போலீஸ் எஸ்பியை போனில் அழைத்து மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி... இந்த வயதிலேயே அசட்டு தைரியம்...

போலீஸ் எஸ்பியை தொலைபேசியில் அழைத்து மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி வசமாக சிக்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்கள் உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.

போலீஸ் எஸ்பியை தொலைபேசியில் அழைத்து மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி வசமாக சிக்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்கள் உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.

இளம் ஐஏஎஸ் அதிகாரி கைது... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கௌதம புத்தா நகர் (ரூரல்) போலீஸ் எஸ்பியாக, வினீத் ஜெய்ஸ்வால் என்பவர் பணியாற்றி கொண்டுள்ளார். இவருக்கு சமீபத்தில், தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. தொலைபேசியில் பேசிய நபர் தன்னை ஒரு ஐஏஎஸ் அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டார்.

இளம் ஐஏஎஸ் அதிகாரி கைது... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

ஆரம்பம் முதலே மிகவும் கடுமையாகவே பேசி கொண்டிருந்த அந்த நபர், தனது நண்பர் ஒருவருக்கு, போலீஸ் மூலம் சான்றிதழ் ஒன்று கிடைக்க வேண்டி இருப்பதாகவும், அதனை உடனடியாக வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும், எஸ்பி வினீத் ஜெய்ஸ்வாலிடம் வலியுறுத்தினார்.

இளம் ஐஏஎஸ் அதிகாரி கைது... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

எஸ்பி வினீத் ஜெய்வாலுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், மிரட்டல் விடுக்கும் தொனியிலுமேதான், அந்த நபர் பேசி கொண்டிருந்தார். என்றாலும் தொலைபேசியில் பேசிய நபர் மீது, எஸ்பி வினீத் ஜெய்ஸ்வாலுக்கு சற்றே சந்தேகம் ஏற்பட்டது.

இளம் ஐஏஎஸ் அதிகாரி கைது... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

எனவே அழைப்பு வந்த தொலைபேசி எண்ணின் விபரங்களை கண்டறியும்படி, போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இதன்பேரில், எஸ்பி வினீத் ஜெய்ஸ்வாலிடம் பேசிய நபர் யார்? அவர் எங்கே இருந்து பேசினார்? என்ற தகவல்களை கண்டறியும் பணியில், சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டனர்.

இளம் ஐஏஎஸ் அதிகாரி கைது... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இதன் முடிவில், எஸ்பி வினீத் ஜெய்ஸ்வாலிடம் தொலைபேசியில் பேசிய நபரை போலீசார் கண்டறிந்து விட்டனர். உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத் பகுதியை சேர்ந்த மணி தியாகி என்ற நபர்தான், எஸ்பி வினீத் ஜெய்ஸ்வாலிடம் தொலைபேசியில் பேசியிருந்தார்.

இளம் ஐஏஎஸ் அதிகாரி கைது... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

மணி தியாகி தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில், சூப்பர்வைசராக பணியாற்றி கொண்டிருக்கிறார். பிஏ மட்டுமே படித்துள்ள மணி தியாகி, எஸ்பி வினீத் ஜெய்வாலிடம், தன்னை ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக அறிமுகம் செய்து கொண்டிருந்தார்.

இளம் ஐஏஎஸ் அதிகாரி கைது... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

''நான் சொல்லும் பணியை உடனடியாக முடித்து கொடுங்கள்'' என எஸ்பி வினீத் ஜெய்ஸ்வாலுக்கு அவர் அழுத்தம் கொடுத்தார். எனவே மணி தியாகியை உடனடியாக கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இளம் ஐஏஎஸ் அதிகாரி கைது... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

அதே உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் இருந்துதான், தொலைபேசி மூலமாக மணி தியாகி பேசியிருந்தார். எனவே படல்பூர் போலீசார் உடனடியாக அங்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் மணி தியாகியை உடனடியாக கைதும் செய்து விட்டனர்.

இளம் ஐஏஎஸ் அதிகாரி கைது... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

மணி தியாகியிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 21 வயது மட்டுமே நிரம்பியுள்ள மணி தியாகி, ஐஏஎஸ் அதிகாரி போல் நடித்து, பலரையும் ஏமாற்றியுள்ளார். குறிப்பாக போலீசார், அரசு அதிகாரிகள் பலரும் அவரிடம் ஏமாந்திருப்பதாக கூறப்படுகிறது.

இளம் ஐஏஎஸ் அதிகாரி கைது... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

தனது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்காக மணி தியாகி இதனை செய்து வந்துள்ளார். அதாவது தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு, அரசு அலுவலகங்களில் ஏதாவது வேலை ஆக வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து மிரட்டுவதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார்.

இளம் ஐஏஎஸ் அதிகாரி கைது... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

ஆனால் இதற்காக பணம் எதையும் ஒருபோதும் பெற்றதில்லை என போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார். இந்த வகையில், தனது நெருங்கிய நண்பர் ஒருவருக்கு உதவி செய்ய போய்தான், தற்போது போலீசாரிடம் மணி தியாகி கையும் களவுமாக சிக்கி கொண்டுள்ளார்.இவர்கள் இருவரும் தளபதி படத்தில் வரும் ரஜினி-மம்முட்டி போல் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

இளம் ஐஏஎஸ் அதிகாரி கைது... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

உண்மைக்கும், போலிக்குமான வித்தியாசம் வெகு வேகமாக குறைந்து கொண்டே வரும் காலம் இது. போலிகளை உண்மை ஏற்று நம்ப வைத்து, நம்மை ஏமாற்றுவதற்காக பெரிய கூட்டமே இங்கு திரிந்து கொண்டிருக்கிறது.

இளம் ஐஏஎஸ் அதிகாரி கைது... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

ஐஏஎஸ் அதிகாரி போன்று, தான் ஒரு போலீஸ் உயரதிகாரி என்று சொல்லி ஏமாற்றும் கூட்டமும் இங்கு இருக்கவே செய்கிறது. எனவே உண்மையான போலீஸ் அதிகாரிகளின் வாகனங்கள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

இளம் ஐஏஎஸ் அதிகாரி கைது... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

போலீஸ் உயர் அதிகாரிகளினுடைய கார்களின் நம்பர் பிளேட்களுக்கு அருகே, நட்சத்திரங்கள் அடங்கிய ஸ்டார் பிளேட்கள் (Star Plate) இடம்பெற்றிருக்கும். போலீஸ் அதிகாரிகளின் பதவிகளை பொறுத்து, இந்த ஸ்டார் பிளேட்கள் மாறுபடும்.

இளம் ஐஏஎஸ் அதிகாரி கைது... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

டிஜிபி எனப்படும் காவல்துறை தலைமை இயக்குனரின் (DGP-Director General of Police) காரில், ஊதா நிற பின்னணியில், தங்க நிறத்தில் 3 நட்சத்திரங்கள் அடங்கிய ஸ்டார் பிளேட் இடம்பெற்றிருக்கும்.

இளம் ஐஏஎஸ் அதிகாரி கைது... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

அதே நேரத்தில், ஏடிஜிபி எனப்படும் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனரின் (ADGP-Addl. Director General of Police) காரிலும், 3 நட்சத்திரங்கள் அடங்கிய ஸ்டார் பிளேட்தான் பொருத்தப்பட்டிருக்கும். இந்த நட்சத்திரங்களும் தங்க நிறத்தில்தான் இருக்கும்.

இளம் ஐஏஎஸ் அதிகாரி கைது... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

ஆனால் காவல்துறை தலைமை ஆய்வாளரின் (Inspector General of Police) காரில், ஊதா நிற பின்னணியில், 2 நட்சத்திரங்கள் மட்டும் அடங்கிய ஸ்டார் பிளேட் இடம்பெற்றிருக்கும். இந்த 2 நட்சத்திரங்களும் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

இளம் ஐஏஎஸ் அதிகாரி கைது... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

அதே சமயம் காவல்துறை துணை தலைமை ஆய்வாளரின் காரில் (Deputy Inspector General of Police), ஊதா நிற பின்னணியில், ஒரு நட்சத்திரம் மட்டுமே அடங்கிய ஸ்டார் பிளேட் பொருத்தப்பட்டிருக்கும்.

இளம் ஐஏஎஸ் அதிகாரி கைது... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

என்றாலும் காவல்துறை தலைமை ஆய்வாளரின் ஸ்டார் பிளேட்டில் இருப்பதை போன்று, காவல்துறை துணை தலைமை ஆய்வாளரின் காரில் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்டார் பிளேட்டில் இடம்பெற்றிருக்கும் நட்சத்திரமும் வெள்ளை நிறத்தில்தான் இருக்கும்.

இளம் ஐஏஎஸ் அதிகாரி கைது... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இதில், குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், அனைத்து ஸ்டார் பிளேட்களும் ஊதா நிற பின்னணியில்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒடிசா மாநில போலீசாரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Flags And Star Plates Of Police Higher Officials Cars. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X