழிலதிபர் ஷோஹன் ராய் முடிவு செய்தார். இதற்காக அவர் தேர்வு செய்ததுதான் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்.

இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இந்த பெண்தான்... விலையை கேட்டால் அம்பானியே அதிர்ந்து போவார்...

25வது திருமண நாளை முன்னிட்டு, அன்பு மனைவிக்கு பரிசாக வழங்குவதற்காக, ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை, தொழிலதிபர் ஷோஹன் ராய் முதல் ஆளாகவே 'புக்' செய்து விட்டார். எனவே கடந்த டிசம்பர் 12ம் தேதியன்று, அபினி ஷோஹன் ராய்க்கு கார் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இந்த பெண்தான்... விலையை கேட்டால் அம்பானியே அதிர்ந்து போவார்...

ஆனால் தற்போது வரை அவருக்கு கார் டெலிவரி செய்யப்படவில்லை. என்றாலும் துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் மூலம், கல்லினன் காரினுடைய சிறப்பம்சங்கள், அந்த கார் எப்படி உள்ளது? என்ற தகவல்களை, ஷோஹன் ராய்-அபினி ஷோஹன் ராய் தம்பதியினர் அறிந்து கொண்டனர்.

இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இந்த பெண்தான்... விலையை கேட்டால் அம்பானியே அதிர்ந்து போவார்...

கல்லினன் காரை 'புக்' செய்துள்ள மற்றும் அதனை வாங்க முடிவு செய்துள்ள நபர்களை எல்லாம் அழைத்து, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. துபாயில் சமீபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஷோஹன் ராய்-அபினி ஷோஹன் ராய் தம்பதியினரும் கலந்து கொண்டனர்.

இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இந்த பெண்தான்... விலையை கேட்டால் அம்பானியே அதிர்ந்து போவார்...

இதன்மூலம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற நபர்களுடன் சேர்ந்து, ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் சிறப்பம்சங்களை எல்லாம், ஷோஹன் ராய்-அபினி ஷோஹன் ராய் தம்பதியினரும், மிகவும் விரிவாக அறிந்து கொண்டனர்.

இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இந்த பெண்தான்... விலையை கேட்டால் அம்பானியே அதிர்ந்து போவார்...

ஏற்கனவே குறிப்பிட்டபடி கடந்த டிசம்பர் 12ம் தேதியே, அபினி ஷோஹன் ராய்க்கு, கல்லினன் கார் டெலிவரி செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வரை டெலிவரி செய்யப்படாதது ஏன்? என்பதற்கான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இந்த பெண்தான்... விலையை கேட்டால் அம்பானியே அதிர்ந்து போவார்...

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமானது, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, காரில் மாறுதல்களை செய்து தரும் 'கஸ்டமைசேஷன்' ஆப்ஷனையும் வழங்குகிறது. எனவே ஷோஹன் ராய்-அபினி ஷோஹன் ராய் தம்பதியினர், சில மாற்றங்களை செய்து தரும்படி கேட்டிருக்கலாம் என தெரிகிறது.

இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இந்த பெண்தான்... விலையை கேட்டால் அம்பானியே அதிர்ந்து போவார்...

இதனை செய்து முடிக்க கால அவகாசம் தேவை என்பதால்தான், டெலிவரி தள்ளிப்போய் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமானது, சில ஆல்டரேஷன்களை கை வேலைப்பாடுகள் மூலமாகவே செய்து வருகிறது. எனவே சில சமயங்களில் ஓராண்டு கூட டெலிவரி தள்ளிப்போகும்.

இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இந்த பெண்தான்... விலையை கேட்டால் அம்பானியே அதிர்ந்து போவார்...

என்றாலும் அபினி ஷோஹன் ராய்க்கு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வெகு விரைவில், கல்லினன் காரை டெலிவரி செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக 2019ம் ஆண்டின் முதல் சில மாதங்களுக்குள்ளாக அவருக்கு கார் டெலிவரி ஆகலாம்.

இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இந்த பெண்தான்... விலையை கேட்டால் அம்பானியே அதிர்ந்து போவார்...

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன கார்களை வாங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பதால், வாழ்க்கையில் ஒரு முறையாவது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஏதேனும் ஒரு காரில் பயணம் செய்து விட்டால் கூட போதும் என்றுதான் பலர் நினைத்து கொண்டுள்ளனர்.

இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இந்த பெண்தான்... விலையை கேட்டால் அம்பானியே அதிர்ந்து போவார்...

இப்படிப்பட்ட சூழலில், ஷோஹன் ராய்-அபினி ஷோஹன் ராய் தம்பதியினர், ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி குவித்து கொண்டுள்ளனர். ஆம், அவர்கள் ஏற்கனவே, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் ஒன்றை சொந்தமாக வைத்துள்ளனர்.

இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இந்த பெண்தான்... விலையை கேட்டால் அம்பானியே அதிர்ந்து போவார்...

அரேபியன் ப்ளூ நிறத்தில் உள்ள இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பாகதான், ஷோஹன் ராய்-அபினி ஷோஹன் ராய் தம்பதியினர் டெலிவரி எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குள்ளாக அடுத்த ரோல்ஸ் ராய்ஸ் கார் அவர்கள் வீட்டிற்கு வரவுள்ளது.

இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இந்த பெண்தான்... விலையை கேட்டால் அம்பானியே அதிர்ந்து போவார்...

வெகு விரைவில் அபினி ஷோஹன் ராய் வசம் வரவுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் விலை 6.95 கோடி ரூபாய்!! இத்தனைக்கும் இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை மட்டும்தான் என்பது கவனிக்கத்தக்கது. ஆன் ரோடு வருகையில், இதன் விலை இன்னும் கணிசமாக அதிகரிக்கும்.

இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இந்த பெண்தான்... விலையை கேட்டால் அம்பானியே அதிர்ந்து போவார்...

25வது திருமண நாளை முன்னிட்டு, இவ்வளவு விலை உயர்ந்த ஒரு பரிசை, கணவரிடம் இருந்து பெறவுள்ளார் அபினி ஷோஹன் ராய். நிச்சயமாக இவர் கொடுத்து வைத்தவர்தான். ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில், 6.75 லிட்டர், வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரை வாங்கிய முதல் இந்தியர் இந்த பெண்தான்... விலையை கேட்டால் அம்பானியே அதிர்ந்து போவார்...

இந்த இன்ஜின் அதிகபட்சமாக, 563 பிஎச்பி பவர் மற்றும் 850 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய வல்லமை வாய்ந்தது. ஷோஹன் ராய்-அபினி ஷோஹன் ராய் தம்பதியினர், சிக்னேச்சர் ரெட் (Signature Red) நிற கல்லினன் காரை தேர்வு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

உலகின் விலையுயர்ந்த காரை ஆச்சரிய பரிசாக வழங்கிய கணவர்: நெகிழ்ச்சியான தருணம் குறித்த வைரல் வீடியோ!

துபாய் தொழிலதிபரைப் போலவே கர்நாடக மாநிலத்திலும் ஓர் இளைஞர், அவரது ஆசை மனைவிக்காக ஓர் விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கியிருந்தார். இந்த காரின் விலையும் நம்மை வாயை பிளக்கும் வகையில் உள்ளது. இதுகுறித்த தகவலை கீழே காணலாம்.

உலகின் விலையுயர்ந்த காரை ஆச்சரிய பரிசாக வழங்கிய கணவர்: நெகிழ்ச்சியான தருணம் குறித்த வைரல் வீடியோ!

தன் அதீத காதலை வெளிப்படுத்தும் விதமாக, காதல் மனைவி மும்தாஜிக்காக தாஜ்மஹால் எனும் மாளிகையை கட்டினான் ஷாஜகான். ஆனால், தற்போதைய இளைஞர்களோ தங்களது காதலை வெளிப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு பிடித்தமான பரிசுகளை, சர்ப்ரைஸாக வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.

உலகின் விலையுயர்ந்த காரை ஆச்சரிய பரிசாக வழங்கிய கணவர்: நெகிழ்ச்சியான தருணம் குறித்த வைரல் வீடியோ!

அந்தவகையில், இந்திய இளைஞர் ஒருவர் உலகின் அதிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றான லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரை, அவரது மனைவிக்கு ஆச்சரிய பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்த வீடியோவினை ஆட்டோமொபிலி ஆர்டென்ட் என்ற தளம் வெளியிட்டுள்ளது. இந்த பாசமிகு தருணம் குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலகின் விலையுயர்ந்த காரை ஆச்சரிய பரிசாக வழங்கிய கணவர்: நெகிழ்ச்சியான தருணம் குறித்த வைரல் வீடியோ!

முன்னதாக, இதுபோன்று மனைவிக்கு காரை பரிசாக வழங்கும் நெகிழ்ச்சியான சம்பவங்கள் அண்மைக் காலங்களாக அதிக நடைபெற்று வருகின்றன. அதுகுறித்த பல்வேறு தகவலைகூட நாம் படித்திருப்போம். ஆனால், இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், தற்போது பரிசாக வழங்கப்பட்டிருக்கும் இந்த சூப்பர் கார், விலையுயர்ந்தது மட்டுமின்றி, இந்தியாவிலேயே மிக குறைவான எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

உலகின் விலையுயர்ந்த காரை ஆச்சரிய பரிசாக வழங்கிய கணவர்: நெகிழ்ச்சியான தருணம் குறித்த வைரல் வீடியோ!

அந்தவகையில், கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி, நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் குழு ஓர் செய்தியை வெளியிட்டிருந்தது. அதில், லம்போர்கினி நிறுவனத்தின், ஹூராகேன் வரிசையில் விற்பனையாகும் எல்பி 580-2 மாடலை கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வாங்கியதாக தகவல் வெளியடப்பட்டது (இதுகுறித்த செய்தியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்).

உலகின் விலையுயர்ந்த காரை ஆச்சரிய பரிசாக வழங்கிய கணவர்: நெகிழ்ச்சியான தருணம் குறித்த வைரல் வீடியோ!

இதில் சிறப்பானது என்னவென்றால், இந்த மாடல் காரை, இந்தியாவிலேயே வாங்கிய இரண்டாவது அவர் என்பதுதான். இவ்வாறு, பல்வேறு சிறப்புகளைப் பெற்ற சிறப்புகளைப் பெற்றதாக லம்போர்கினி நிறுவனத்தின் ஹூராகேன் மாடல் இருக்கின்றது. இதன்காரணமாகவே, தற்போது பரிசாக வழங்கப்பட்டிருக்கும் கார், சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

உலகின் விலையுயர்ந்த காரை ஆச்சரிய பரிசாக வழங்கிய கணவர்: நெகிழ்ச்சியான தருணம் குறித்த வைரல் வீடியோ!

கர்நாடாக மாநிலம் பெங்களூருவில்தான், இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. நிலுஃபர் ஷெரீஃப் என்ற இளைஞர்தான் அவரது மனைவிக்கு விலையுயர்ந்த, லம்போர்கினி ஹூராகேன் எல்பி 610-4 சூப்பர் காரை பரிசாக வழங்கியுள்ளார். இவர், புகழ்வாய்ந்த லா ஃபெம்மே நிறுவனத்தின் சிஇஓ ஆவார்.

உலகின் விலையுயர்ந்த காரை ஆச்சரிய பரிசாக வழங்கிய கணவர்: நெகிழ்ச்சியான தருணம் குறித்த வைரல் வீடியோ!

லம்போர்கினி நிறுவனத்தின் ஹூராகேன் எல்பி 610-4 மாடல் இந்தியாவில் ரூ. 3.7 கோடி என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால், இது பெங்களூரு ஆன்-ரோட்டில் ரூ. 4.8 கோடிக்கு விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

உலகின் விலையுயர்ந்த காரை ஆச்சரிய பரிசாக வழங்கிய கணவர்: நெகிழ்ச்சியான தருணம் குறித்த வைரல் வீடியோ!

ஹூராகேன் மாடலின் ஆரம்ப விலையே ரூ. 3 கோடியாக இருக்கின்றது. தற்போது பரிசாக வழங்கப்பட்டிருக்கும் ஹூராகேன் மாடல், டாப் வேரியண்ட்களில் ஒன்றாக இருக்கின்றது. லம்போர்கினி ஹூராகேன் மாடலின் எடைக் குறைப்பிற்காக கார்பன் ஃபைப்பர் மற்றும் அலுமினியத்தால் அதன் பாடி உருவாக்கப்பட்டுள்ளது. இது காருக்கு மிக லேசான எடையைக் கொடுப்பதுடன், மிக உறுதியானதாக இருக்கின்றது.

உலகின் விலையுயர்ந்த காரை ஆச்சரிய பரிசாக வழங்கிய கணவர்: நெகிழ்ச்சியான தருணம் குறித்த வைரல் வீடியோ!

அதேசமயம், இந்தியாவின் சாலைகளில் கணிசமான அளவில் லம்போர்கினி ஹூராகேன் கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ், இந்தியாவின் கரடு முரடான சாலைக்கு ஏதுவானதாக இருக்க 45மிமீ அளவிலான இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. இது, சற்று உயரமான வேகத்தடை மற்றும் பள்ளம் மேடுகளில் பயணிக்க உதவுகின்றது.

உலகின் விலையுயர்ந்த காரை ஆச்சரிய பரிசாக வழங்கிய கணவர்: நெகிழ்ச்சியான தருணம் குறித்த வைரல் வீடியோ!

லம்போர்கினி ஹூராகேன் எல்பி 610-4 மாடலில் 5.2 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் வி10 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 602 பிஎச்பி பவரையும், 560 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 0த்தில் இருந்து 100 கிமீ வேகத்தை வெறும் 3 விநாடிகளிலேயே தொட்டுவிடும். மேலும், இந்த எஞ்ஜினில் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இத்துடன், இந்த காரில் மூன்று விதமான டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை, அதன் பெயருக்கேற்ப பயண அனுபவத்தை வழங்கும். காதலின் வெளிப்பாடாக நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. முக்கியமாக இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வேகமாக பரவி வருகின்றது.

Most Read Articles
English summary
Dubai Businessman Gifts Rolls Royce Cullinan To Wife: Becomes First Indian To Buy This SUV. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X