பெட்ரோல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வதால் திடீர் முடிவு.. மக்களுக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு சலுகை..

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வதால், பொதுமக்களுக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு சலுகை வழங்க டெல்லி திடீரென முடிவெடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Arun

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வதால், பொதுமக்களுக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு சலுகை வழங்க டெல்லி திடீரென முடிவெடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வதால் திடீர் முடிவு.. மக்களுக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு சலுகை..

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதனால் தினசரி கார், டூவீலர்களை பயன்படுத்தி வரும் நடுத்தர வர்க்க மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாதந்தோறும் பெட்ரோல், டீசலுக்கு என பெருந்தொகையை அவர்கள் ஒதுக்க வேண்டியுள்ளது.

பெட்ரோல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வதால் திடீர் முடிவு.. மக்களுக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு சலுகை..

அத்துடன் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகை சுற்றுச்சூழலை வெகுவாக மாசுபடுத்தி வருகிறது. இந்த 2 பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக இருப்பது எலக்ட்ரிக் வாகனங்கள்தான். எனவே எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் மக்களை, மத்திய, மாநில அரசுகள் ஊக்கப்படுத்தி வருகின்றன.

பெட்ரோல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வதால் திடீர் முடிவு.. மக்களுக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு சலுகை..

இதன் ஒரு பகுதியாக ஃபேம் இந்தியா என்ற திட்டத்தின் கீழ், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. 2ம் கட்ட ஃபேம் இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி, வரும் செப்டம்பர் 7ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.

பெட்ரோல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வதால் திடீர் முடிவு.. மக்களுக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு சலுகை..

இந்த திட்டத்தின் கீழ், எலக்ட்ரிக் கார்களுக்கு ரூ.1.4 லட்சம் வரை மானியம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் எலக்ட்ரிக் டூவீலர்களுக்கு ரூ.1,800 முதல் ரூ.29,000 வரையிலும், எலக்ட்ரிக் 3 வீலர்களுக்கு (மூன்று சக்கர வாகனங்கள்) ரூ.3,300 முதல் ரூ.61,000 வரையிலும் மானியம் கிடைக்கும்.

பெட்ரோல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வதால் திடீர் முடிவு.. மக்களுக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு சலுகை..

இந்த சூழலில், எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த டெல்லி மாநில அரசும் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக விரிவான எலக்ட்ரிக் வாகன கொள்கையை தயாரிக்கும் பணியில் டெல்லி மாநில அரசு ஈடுபட்டுள்ளது.

பெட்ரோல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வதால் திடீர் முடிவு.. மக்களுக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு சலுகை..

இந்த பணிகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி விட்டன. வெகு விரைவில் மக்கள் முன்னிலையில், விரிவான எலக்ட்ரிக் வாகன கொள்கை அறிவிக்கப்படவுள்ளது. இதன்கீழ், எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் மக்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெட்ரோல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வதால் திடீர் முடிவு.. மக்களுக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு சலுகை..

இதில் ஒன்றுதான் சாலை வரியில் (Road Tax) இருந்து 100 சதவீத விலக்கு. அதாவது எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் மக்கள், ஒரு ரூபாய் கூட சாலை வரி கட்ட வேண்டியது இல்லை என்ற அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வதால் திடீர் முடிவு.. மக்களுக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு சலுகை..

சாலை வரி செலுத்த தேவை இல்லை என்பதால், எலக்ட்ரிக் கார்களை வாங்கும் மக்கள் ரூ.70 ஆயிரம் வரை சேமிக்க முடியும். எனவே இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்பு, எலக்ட்ரிக் கார்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

ரூ.9.99 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்! — Tamil DriveSpark
பெட்ரோல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வதால் திடீர் முடிவு.. மக்களுக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு சலுகை..

இதுதவிர பழைய டீசல் அல்லது பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த முன்வருபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்

அதிக அளவிலான சார்ஜிங் ஸ்டேஷன்களும் அமைக்கப்படவுள்ளன.

பெட்ரோல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வதால் திடீர் முடிவு.. மக்களுக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு சலுகை..

பெட்ரோல் பங்குகள் போல், சார்ஜிங் ஸ்டேஷன்கள் அதிக அளவில் இல்லாததே, எலக்ட்ரிக் வாகனங்களில் நிலவும் ஒரு குறையாக கருதப்படுகிறது. எனவே பெட்ரோல் பங்குகளின் எண்ணிக்கைக்கு நிகராக சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவுவதன் மூலம், இந்த பிரச்னையையும் நிவர்த்தி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எலெக்ரிக் மற்றும் மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு பெர்மட் எதுவும் தேவையில்லை இந்தியா முழுவதும் பெர்மிட் இல்லாமல் சுத்தலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளதை நீங்கள் அறிவீர்களா? அந்த செய்தியை கீழே படியுங்கள்..

எலக்ட்ரிக், மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு எந்தவித பெர்மிட்டும் தேவையில்லை.. மத்திய அரசு அதிரடி..

எலக்ட்ரிக், மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு எந்தவித பெர்மிட்டும் தேவையில்லை.. மத்திய அரசு அதிரடி..

எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களுக்கு அனைத்து விதமான பெர்மிட்களில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எலக்ட்ரிக், மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு எந்தவித பெர்மிட்டும் தேவையில்லை.. மத்திய அரசு அதிரடி..

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து கொண்டு வருகிறது.

எலக்ட்ரிக், மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு எந்தவித பெர்மிட்டும் தேவையில்லை.. மத்திய அரசு அதிரடி..

இதனால் சாமானிய மற்றும் மிடில் க்ளாஸ் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெளியிடும் புகை, சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டுள்ளது. இந்த 2 பிரச்னைகளுக்கும், எலக்ட்ரிக் வாகனங்கள்தான் ஒரே தீர்வாக கருதப்படுகிறது.

எலக்ட்ரிக், மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு எந்தவித பெர்மிட்டும் தேவையில்லை.. மத்திய அரசு அதிரடி..

எனவே இந்தியாவில் இயங்கும் அனைத்து வாகனங்களும், 2030ம் ஆண்டுக்குள் எலக்ட்ரிக் மயமாக வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. இது மிகவும் கடினமான விஷயமாக பார்க்கப்பட்டாலும், அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முழு மூச்சாக மேற்கொண்டு வருகிறது.

எலக்ட்ரிக், மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு எந்தவித பெர்மிட்டும் தேவையில்லை.. மத்திய அரசு அதிரடி..

எலக்ட்ரிக் வாகனங்களின் விலை மிகவும் அதிகம். இதனால் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. எனவே எலக்ட்ரிக் வாகனங்களை பொதுமக்கள் வாங்க வேண்டும் என்பதற்காக ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ், மானியம் வழங்கப்படுகிறது.

எலக்ட்ரிக், மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு எந்தவித பெர்மிட்டும் தேவையில்லை.. மத்திய அரசு அதிரடி..

ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் மானியம் வழங்கி, எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் பொதுமக்களை ஊக்குவிப்பதுடன், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியிலும், மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

எலக்ட்ரிக், மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு எந்தவித பெர்மிட்டும் தேவையில்லை.. மத்திய அரசு அதிரடி..

ஏனெனில் தற்போதைய நிலையில், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே உள்ளது. பெட்ரோல் பங்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லை.

எலக்ட்ரிக், மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு எந்தவித பெர்மிட்டும் தேவையில்லை.. மத்திய அரசு அதிரடி..

இதன் காரணமாகவும், எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் தயக்கம் நிலவி வருகிறது. எனவேதான் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

எலக்ட்ரிக், மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு எந்தவித பெர்மிட்டும் தேவையில்லை.. மத்திய அரசு அதிரடி..

எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, இவ்வாறு பல்வேறு முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் இன்று (செப்.6) வெளியாகியுள்ள ஓர் அறிவிப்பு, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

எலக்ட்ரிக், மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு எந்தவித பெர்மிட்டும் தேவையில்லை.. மத்திய அரசு அதிரடி..

எனவே அனைத்து எலக்ட்ரிக் வாகனங்கள், நிலைப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி), எத்தனால், மெத்தனால், உயிரி எரிபொருள் (Bio-Fuel) உள்ளிட்ட மாற்று எரிபொருட்களில் இயங்கும் கமர்ஷியல் வாகனங்களுக்கு அனைத்து விதமான கமர்ஷியல் பெர்மிட்களில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது.

எலக்ட்ரிக், மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு எந்தவித பெர்மிட்டும் தேவையில்லை.. மத்திய அரசு அதிரடி..

தேவையான அனைத்து வித பெர்மிட்களும் நீக்கப்பட்டுள்ளதால், வாகன உரிமையாளர்கள் மற்றும் கேப்ஸ் உள்ளிட்ட டிராவல்ஸ் நிறுவனங்களை நடத்தி வருபவர்களுக்கு இது நிச்சயமாக பெரிய பலனை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலக்ட்ரிக், மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு எந்தவித பெர்மிட்டும் தேவையில்லை.. மத்திய அரசு அதிரடி..

அத்துடன் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் விற்பனையும் அதிகரிக்கும். சியாம் எனப்படும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIAM-Society of Indian Automobile Manufacturers) மாநாடு இன்று நடைபெற்றது.

எலக்ட்ரிக், மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு எந்தவித பெர்மிட்டும் தேவையில்லை.. மத்திய அரசு அதிரடி..

எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் மாற்று எரிபொருளில் இயங்கும் கமர்ஷியல் வாகனங்களுக்கு, அனைத்து விதமான கமர்ஷியல் பெர்மிட்களில் இருந்தும் விலக்கு என்ற அறிவிப்பை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி சியாம் மாநாட்டில்தான் வெளியிட்டார்.

எலக்ட்ரிக், மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு எந்தவித பெர்மிட்டும் தேவையில்லை.. மத்திய அரசு அதிரடி..

பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்து கொண்டுள்ளது. கச்சா எண்ணெய்யை அதிகளவில் இறக்குமதி செய்யும் சர்வதேச நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

எலக்ட்ரிக், மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு எந்தவித பெர்மிட்டும் தேவையில்லை.. மத்திய அரசு அதிரடி..

ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளின் அதிகப்படியான வரி விதிப்பும் ஒரு காரணம் என்பதை மறுத்து விட முடியாது. எனவே பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் வெகு நாட்களாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட மராஸ்ஸோ காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் கீழே காணலாம்..

Most Read Articles
English summary
Electric Cars May Get Exemption From Road Tax. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X