Just In
- 1 hr ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 1 hr ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
- 1 hr ago என்ன மேடம்... ஹர்பஜன் சிங் மாதிரி இருக்கீங்க!! விசித்திரமான கெட்-அப்பில் ஸ்கூட்டரில் சென்ற பெண் - வீடியோ!
- 4 hrs ago எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
Don't Miss!
- News ரூ.150 கோடி மதிப்பு! 1200 பேருக்கு இலவச அறுவை சிகிச்சை! மாஸ் காட்டும் பாரிவேந்தர்
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Finance ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு 54% உயரும்.. அமெரிக்க நிறுவனத்தின் பலே கணிப்பு..!
- Technology வந்துடுச்சு.. இந்த Samsung போனுக்கு பல பேர் வெயிடிங்.. 2 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே, IP67 ரேட்டிங், 5G ஆதரவு!
- Movies சீதனமாக சொகுசு கார்.. ரோபோ சங்கர் மனசே மனசு.. இந்திரஜாவின் திருமண பரிசு இவ்ளோ காஸ்ட்லியா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
நவம்பர் 4ம் தேதி முதல் டாலர் செல்லாது.. இறங்கி அடிக்கும் மோடியால் மிரண்டு போன அமெரிக்கா..
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது உங்களுக்கு எல்லாம் தெரிந்த விஷயம்தான். இந்நிலையில் மற்ற உலக நாடுகளையும் ஈரானிடம் இருந்து பிரிக்க அமெரிக்கா காய் நகர்த்தி வருகிறது.
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது உங்களுக்கு எல்லாம் தெரிந்த விஷயம்தான். இந்நிலையில் மற்ற உலக நாடுகளையும் ஈரானிடம் இருந்து பிரிக்க அமெரிக்கா காய் நகர்த்தி வருகிறது.
ஈரானில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஒவ்வொரு பொருளுக்கும் காலக்கெடு நிர்ணயித்து அந்த காலகட்டத்திற்கு பிறகு அந்த பொருளை மற்ற நாடுகள் ஈரானிடம் இருந்து வாங்க கூடாது எனவும், அவ்வாறு வாங்கினால் அந்த நாடு மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும், அத்துடன் அந்த வணிகத்தை டாலர் கணக்கில் செயல்படுத்த தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா மிரட்டி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 6ம் தேதியே பெரும்பாலான பொருட்களை ஈரானில் இருந்து மற்ற நாடுகள் இறக்குமதி செய்வதை நிறுத்தி கொள்ள அமெரிக்கா வழங்கிய காலக்கெடு முடிந்து விட்டது. எண்ணெய் தயாரிப்புகள் மற்றும் வங்கி துறை பரிமாற்றங்களுக்கு நவம்பர் 4ம் தேதி வரை அமெரிக்கா கெடு விதித்துள்ளது.
இதற்கிடையில் இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் ஈரானிடம் இருந்து 2018-19ம் நிதியாண்டில் 9 மில்லியன் டன்கள் அதாவது மாதம் 0.75 மில்லியன் டன் எண்ணெய் வாங்க ஒப்பந்தமிட்டுள்ளது. குறிப்பாக வரும் நவம்பர் மாதம் மட்டும் இந்தியன் ஆயில் கார்பரேஷன் மற்றும் மங்களூர் ரீபைனரி மற்றும் பெட்ரோகெமிக்கல் லிமிடெட் 1.25 மில்லியன் டன் எண்ணெய்யை இறக்குமதி செய்தாக வேண்டும்.
இதற்கிடையில் அமெரிக்காவின் தடை, இந்தியாவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஈரானிடம் இருந்து எண்ணெயை வாங்கவில்லை என்றால் இந்தியாவில் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை பல மடங்கு அதிகரிக்கும். அமெரிக்காவை எதிர்த்து ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்தால் அமெரிக்காவின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியது வரும்.
இந்நிலையில் இந்தியா ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை அமெரிக்கா விரும்பவில்லை. இதன் காரணமாகவே கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா குறித்து கிண்டலான விமர்சனங்களை அமெரிக்கா அதிபர் டிரம்ப் செய்திருந்தார்.
தற்போது நவம்பர் 4ம் தேதிக்கு பிறகு அமெரிக்கா விதிக்கவுள்ள தடை அமலுக்கு வருவதால் அன்று முதல் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை டாலர் மதிப்பீட்டில் செய்ய முடியாது. இதற்காக இந்தியா ஈரானுடன் இந்திய ரூபாய் மதிப்பிலேயே வர்த்தகம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் ஒப்புக்கொண்டதாக நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வர்த்தகத்தை யூகோ வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி வழியாக செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. தற்போது இந்தியா ஐரோப்பிய வங்கி வழியாக இந்த வர்த்தகத்தை யூரோ மதிப்பில் செய்து வருகிறது. இது வரும் நவம்பர் மாதம் முதல் தடை செய்யப்படுவதால் இந்த முடிவை இந்தியா எடுத்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதமும் இது போன்ற தடை விதிக்கப்பட்டபோது இந்தியா துருக்கி வங்கி மூலம் இந்த பரிவர்த்தனையை மேற்கொண்டது. ஆனால் அந்த சமயங்களில் பாதி தொகையை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடிந்தது. எஞ்சிய தொகையை அந்த தடை தளர்த்தப்பட்ட பின் 2015ம் ஆண்டு செலுத்தப்பட்டது.
இதற்கிடையில் கோதுமை, சோயாபீன்ஸ், மற்றும் நுகர்வோர் பொருட்களை ஈரானிற்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்து அதற்கு பலனாக கச்சா எண்ணெயை பெறுவதற்காகவும் ஒரு புறத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா இவ்வளவு தீவிரம் காட்டுவதற்கு முக்கிய காரணம் இறக்குமதியாகும் கச்சா எண்ணெய்க்கு ஈரான் சுமார் 60 நாட்கள் கழித்தே பணம் வாங்குகிறது. சவுதி அரேபியா, குவைத், ஈராக், நைஜிரியா மற்றும் அமெரிக்காவிடம் வர்த்தகம் செய்யும் போது இந்த வசதி இல்லை.
இந்தியாவில் அதிக அளவில் கச்சா எண்ணெ இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் ஈரான் 3வது இடத்தில் உள்ளது. முதலாவதாக சவுதி அரேபியாவும், இரண்டாவதாக ஈராக்கும் உள்ளன. இதற்கு முன்னர் சவுதி அரேபியாவிற்கு அடுத்து ஈரான்தான் இருந்தது. ஆனால் அப்பொழுது அமெரிக்கா விதித்த தடைக்கு பின்பு 2013-14 மற்றும் 2014-15ம் ஆண்டுகளில் முறையே 11 மில்லியன் டன் மற்றும் 10.95 மில்லியன் டன் என வர்த்தகத்தை குறைத்து கொண்டது.
அதன் பின் 2015-16ம் ஆண்டில் இந்தியா மீண்டும் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகரித்தது. அந்தாண்டில் 12.7 மில்லியன் டன் எண்ணெயை வாங்கியது. அதற்கு அடுத்த ஆண்டில் நேரடியாக 27.2 மில்லியன் டன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது.
தற்போது நவம்பர் முதல் பெட்ரோலுக்கு வங்கி வர்த்தம் தடைபடும். அப்பொழுது வாங்கப்பட்ட பெட்ரோலை இந்தியாவிற்கு கொண்டு வரும் போக்குவரத்து பெரும் சிக்கலாக அமையும். தற்போது ஈரான் நாட்டின் டேங்கர்களிலேயே இவை கொண்டு வரப்படுகின்றன.
எனினும் வாங்குபவர் வழங்கும் பணத்திற்கு விற்பனை செய்பவர்தான் கச்சா எண்ணெய்யை வாங்குபவர் சொல்லும் இடத்திற்கு கொண்டுவருவது, அதற்கான இன்சூரன்ஸ், அனைத்தும் அடங்கும். மத்திய அரசு இன்னும் சில நாட்களில் ஈரானிடம் பெட்ரோலை வாங்குவது குறித்து முடிவு செய்யவுள்ளது. அதன் பின்தான் இது குறித்த தெளிவான எதிர்காலம் தெரியும்.