மோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி? பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..

மோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி செய்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் நடைபெற்று வரும் அரசியல் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி செய்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் நடைபெற்று வரும் மெகா அரசியல் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மீண்டும் ஓங்க தொடங்கிய அரபு நாடுகளின் கை.. மோடி தீட்டும் திட்டங்கள் உடனடியாக வேலை செய்யுமா?

பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் நாடுகள் ஒருங்கிணைந்து ஓபெக் (OPEC-Organization of the Petroleum Exporting Countries) என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன.

மீண்டும் ஓங்க தொடங்கிய அரபு நாடுகளின் கை.. மோடி தீட்டும் திட்டங்கள் உடனடியாக வேலை செய்யுமா?

மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா, ஈராக், ஈரான், குவைத், கத்தார் உள்பட மொத்தம் 15 நாடுகள் ஓபெக் கூட்டமைப்பில் உறுப்பினர்களான உள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையை நிர்ணயம் செய்வதில் ஓபெக் கூட்டமைப்பின் கையே ஓங்கியுள்ளது.

மீண்டும் ஓங்க தொடங்கிய அரபு நாடுகளின் கை.. மோடி தீட்டும் திட்டங்கள் உடனடியாக வேலை செய்யுமா?

இந்த சூழலில், சர்வதேச சந்தையில் சமீப காலமாக கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

மீண்டும் ஓங்க தொடங்கிய அரபு நாடுகளின் கை.. மோடி தீட்டும் திட்டங்கள் உடனடியாக வேலை செய்யுமா?

மக்கள் தொகை அடிப்படையில் 2வது மிகப்பெரிய நாடான இந்தியா, தனது கச்சா எண்ணெய் தேவையில் 83 சதவீதத்தை இறக்குமதியின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்து கொள்கிறது. இதில், 85 சதவீத கச்சா எண்ணெய் ஓபெக் கூட்டமைப்பிடம் இருந்துதான் வாங்கப்படுகிறது.

மீண்டும் ஓங்க தொடங்கிய அரபு நாடுகளின் கை.. மோடி தீட்டும் திட்டங்கள் உடனடியாக வேலை செய்யுமா?

இப்படியான சூழலில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்து வருவதால், இந்தியா கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஏனெனில் இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது.

உங்கள் செல்போனில் டெலிகிராம் செயலி இருக்கிறதா? உடனடியாக எங்கள் சேனலில் இணையுங்கள்..!

மீண்டும் ஓங்க தொடங்கிய அரபு நாடுகளின் கை.. மோடி தீட்டும் திட்டங்கள் உடனடியாக வேலை செய்யுமா?

அதே நேரத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத வகையில் சரிந்து வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே கச்சா எண்ணெய் விலையை குறைக்கும்படி, ஓபெக் கூட்டமைப்பிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மீண்டும் ஓங்க தொடங்கிய அரபு நாடுகளின் கை.. மோடி தீட்டும் திட்டங்கள் உடனடியாக வேலை செய்யுமா?

இந்த சூழலில், இந்தியா மற்றும் ஓபெக் கூட்டமைப்பு இடையேயான வருடாந்திர கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில், ஓபெக் கூட்டமைப்பின் பொது செயலாளர் முகமது சனுசி பர்கிந்தோவை, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்தித்து பேசினார்.

மீண்டும் ஓங்க தொடங்கிய அரபு நாடுகளின் கை.. மோடி தீட்டும் திட்டங்கள் உடனடியாக வேலை செய்யுமா?

அப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது குறித்த பிரச்னையை, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுப்பினார். இதன் காரணமாக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் சந்திக்கும் சவால்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

மீண்டும் ஓங்க தொடங்கிய அரபு நாடுகளின் கை.. மோடி தீட்டும் திட்டங்கள் உடனடியாக வேலை செய்யுமா?

கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடுகள் மற்றும் அதனை வாங்கும் நாடுகள் என இருவருக்கும் பாதிப்பு இல்லாதவாறு பொறுப்பான வகையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தினார்.

மீண்டும் ஓங்க தொடங்கிய அரபு நாடுகளின் கை.. மோடி தீட்டும் திட்டங்கள் உடனடியாக வேலை செய்யுமா?

உலக அளவில் கச்சா எண்ணெய்யை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்த சூழலில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காகவே பெரும் தொகையை இந்தியா செலவிட வேண்டியுள்ளது.

மீண்டும் ஓங்க தொடங்கிய அரபு நாடுகளின் கை.. மோடி தீட்டும் திட்டங்கள் உடனடியாக வேலை செய்யுமா?

இதனால் இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. அதனை மீட்டு எடுக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. அத்துடன் பெட்ரோல், டீசல் விலையும் உயர்வதால் சாமானிய மக்கள் கடும் நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளனர்.

மீண்டும் ஓங்க தொடங்கிய அரபு நாடுகளின் கை.. மோடி தீட்டும் திட்டங்கள் உடனடியாக வேலை செய்யுமா?

தமிழக தலைநகர் சென்னையில் இன்றைய நிலவரப்படி (அக்டோபர் 19) ஒரு லிட்டர் பெட்ரோல் 85.63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஒரு லிட்டர் டீசல் 79.82 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டுள்ளது.

மீண்டும் ஓங்க தொடங்கிய அரபு நாடுகளின் கை.. மோடி தீட்டும் திட்டங்கள் உடனடியாக வேலை செய்யுமா?

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒரு லிட்டருக்கு ரூ.1.50 என்ற வீதத்தில் மத்திய அரசு குறைத்தது. இதுதவிர கூடுதலாக ஒரு ரூபாயை குறைக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டு கொண்டது.

மீண்டும் ஓங்க தொடங்கிய அரபு நாடுகளின் கை.. மோடி தீட்டும் திட்டங்கள் உடனடியாக வேலை செய்யுமா?

ஆக மொத்தம் பெட்ரோல், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைந்தது. ஆனால் இது ஒன்றும் பெரிய அளவிலான விலை குறைப்பு அல்ல. அத்துடன் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர தொடங்கியது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீது அதிருப்தி அலை உருவாகியுள்ளது.

மீண்டும் ஓங்க தொடங்கிய அரபு நாடுகளின் கை.. மோடி தீட்டும் திட்டங்கள் உடனடியாக வேலை செய்யுமா?

இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் பரபரப்பு எழுந்துவிடும். அதற்குள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால், மத்தியில் ஆளும் பாஜகவிற்கு கடும் பின்னடைவு ஏற்பட்டு விடும்.

மீண்டும் ஓங்க தொடங்கிய அரபு நாடுகளின் கை.. மோடி தீட்டும் திட்டங்கள் உடனடியாக வேலை செய்யுமா?

இந்த சூழலில்தான் கச்சா எண்ணெய் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபெக் கூட்டமைப்பிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஆனால் ஓபெக் கூட்டமைப்பு அவ்வப்போது இது போன்று முரண்டு பிடிப்பது என்பது தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

மீண்டும் ஓங்க தொடங்கிய அரபு நாடுகளின் கை.. மோடி தீட்டும் திட்டங்கள் உடனடியாக வேலை செய்யுமா?

அதாவது கச்சா எண்ணெய் உற்பத்தியை ஓபெக் கூட்டமைப்பு அடிக்கடி குறைத்து விடுகிறது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயரும் சூழல் உருவாகிறது. அதாவது கச்சா எண்ணெய்க்கு செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறது.

மீண்டும் ஓங்க தொடங்கிய அரபு நாடுகளின் கை.. மோடி தீட்டும் திட்டங்கள் உடனடியாக வேலை செய்யுமா?

எனவே இறக்குமதியை வெகுவாக குறைத்து உள்நாட்டிலேயே கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா தீவிரமாக முயன்று வருகிறது. அத்துடன் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டையும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

மீண்டும் ஓங்க தொடங்கிய அரபு நாடுகளின் கை.. மோடி தீட்டும் திட்டங்கள் உடனடியாக வேலை செய்யுமா?

இதன்மூலமாக கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாக குறைக்கலாம் என்பது மத்திய அரசின் திட்டம். இதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் பொதுமக்களுக்கு ஃபேம் இந்தியா என்ற திட்டத்தின் கீழாக மத்திய அரசு மானியமும் வழங்கி வருகிறது.

மீண்டும் ஓங்க தொடங்கிய அரபு நாடுகளின் கை.. மோடி தீட்டும் திட்டங்கள் உடனடியாக வேலை செய்யுமா?

ஆனால் இந்த திட்டங்களை எல்லாம் வெற்றிகரமாக செயல்படுத்தி முடிக்க நீண்ட காலம் பிடிக்கும். எனவே தற்போதைக்கு இந்த பிரச்னையை பிரதமர் நரேந்திர மோடி எப்படி எதிர்கொள்ள போகிறார்? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

எங்களது டெலிகிராம்சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்..!

மோடி ஆட்சியை கவிழ்க்க அரபு நாடுகள் சதி? பெட்ரோல் விலை உயர்வின் பின்னணியில் மெகா அரசியல்..

அதே நேரத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை வீழ்த்த அரபு நாடுகள் கையில் எடுத்துள்ள ஆயுதம்தான் கச்சா எண்ணெய் விலை உயர்வு என்ற பேச்சும் பரவலாக அடிபடுகிறது.

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ஏத்தர் 450ன் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

Article Published On: Friday, October 19, 2018, 17:00 [IST]
English summary
India Urges OPEC To Reduce Crude Oil Price. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+