கொள்ளையடிக்கும் டிரைவிங் ஸ்கூல்களுக்கு ஆப்பு; விபத்தை குறைக்க அரசு புதிய யோசனை

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துக்கள் கடந்த 2017ம் ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டை விட 3-4 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும், வரும் காலத்தில் சாலை விபத்துக்களை குறைக்க லைசன்ஸ் எடுப்பதில் உள்ள முறைகேடுகளை க

By Balasubramanian

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துக்கள் கடந்த 2017ம் ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டை விட 3-4 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும், வரும் காலத்தில் சாலை விபத்துக்களை குறைக்க லைசன்ஸ் எடுப்பதில் உள்ள முறைகேடுகளை குறைக்கவும், சிறப்பான டிரைவிங் ஸ்கூல் அமைக்க நடவடிக்கை எடுக்கவும் அரசு முயற்சித்து வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொள்ளையடிக்கும் டிரைவிங் ஸ்கூல்களுக்கு ஆப்பு; விபத்தை குறைக்க அரசு புதிய யோசனை

சர்வதேச சாலைகளுக்கான பெடரேஷன் சார்பில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் யுத்விர் சிங் மாலிக் கலந்து கொண்டு பேசினார்.

கொள்ளையடிக்கும் டிரைவிங் ஸ்கூல்களுக்கு ஆப்பு; விபத்தை குறைக்க அரசு புதிய யோசனை

அவர் பேசுகையில் : " கடந்தாண்டு மொத்தம் 5 லட்சம் விபத்துக்கள் நடந்துள்ளன. அதில் 1,50,000 விபத்துக்களில் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் பெரும்பாலனோர் 20-35 வயதிற்கு உட்பட்டவர்கள் தான்.

கொள்ளையடிக்கும் டிரைவிங் ஸ்கூல்களுக்கு ஆப்பு; விபத்தை குறைக்க அரசு புதிய யோசனை

விபத்து நடந்த பகுதிகளில் அதிகமான விபத்துக்களுக்கு காரணம் அனுமதிக்கப்படாத இடத்தில் மிடியன்களை கடப்பது, ரோட்டில் போதுமான அளவு எச்சரிக்கை பலகைகள் இல்லாதது. இருக்கும் எச்சரிக்கை பலகையில் உள்ள குறியீடுகள் என்ன சொல்கிறது என்பதை டிரைவர்கள் புரிந்து கொள்ளாதது உள்ளிட்ட காரணங்கள் தான் அதிகம் இருக்கிறது.

கொள்ளையடிக்கும் டிரைவிங் ஸ்கூல்களுக்கு ஆப்பு; விபத்தை குறைக்க அரசு புதிய யோசனை

இதில் எச்சரிக்கை பலகை குறியீடுகளை வாகன ஓட்டிகள் புரிந்து கொள்ள வில்லை என்றால் லைசன்ஸ் வழங்கும் போது அவர்களுக்கு போதுமான அளவு டெஸ்ட் எடுக்கப்படுகிறதா என்பதை பார்க்க வேண்டும். இதன் மூலம் இதை குறைக்கலாம்.

கொள்ளையடிக்கும் டிரைவிங் ஸ்கூல்களுக்கு ஆப்பு; விபத்தை குறைக்க அரசு புதிய யோசனை

2017ம் ஆண்டின் முதற் பாதியில் மொதா்தம் 2,36,458 விபத்துக்கள் நடந்துள்ளது. அதே காலகட்டத்தில் கடந்தாண்டில் அதாவது 2016ம் ஆண்டு முதல் பாதியில் 2,43,870 விபத்துக்கள் தான் நடந்துள்ளது. இது 3 சதவீதம் குறைவாகும்.

அதில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2016ம் ஆண்டு 79,354 ஆக இருந்தது. கடந்தாண்டு 75,583 ஆக குறைந்துள்ளது.

கொள்ளையடிக்கும் டிரைவிங் ஸ்கூல்களுக்கு ஆப்பு; விபத்தை குறைக்க அரசு புதிய யோசனை

2016ம் ஆண்டு முழவதும் நடந்த சாலை விபத்தை விட 2015நடந்த விபத்துக்களை எண்ணிக்கையை ஒப்பிடும் போது 4.1 சதவீதம் விபத்து குறைந்துள்ளது. ஆனால் விபத்தில் 2016ம் ஆண்டு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,50,785 ஆக இருந்த நிலையில் 2017ம் ஆண்டு 1,46,133 அதாவது 3.2 சதவீதமாக அதிகரித்திருந்தது.

கொள்ளையடிக்கும் டிரைவிங் ஸ்கூல்களுக்கு ஆப்பு; விபத்தை குறைக்க அரசு புதிய யோசனை

இந்த ரிப்போர்ட்ட எல்லாம் போலிஸிடம் பதிவான வழிக்குகள் மற்றும் அவர்கள் ஆதாரத்துடன் சேகரித்த தகவல்களை வைத்து மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. போலிசிடம் புகார் செய்யப்படாத விபத்துக்கள் இந்த கணக்கில் அடங்காது.

கொள்ளையடிக்கும் டிரைவிங் ஸ்கூல்களுக்கு ஆப்பு; விபத்தை குறைக்க அரசு புதிய யோசனை

தற்போது மோட்டார் வாகன நடைமுறை சட்ட திருத்தவம் வரைவில் ராஜ்ய சபாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அது நிறைவேற்ப்பட்டால் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் அதில் வாகனங்கள் குறித்த சில முக்கியமான விதிகளை கொண்டு வருகிறோம்.

கொள்ளையடிக்கும் டிரைவிங் ஸ்கூல்களுக்கு ஆப்பு; விபத்தை குறைக்க அரசு புதிய யோசனை

ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு மாறுபவர்கள் இரண்டாவது மாநிலத்தில் நிரந்தரமாக அவர்கள் வாகனத்தை பயன்படுத்த விரும்பினால் அதற்கான அவர்கள் அந்த மாநிலத்தில் அவர்களின் வாகனத்தை பதிவு செய்ய முடிவும்,அப்பொழுது தானாக முதல் மாநிலத்தில் உள்ள பதிவு ரத்து செய்யப்படும்.

கொள்ளையடிக்கும் டிரைவிங் ஸ்கூல்களுக்கு ஆப்பு; விபத்தை குறைக்க அரசு புதிய யோசனை

தற்போது வாகனங்களை வாங்கியபின்பு வாடிக்கையாளர்கள் தான் தங்கள் வாகனத்தை ஆர்.டி.ஓவில் பதிவு செய்கின்றனர். அந்த முறையை மாற்றி இனி டீலர்களே வாகனத்தை ஆர்டிஓ அலுவகத்தில் பதிவு செய்து பின்னர் அதையாருக்கு விற்றார்கள் என்ற தகவலை மட்டும் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு சொன்னால் போதும். இது போன்ற சில சட்ட திருத்தங்கள் அதில் உள்ளது.

கொள்ளையடிக்கும் டிரைவிங் ஸ்கூல்களுக்கு ஆப்பு; விபத்தை குறைக்க அரசு புதிய யோசனை

இது மட்டும் இல்லாமல் சாலை விதிகளை மீறுபவர்களுக்கான அபாராத தொகைய அதிகரிப்பது, டிரைவிங் ஸ்கூல் நடத்துவதற்கான விதிமுறைகளை கடுமையாக்குவது மற்றும் லைசன்ஸ் பெறுவதில் வெளிப்படையான மற்றும் சுலபமான பணி பறிமாற்றம் உள்ளிட்ட வதிகளை அதில் அடங்கும்.

கொள்ளையடிக்கும் டிரைவிங் ஸ்கூல்களுக்கு ஆப்பு; விபத்தை குறைக்க அரசு புதிய யோசனை

டிரைவிங் ஸ்கூல்கள் இது சரியாக அவர்கள் கடமைகளை செய்யவில்லை. இதில் தற்போது பெரிய நிறுவனங்கள் இறங்கிவிட்டன. தற்போது மாருதி சுஸூகி நிறுவனம் இந்தியா முழவதும் 450 டிரைவிங் ஸ்கூல்களை நிறுவியுள்ளது, ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களும் இதற்கான முயற்சியில்தற்போது களம் இறங்கியுள்ளனர். தற்போது உள்ள டிரைவிங் ஸ்கூல்களை விட இந்நிறுவனங்கள் நடத்தும் டிரைவிங் ஸ்கூல்களில் சிறப்பாக டிரைவிங் கற்று தரப்படுகிறது.

கொள்ளையடிக்கும் டிரைவிங் ஸ்கூல்களுக்கு ஆப்பு; விபத்தை குறைக்க அரசு புதிய யோசனை

மத்திய அரசு இது போன்ற தரமான டிரைவிங் ஸ்கூல்களை இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களில் குறைந்தபட்சம் ஒரு பள்ளியையாவது அமைக்க வேண்டும் என முயற்சித்து வருகிறது. தற்போது இவ்வாறு தரமான அமைக்கப்படும் டிரைவிங் ஸ்கூல்களுக்கு அரசு சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

கொள்ளையடிக்கும் டிரைவிங் ஸ்கூல்களுக்கு ஆப்பு; விபத்தை குறைக்க அரசு புதிய யோசனை

அந்த டிரைவிங் ஸ்கூலில் டிரைவிங் படித்தவர்கள், லைசன்ஸ் பெறும் போது வாகனத்தை ஒட்டி காண்பிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் தங்கள் அந்த டிரைவிங் ஸ்கூலில் வழங்கப்பட்ட சான்றிதழை காட்டினாலே போதும். தற்போது இந்தியாவில் ஓடும் 20 சதவீதமான ஒட்டுநர்களுக்கு லைசன்ஸ்சே இல்லை என ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
India witnessed a minor drop in road accidents and fatalities during 2017. Read in Tamil
Story first published: Saturday, July 14, 2018, 11:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X