கார் எஞ்சின் ஆயில் ஓவர்ஃப்பில்லிங் ஆனால் என்ன செய்யவேண்டும்..?? பிரச்சனையை தீர்க்க எளிய வழிகள்..!!
வாகன எஞ்சின்களில் ஏற்படும் உராய்வு, எஞ்சின் பாகங்கள் வெப்பமடைதல், பிசின் உருவாவது போன்றவற்றை தவிர்க்கவே வாகனங்களில் ஆயில் பயன்படுத்தப்படுகிறது.

வாகனங்களின் இயக்கத்தை போலவே, ஆயில் பயன்பாடு மற்றும் அதன் பராமரிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
ஆயிலின் அளவு மற்றும் அதன் இருப்பை அறிய நம்மில் பலர் சில எளிய செயல்பாடுகளை பின்பற்றுவது உண்டு.

அதில் ஒன்றுதான், மெல்லிய குச்சியின் மூலம் ஆயிலின் இருப்பை கணக்கிடுவது. ஆயிலின் டேங்கில் குச்சியை விடுவதற்கு முன்னதாக அதை சுத்தப்படுத்தி பயன்படுத்துவது முக்கியம்.

டேங்கிற்குள் குச்சியை விட்டு அதை வெளியே எடுத்து பார்க்கும் போது ஆயிலின் குறியீடு குச்சியின் மேல்புறத்தில் இருந்தால், பிரச்சனை எதுவுமில்லை. ஆனால் கரை அடிப்பாகத்தில் இருந்தால் டேங்கை ரீஃப்பில் செய்யவேண்டியது அவசியம்.

ரீஃப்பில் செய்யும் போதும் நாம் கவனிக்க வேண்டிய செயல்கள் உள்ளன. அதாவது ஆயிலின் பயன்பாடு வாகனத்தின் செயல்பாட்டிற்கு ஏற்றவாறு தான் இருக்க வேண்டும். அதை மீறி ஓவர்ஃப்பில்லிங் செய்யப்பட்டால் வாகனத்தின் செயல்பாடு ஆட்டம் கண்டுவிடும்.

ஆயிலின் இருப்பு அதிகரித்தால், எஞ்சினுள் இருக்கும் கிராங்க்ஷாஃப்ட் ஆயிலால் நிரம்பிவிடும். தவிர எஞ்சின் சேம்பருக்குள் காற்று ஊடுருவவும் வாய்ப்புள்ளது. கிராங்ஷாஃப்ட் வேகமாக இயங்கும் போது காற்று + ஆயில் கலந்து அதனால் நுரை உருவாகும். நுரை உருவானால் அது எஞ்சினுக்குள் உராய்வை ஏற்படுத்தும்.

இப்படி நடக்கும் போது எஞ்சினுக்குள் வெப்பம் அதிகரிக்கும். இதை நாம் முன்பே கண்டறியாவிட்டால் எஞ்சின் லாக்காகிவிடும். பிறகு மொத்த வாகனத்தின் செயல்பாடும் அதோகதி தான்.
கம்பஷன் சேம்பருக்குள் ஆயிலின் அளவு அதிகரித்து அதனால் வெப்பம் உண்டாகி அதன் பிறகு அது நீராவியாக மாறி அதிலிருந்து புகையாக வெளியேறும்.

உங்களது வாகனம் அதிகப்படியான வெண்ணிற புகையை (நீலம் அல்லது சாம்பல் நிற கலைவையாக) வெளியேற்றினால், எஞ்சினுக்குள் ஆயிலின் அளவு அதிகரித்துள்ளது என்பது பொருள்.

இதுபோல வெண்ணிற புகை அதிகளவில் உங்களின் கார்களிலிருந்து வெளியேறினால், அதை நன்றாக கவனித்து உங்களது வாகன எஞ்சினை சிறிது நேரத்திற்கு இயக்கத்திலேயே வையுங்கள்.

எஞ்சின் கொஞ்சம் சூடான பிறகு, ஒரு குச்சியை டேங்கிற்குள் விட்டு ஆயிலின் இருப்பை சரிபாருங்கள். ஆயிலின் குறியீடு குச்சியின் மேற்புறத்தில் தெரிந்தால் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று அர்த்தம்.

ஆயிலின் அளவு அதிகரித்தால், அதை வெளியேற்றுவதற்கான மூடிக்கொண்ட வசதி எஞ்சினின் அடியில் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த தேவை பெரும்பாலான கார்களில் உள்ளது.

ஒருவேளை அந்த மூடி வலிமையாக இருந்து, திறக்க முடியவில்லை என்றால் ஸ்பேனர் மற்றும் சில டூல்களை பயன்படுத்தலாம். இது பெரும்பாலும் நல்ல பயனையே தரும்.

ஆயில் என்பது சற்று திரவ நிலையில் இருந்தாலும் அது திடமாக இருக்கும். தரையில் அது ஒழுகினால் அந்த கரை அவ்வளவு எளிதில் போகாது. இதன் காரணமாக எப்போதும் ஆயிலை வெளியேற்றும் போது, அது ஒழுகி வெளிவரும் இடத்தில் ஒரு பேன் அல்லது குவளையை வைத்து விடுங்கள்.

வாகனங்களில் ஆயிலின் தேவை இன்றியமையாதது. வாகனத்தின் தேவையை கருதிஎஞ்சின்கள் அதற்கு ஏற்றவாறு செயல்படும் தன்மையை கொண்டது.
அதனால் அதை முறையாக பயன்படுத்துவது வாகன உரிமையாளர்களின் கடமை. இதை மனதில் வைத்து ஆயில் சார்ந்த செயல்பாடுகளில் எப்போது கவனம் கொள்வது அவசியம்.


Click it and Unblock the Notifications








