Just In
- 1 hr ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 1 hr ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 1 hr ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 2 hrs ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்தீட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Movies Baakiyalakshmi: பாக்கியா அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்.. திரும்ப திரும்ப கேட்ட பழனிச்சாமி!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஒரே ட்விட்டில் எதிர்காலத்தை இழந்தது டெஸ்லா… எலான் மஸ்க் பதவி காலி…
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள எலான் மஸ்க் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதிய ஒரு ட்விட்டால் இன்று டெஸ்லா நிறுவனத்தின் எதிர்காலமே கேள்வி குறியாகவுள்ளது. எலான் மஸ்கை த
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள எலான் மஸ்க் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதிய ஒரு ட்விட்டால் இன்று டெஸ்லா நிறுவனத்தின் எதிர்காலமே கேள்வி குறியாகவுள்ளது. எலான் மஸ்கை தலைமை பதவியில் இருந்து விலக சொல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் தானியங்கி எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனம் டெஸ்லா, உலகிலேயே சிறப்பான தானியங்கி கார்களை இந்நிறுவனம் தான் விற்பனை செய்து வருகிறது.
மேலும் இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவிற்கு போட்டியாக விண்வெளி ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் என்பவர் இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தின் டெஸ்லா நிறுவனத்தை முழுவதும் தானே சொந்தமாக்கி கொள்ளப்போவதாகவும், அதன் பங்குகள் அனைத்தையும் தானே வாங்கி கொள்ளப்போவதாகவும், மூதலீட்டாளர்கள் ஒரு பங்கை 420 டாலர் என்ற விலையில விற்று விடும்படியும் அறிவித்திருந்தார்.
இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பல்வேறு தரப்புகளிடம் இருந்து இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் பின் சுமார் ஒரு வார காலம் முதலீட்டார்கள், மற்றும் நிபுணர்களிடம் ஆலோசனை நடத்திய மஸ்க் தனது கருத்தை வாபஸ் வாங்கி கொண்டார்.
இதற்கிடையில் டெஸ்லா நிறுவனங்களில் பங்குகள் பெரும் இறக்கத்தை சந்தித்தது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும்பாலானோர் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். மஸ்க் ட்விட்டரில் வெளியிட்ட கருத்தால் தான் பங்குகள் பெரும் அளவில் குறைந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து பங்கு வர்த்தகம் மற்றும் பரிவரத்தனை கோர்ட்டில் எலான் மஸ்க் மீது வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்கும் படி அவரிடம் கோர்ட்ட கேட்டது. ஆனால் அவர் அதற்கு எந்த விதமான பதிலையும் அனுப்பவில்லை.
இதையடுத்து கோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின் படி எலான் மஸ்கிற்கு 40 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ 291 கோடி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபாராத தொகையை பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவர்களின் பங்கு மதிப்பின் படி பகிர்ந்து அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும் எலான் மஸ்க் 45 நாட்களுக்குள் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து இறங்க வேண்டும் என்றும், அடுத்த 3 ஆண்டுகள் அவர் தலைமை பொறுப்பிற்கு வரக்கூடாது என்றும், அவர் அந்நிறுவனத்தின் நிர்வாக கமிட்டியில் மட்டும் இருக்கலாம் என உத்தரவிட்டுள்ளது.
மேலும் அவர் எந்த பொது வர்த்தக நிறுவனத்திற்கும் தலைமை வகிக்ககூடாது எனவும் கோர்ட்ட உத்தரவிட்டுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்காக அந்நிறுவனமே மஸ்கை தவிர இரண்டு பேரை தலைமை பொறுப்பில் நியமித்துக்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டள்ளது.
இது குறித்து எலான் மஸ்க் கூறுகையில் : "உண்மை, வெளிப்படைத்தன்மை முதலீட்டாளர்களின் சிறந்த நலன், ஆகியவற்றை மனதில் வைத்தே அந்த முடிவை எடுத்தேன், இந்த காலகட்டம் எனது வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. எனினும் கோர்ட் உத்தரவை மதித்து தலைமை பொறுப்பில் இருந்து விலகுகிறேன்" என கூறினார்.
தற்போது மஸ்க் விலகுவதாக அறிவித்துள்ளது டெஸ்லா நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அவரின் முடிவு மீண்டும் டெஸ்லாவின் பங்குகளை பெரும் அளவில் பாதிக்கும் எனவும் வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டெஸ்லா நிறுவனம் தானியங்கி கார்களை தயாரிப்பதில் பெரும் புரட்சியே செய்துவருகிறது. இன்றும் கூட டெஸ்லாவிற்கு போட்டியாக தாங்களும் கார்களை தயாரித்துவிட பல பெரிய நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன.
ஆனால் இன்றளவும் டெஸ்லாவிற்கு போட்டியே இல்லாமல் மார்கெட்டில் தனிக்காட்டு ராஜாவாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் எலான் மஸ்க் தான் தானியங்கி கார்களின் அவர் தனது குழுவுடன் பல்வேறு சோதனைகள் செய்து அவர் புகுத்திய தொழிற்நுட்பம் தான் இன்று அந்நிறுவனத்தின் எதிர்கால உலகின் சிம்ம சொப்பனமாக மாறும் நிறுவனம் என்ற கனவை பலர் மத்தியில் விதைத்துள்ளது.
அவர் தலைமை பொறுப்பில் இருந்து இறக்கியபின் அடுத்து தலைமை பொறுப்பிற்கு வருபவர்கள் அந்நிறுவனத்தை தொடர்ந்து முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றால் தான் எதிர்காலத்தில் பெரும் இலக்கை அந்நிறுவனத்தால் எட்ட முடியும்.
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
-
சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!