ஆர்டிஓ அலுவலகங்களில் தலைவிரித்தாடும் ஊழல்.. டிரைவிங் லைசென்ஸ் முறைகேடுகளை தடுக்க அரசு அதிரடி
டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அரசு அதிரடியான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அரசு அதிரடியான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலக அளவில், சாலை விபத்துக்களின் காரணமாக அதிக உயிர் பலி ஏற்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு 1.50 லட்சம் பேர், சாலை விபத்துக்களின் காரணமாக பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.

அதாவது இந்தியாவில் ஒரு நாளைக்கு பல லட்சக்கணக்கானோர் வாகனங்களில் பயணம் செய்தாலும், சுமார் 400 பேர் வீடு திரும்புவது இல்லை. இந்தியாவில் இயற்கைக்கு மாறான மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க சாலை விபத்துக்களே மிக முக்கிய காரணம்.

இந்தியாவில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது மிக மிக எளிதான விஷயம். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழல் காரணமாக, பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் எளிதாக டிரைவிங் லைசென்ஸ் பெற்று விடலாம்.

தகுதி இல்லாத நபர்களின் கைகளுக்கு டிரைவிங் லைசென்ஸ் கிடைப்பதும் விபத்துக்களுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. எனவே டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்து வருகிறது.

இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், ''இந்தியாவில் தற்போது டிரைவிங் லைசென்ஸ் பெறுவது மிக எளிதாக உள்ளது. இதனை பயன்படுத்தி கொண்டு ஒரு நபரே, பல்வேறு மாநிலங்களில் டிரைவிங் லைசென்ஸ் பெற்று விடுகிறார்.

இதனை தடுக்க டிரைவிங் லைசென்ஸ்கள் தொடர்பாக டேட்டாபேஸை (Database) தயாரிக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. டிரைவிங் லைசென்ஸ் தொடர்பான விபரங்கள் தொகுக்கப்படுவதால், ஒரே நபர் பல டிரைவிங் லைசென்ஸ்களை பெறுவது தடுக்கப்படும்'' என்றார்.

இதனிடையே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் டிரைவர் இல்லாமல் இயங்கும் டிரைவர்லெஸ் (Driverless) கார்கள் பிரபலமடைந்து வருகின்றன. ஆனால் இந்தியாவில் டிரைவர்லெஸ் கார்களை அனுமதிக்கும் கேள்விக்கே இடமில்லை என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், ''இந்திய இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை டிரைவர்லெஸ் கார்கள் பறித்து விடும். எனவே இந்தியாவில் டிரைவர்லெஸ் கார்களை அனுமதிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை'' என்றார்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதால், பலர் வேக வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இந்த சூழலில், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ஏத்தர் 450ன் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications