Just In
- 30 min ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 1 hr ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 2 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 8 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
Don't Miss!
- News கோவையில் மறுவாக்குப்பதிவு நடத்தணும்.. 1 லட்சம் வாக்குகளை காணோம்.. அண்ணாமலை பரபர புகார்!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
புத்தாண்டு கொண்டாட்டத்தில் இதை செய்தால் நடக்கப்போவது இதுதான்... போலீசார் விடுத்த திடுக் எச்சரிக்கை
புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு தமிழக போலீசார் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு தமிழக போலீசார் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
2018ம் ஆண்டு நிறைவடைந்து, 2019ம் ஆண்டு பிறக்கவுள்ளது. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களை கட்டியுள்ளன. இந்தியாவில் இன்று (டிசம்பர் 31) மாலை முதல், புத்தாண்டு கொண்டாட்டங்கள் தீவிரமடைய தொடங்கும்.
குறிப்பாக நள்ளிரவு 12 மணியளவில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் உச்சகட்டத்தை எட்டும். புத்தாண்டு பிறப்பதற்கு முந்தைய நாள், அனைவரும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது என்பது வழக்கமான ஒன்றாகதான் உள்ளது.
ஆனால் ஒரு சிலர், மது அருந்தி விட்டு அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டி கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இன்னும் ஒரு சிலர் மது போதையில் பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசங்களில் ஈடுபடுகின்றனர்.
இதனால் அவர்களுக்கு மட்டுமின்றி, சாலையில் பயணிக்கும் இதர வாகன ஓட்டிகளுக்கும் பிரச்னை ஏற்படுகிறது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில், சமீப காலமாக இத்தகைய கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
ஆனால் இம்முறை அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். குறிப்பாக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்குதான் கடும் தண்டனை காத்திருக்கிறது.
சாலை விபத்து மற்றும் குற்றங்கள் இல்லாத புத்தாண்டு தினமாக இருக்க வேண்டும் என்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன்படி இன்று இரவு சென்னையில் மட்டும் சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
சென்னையில் மட்டும் மொத்தம் 368 இடங்களில் நாளை (ஜனவரி 1) வாகன தணிக்கை நடத்தப்படவுள்ளது. மைலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தி.நகர், அடையார் உள்ளிட்ட இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனிடையே குடிபோதையில் வாகனங்களை இயக்கும் நபர்களின் லைசென்ஸை ரத்து செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் அவர்களின் பெயர் குற்ற ஆவண காப்பகத்தில் சேர்க்கப்படும்.
எனவே பாஸ்போர்ட் மற்றும் விசா வெரிபிகேஷனுக்கு அவர்களால் தடையில்லா சான்றிதழை அவ்வளவு எளிதாக பெற முடியாது. இதுதவிர குடிபோதையில் வாகனங்களை ஓட்டும் நபர்களுடைய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு விடும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...