இனி புதிய கார்களில் துரு படிக்காத இரும்பு…. மத்திய அரசு ஆலோசனை..
இந்தியாவில் இனி தயாரிக்கப்படும் கார்களில் பயன்படுத்தப்படும் இரும்புகளில் சுமார் 70 சதவீதத்தை கிளாவனிசேஷன் செய்ய மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. காரின் வாழ்நாள் மற்றும் பாதுகாப்பை அதிகரிக்க அரசு இ
இந்தியாவில் இனி தயாரிக்கப்படும் கார்களில் பயன்படுத்தப்படும் இரும்புகளில் சுமார் 70 சதவீதத்தை கிளாவனிசேஷன் செய்ய மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. காரின் வாழ்நாள் மற்றும் பாதுகாப்பை அதிகரிக்க அரசு இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2015ம் ஆண்டு மும்பை ஐஐடி சார்பில் இந்தியாவில் துரு பிடித்தல் காரணமாக கார்களுக்கு ஏற்படும் வாழ்நாள் குறைவு மற்றும் பாதுகாப்பு குறைவு குறித்து ஆய்வு நடந்தது. இதில் இந்தியாவில் விற்பனையாகும் கார்களின் உள்ள இரும்புகள் விரைவில் துரு பிடிப்பதால் கார்கள் தங்கள் வாழ்நாளையும், பாதுகாப்பையும் உலக சாரசரியவிட குறைவான காலத்தில் இழப்பதாக ஆய்வு முடிவு வெளியானது.

இந்த ஆய்வு குறித்த அறிக்கை மத்திய அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து மத்திய அமைச்சகம் புனேவில் ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோஷியேஷன் ஆப் இந்தியாவிடம் கருத்து கேட்டது.

அதில் இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் சராசரியாக பயன்படுத்தப்படும் மொத்த இரும்புகளில் 30 சதவீதம் தான் துரு பிடிக்காத பிடி கிளாவனிசேஷன் செய்யப்பட்ட இரும்புகள் எனவும் 70 சதவீதம் விரைவில் துரு பிடிக்கும் படியான இரும்புகள் எனவும் தகவல்கள் வெளியானது.

உலகளவில் சராசரியாக கார்கள் தயாரிக்க பயன்படுத்தும் இரும்புகளில் 50 சதவீத இரும்புகள் கிளாவினிசேஷன் செய்யப்பட்ட இரும்புகள், ஆனால் இந்தியாவில் சராசரிக்கும் குறைவான அளவிலேயே கிளாவினிசேஷன் செய்யப்பட்ட இரும்புகள் பயன்படுத்தப்படுகிறது.

இதையடுத்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவில் இனி விற்பனைக்கு வரும் கார்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் இரும்புகளில் 70 சதவீதம் கிளாவினிசேஷன் செய்யப்பட்ட இரும்புகள் தான் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மத்திய அரசு தற்போது பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆலோசனைகளை பெற்று வருகின்றனர். மேலும் காரின் டெஸ்ட் செய்யும் ஏஜென்ஸிகளிடம் இது குறித்து கருத்துகேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிளாவினிசேஷன் என்பது சாதார இரும்பை ஜிங்க் எனும் வேதியல் முலாம் கொண்டு பூசுவதாகும். இந்த முறையால் காரில் உள்ள இரும்புகள் எளிதில் துரு பிடித்து விடாது. இரும்புகள் துரு பிடிக்க காரணமாக இருக்கும் காரணிகளை இந்த ஜிங்க் முலாமே தடுத்து விடும்.

இவ்வாறாக கிளாவினிசேஷன் செய்யப்பட்ட இருப்புகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டால் காரின் உழைப்பும், வாழ்நாள் மற்றும் தரம் அதிகமாக மேலும் தற்போது துரு பிடித்த காரில் விபத்து ஏற்பட்டால் அதில் பாதிப்புகள் அதிக அளவில் இருக்கும்

இந்த துரு பிடிக்காத இரும்பை பயன்படுத்துவதால், காரில் உள்ள இருப்புகள் துரு பிடிக்காமல் குறைவான பாதிப்பை ஏற்படுத்தும், சில நேரங்களில் இது உயிரை காக்கும் அளவிற்கு பாதிப்பை குறைக்கலாம். மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுக்க இதுவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்


Click it and Unblock the Notifications








