Just In
- 4 min ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 13 min ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 2 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 3 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- Sports DC vs GT : டாப் ஆர்டரில் அசத்திய அக்சர் படேல்.. ஜடேஜாவை பொளக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரூ.7,000 கோடியில் சென்னை ஆலையை விரிவாக்கம் செய்யும் ஹூண்டாய்!
ரூ.7,000 கோடி முதலீட்டில் சென்னையில் புதிய மின்சார கார் உற்பத்தி ஆலையை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அமைக்க உள்ளது. மின்சார கார்களுக்கான உதிரிபாகங்களை இறக்குமதி செய்து சென்னை ஆலையில் அசெம்பிள் செய்ய ஹூ
ரூ.7,000 கோடி முதலீட்டில் சென்னையில் புதிய மின்சார கார் உற்பத்தி ஆலையை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அமைக்க உள்ளது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய கார் சந்தையில் இரண்டாவது பெரிய நிறுவனமாக விளங்குகிறது. இந்தநிலையில், மின்சார கார்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருவதையடுத்து, இந்தியாவில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலைய அமைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, தமிழக முதல்வர் பழனிச்சாமியை ஹூண்டாய் நிர்வாக இயக்குனர் கூ மற்றும் துணைத் தலைவர் தத்தா ஆகியோரே நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர். இதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஹூண்டாய் துணைத் தலைவர் தத்தா கூறுகையில்," சென்னையிலுள்ள கார் தொழிற்சாலையின் உற்பத்தி திறனை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.
மேலும், மின்சார கார் உற்பத்தி பிரிவு அமைப்பதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். வரும் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த புதிய ஆலையின் மூலமாக 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் ஹூண்டாய் கார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இதன் அருகிலேயே புதிய மின்சார கார் தொழிற்சாலையும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜனவரி மாதத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த பின்னர், ஆலை அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்த ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.
சென்னை கார் ஆலையின் உற்பத்தி திறனை ஆண்டுக்கு 1,00,000 யூனிட்டுகள் அதிகரிக்க ஹூண்டாய் முடிவு செய்துள்ளது. இதில், 50,000 கார்கள் வெளிநாடுகளில் இருந்து முக்கிய உதிரிபாகங்களை இறக்குமதி செய்து இங்கு அசெம்பிள் செய்யும் பணிகள் செய்யப்படும்.
இதன்படி, மின்சார கார்களுக்கான உதிரிபாகங்களை இறக்குமதி செய்து சென்னை ஆலையில் அசெம்பிள் செய்ய ஹூண்டாய் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அடுத்த ஆண்டு ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய கோனா மின்சார கார் முதலில் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும். பின்னர் இந்த காருக்கான முக்கிய பாகங்கள் இறக்குமதி செய்து சென்னை ஆலையில் அசெம்பிள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!