Just In
- 2 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 3 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 5 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 5 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கைவிரல் ரேகை மூலமாக காரை திறக்கும் நுட்பத்தை வெளியிட்ட ஹூண்டாய்!
கார்களில் புதுமையான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்றன. இருப்பினும், ஹைடெக் திருடர்களால் அது போதிய பலன் தராத நிலை சமயத்தில் ஏற்பட்டு விடுகிறது. தற்போது கார் சாவி இருந்தால் உரிமையாளர் இல
மொபைல்போன்களில் கை விரல் ரேகையை பயன்படுத்தி திரையை திறப்பது போல, உரிமையாளரின் விரல் ரேகையை வைத்து கார் கதவுகளை திறக்கும் வசதியை ஹூண்டாய் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த இருக்கிறது.
கார்களில் புதுமையான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்றன. இருப்பினும், ஹைடெக் திருடர்களால் அது போதிய பலன் தராத நிலை சமயத்தில் ஏற்பட்டு விடுகிறது. தற்போது கார் சாவி இருந்தால் உரிமையாளர் இல்லாமலேயே காரை திறந்து ஸ்டார்ட் செய்துவிட முடியும்.
இந்த நிலையில், உரிமையாளர் மட்டுமே காரை திறந்து ஸ்டார்ட் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை ஹூண்டாய் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதாவது, கை விரல் ரேகையை அடையாளம் கண்டு, கார் கதவு திறக்கும் நுட்பத்தை ஹூண்டாய் தனது கார்களில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
முதலாவதாக, ஹூண்டாய் சான்டா ஃ பீ எஸ்யூவியில் இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதுவும் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே இந்த கை விரல் ரேகை மூலமாக கார் கதவுகளை திறக்கும் தொழில்நுட்பம் கொண்ட சான்டா பீ எஸ்யூவி விற்பனை செய்யப்பட இருக்கிறது.
அதன்பிறகு, பிற நாடுகளிலும் இந்த தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும். வெறும் கார் கதவுகளை திறப்பதற்கு மட்டுமல்ல, காரை ஸ்டார்ட் செய்வதற்கும் இது உதவியாக இருக்கும். அத்துடன், காரின் மெமரி ஃபங்ஷன் அடிப்படையில் இருக்கையையும் அட்ஜெஸ்ட் செய்துவிடும்.
மேலும், கை விரல் உரியவருக்கு ஏற்றவாறு பதிவு செய்யப்பட்டிருக்கும் விதத்தில், ஸ்டீயரிங் வீல், சைடு மிரர்களையும் சரியான கோணத்தில் திருப்பி வைத்துவிடும். பதிவின் அடிப்படையில் சரியான அளவில் காருக்குள் வெப்பநிலையையும் பராமரிக்கும்.
கார் கதவில் கைப்பிடிக்கும் அருகில் இருக்கும் சென்சாரில் விரல் ரேகையை பதிவு செய்தால், கார் கதவு திறந்து கொள்ளும். இது நிச்சயம் உரிமையாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பு வசதியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொழில்நுட்பம் மிகவும் உயரிய பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருப்பதாகவும், இதன் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை திருடர்களால் முறியடித்து திறக்க முடியாது என்றும் ஹூண்டாய் கூறுகிறது. சாதாரண சாவி மற்றும் ஸ்மார்ட் சாவியை விட இந்த கை விரல் ரேகை சாவி தொழில்நுட்பம் மிக உயரிய பாதுகாப்பை வழங்குமாம்.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!