Just In
- 43 min ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 2 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 4 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 7 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Movies கனகாவின் காதலர் இவர்தான்.. போலீஸில் மாட்டிவிட பார்த்தார்.. செய்யாறு பாலு சொன்ன டாப் சீக்ரெட்
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மத்திய அரசு நினைத்தால் பெட்ரோல் விலை ரூ.25 வரை குறைக்க முடியும்: ப.சி
மத்திய அரசு நினைத்தால், பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.25 வரை குறைக்க முடியும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நினைத்தால், பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.25 வரை குறைக்க முடியும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து முடியும் வரை, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், கர்நாடக சட்டப் பேரவைக்கான தேர்தல் நிறைவடைந்தவுடன் முதல் காரியமாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. அதுவும் தினசரி கணிசமாக உயர்த்தப்பட்டதால், வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார்.
அதில், கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், மத்திய அரசுக்கு ஆதாயம் எவ்வளவு தெரியுமா? ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலிலும் ரூ.15 வரையில் ஆதாயம் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு லிட்டரிலும் கூடுதலாக ரூ.10 கலால் வரி விதிக்கப்படுகிறது.
|
இதனால், ஒவ்வொரு லிட்டரிலும் மத்திய அரசுக்கு ரூ.25 வரை ஆதாயம் கிடைத்து வருகிறது. டீசலிலும் இதே கதைதான். நியாயமாக இது மக்களுடைய பணம். பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக குறைக்க முடியும்.. ஆனால், மத்திய அரசு செய்யாது. வெறும் ரூ.1 அல்லது ரூ.2 வரை குறைத்து மக்களை ஏமாற்றும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டு வந்தால் விலைகள் குறையும் என்கிறார் மஹாராஷ்டிர முதலமைச்சர். அவருடைய கட்சியின் மத்திய அரசு இதனை செய்ய வேண்டும் என்று அவர் வற்புறுத்துவாரா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.48 வரையிலும், டீசலுக்கு ரூ.15.33 வரையிலும் கலால் வரியை மத்திய அரசு வசூலிக்கிறது. இதுதவிர, பெட்ரோல், டீசலுக்கு மாநிலங்கள் வாட் வரியை விதிக்கின்றன. இதனால், பெட்ரோல், டீசல் மீதான வரி மிக அதிகமாக இருக்கிறது. மேலும், மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.
நம்மிடருந்து பெட்ரோல், டீசலை வாங்கும் நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளைவிடவும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கிறது. இதனால், எல்லையோர மக்கள் அந்நாட்டுக்கு படை எடுத்து வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால், விலைவாசியும் வெகுவாக அதிகரித்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலையிலும் கணிசமாக உயர்வு காணப்படுகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக முடிவு எடுத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பதே அனைவரிம் கோரிக்கையாக உள்ளது.
ஒருவேளை பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்குள் கொண்டு வரப்பட்டால், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.45 என்ற விலையிலும், டீசல் விலை ரூ.35 என்ற விலையிலும் விற்பனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், மத்திய அரசு ஒப்புக்கொண்டாலும், மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவிக்கும்.
"பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரக்கூடாது. மாநிலத்தின் வரி வருவாயை பாதிக்கும்," என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் விலை நிலவரத்தை இங்கே க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
டீசல் விலை நிலவரத்தை இங்கே க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!