மின்சார கார்கள் விலை குறைவாக இருக்கும் என்று கனவிலும் நினைக்க வேண்டாம்: மாருதி சுஸுகி எச்சரிக்கை..!!
மின்சார கார்கள் விலை குறைவாக இருக்கும் என்று கனவிலும் நினைக்க வேண்டாம்: மாருதி சுஸுகி எச்சரிக்கை..!!
Recommended Video

சுவாசிக்கும் காற்று சுத்தமாக இருக்கவேண்டும் என்ற விழிப்புணர்வு உலகமெங்கும் பரவி வருகிறது.
சுற்றுச்சூழல் மீது பொதுமக்களுக்கு ஏற்பட்டு வரும் ஆர்வம், அவர்கள் பயன்படுத்தும் எல்லா பொருட்களிலும் எழ தொடங்கியுள்ளது.

காற்று மாசு அடைவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, அதிக மாசுபாடு ஏற்படுத்தும் எரிபொருள் கொண்ட வாகனங்களை.
அவற்றை விட்டுவிட்டு மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை உருவாக்க பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.

மின்சார ஆற்றல் பெற்ற வாகனங்களை உருவாக்கும் பணி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இருசக்கர வகானங்களை தவிர, பிஎம்டபுள்யூ, வால்வோ உட்பட கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஹைஃபிரிட் ரக கார்களை தயாரித்து வருகின்றன.

இந்தியாவில் மின்சார வாகன பயன்பாடு அதிக விமர்சினத்தை பெற்று வருகின்றன. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மின்சார ஆற்றல் கொண்ட வாகனங்கள், எரிபொருள் திறன் பெற்ற ஊர்திகளை விட அதிக மாசு ஏற்படுத்தும் என்று கூறுகிறது.

இந்நிலையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்திய தலைவர் பேசும் போது, மின்சார கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதில் எந்த அர்த்தமுமில்லை என்று கூறியுள்ளார்.
Trending On DriveSpark Tamil:

சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் பேசிய மாருதி சுஸுகி தலைவர் ஆர்.சி. பார்க்கவா, பேட்டரி திறன் இயங்கும் கார்கள் பெட்ரோல், டீசல் கார்களை விட விலை அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், மின்சார ஆற்றலுக்கான பேட்டரிகளை குறைவான விலையில் உற்பத்தி செய்வது தான் இந்தியாவிற்கு சாதகமாக அமையும் என்று கூறினார்.

தொடர்ந்து, ஆரி.சி. பார்க்கவா பேட்டரியில் இயங்கும் திறன் பெற்ற கார்கள் விலை குறைய இன்னும் நீண்ட காலம் ஆகும் என்பது தான் நிதர்சனம். ஆனால் அதற்குள் காற்று மாசுபாடு அதிகரித்து விடும் என்று பேசினார்.

மின்சார கார் பயன்பாட்டில் நுகர்வோரின் எதிர்பார்ப்புகள் பற்றி ஆய்வுகள் எதுவுமில்லை. மேலும் அதற்கான கட்டமைப்புகளை நாடு முழுவதும் உருவாக்க பெரிய முயற்சிகள் எடுக்க வேண்டும்.

நுகர்வோரின் எதிர்பார்ப்பு என்பது பேட்டரி கார்களில் என்னென்ன வசதிகள் மற்றும் ஆற்றல் ஆகியவை தான் பிரதானமாக இருக்கும்.
Trending On DriveSpark Tamil:

அதை சார்ந்த தொழில்நுட்பங்களுக்கு வாகன நிறுவனங்கள் தங்களை தீவிரமாக தயார்படுத்திக்கொள்ள வேண்டி உள்ளது என ஆர்.சி. பார்க்கவா தனது கருத்துக்களை முன்வைத்தார்.

2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் வாகன துறை அனைத்தும் மின்சார ஆற்றலுக்கு மாற்றவேண்டும் என்பது இந்திய அரசின் முயற்சியாக உள்ளது.

ஆனால் சமீபத்தில் மக்களைவியில் பேசிய கனரக தொழில்துறை அமைச்சர் பாபுல் சூப்போரியா, 2030ம் ஆண்டிற்குள் வாகன தேவைகளை மின்சாரத்திற்கு மாற்ற தற்போது திட்டங்கள் ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளார்

இந்நிலையில் டொயோட்டா நிறுவனத்துடன் இணைந்து குஜராத்தில் ஒரு மின்சார கார் பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலையை துவக்க மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது.
Trending DriveSpark YouTube Videos


Click it and Unblock the Notifications