Just In
- 1 hr ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- News "க்ளீன் ஸ்வீப் வெற்றி.." ஜெகன் மோகன் ரெட்டி அசத்தல் பிளான்.. ,ஸ்டன் ஆன ஆந்திர எதிர்க்கட்சிகள்
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.. சட்டப்பூர்வ பாதுகாப்பு அளிக்கும் மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல்
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்யும் நபர்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்புடன் பொருளாதார உதவிகளும் கிடைக்க வழிவகை செய்யும் நாட்டின் முதல் சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்யும் நபர்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்புடன் பொருளாதார ரீதியிலான உதவிகளும் கிடைக்க வழிவகை செய்யும் இந்தியாவின் முதல் சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலக அளவில் சாலை விபத்துக்களின் காரணமாக அதிக உயிரிழப்புகளை சந்திக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துக்களில் 1,46,133 பேரும், 2016ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துக்களில் 1,50,785 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சாலை விபத்துக்களில் சிக்கியவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை கிடைக்க செய்யும் பட்சத்தில், அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். இதனை மருத்துவ ரீதியில் 'கோல்டன் ஹவர்' (GOLDEN HOUR) என குறிப்பிடுகின்றனர்.
அதாவது விபத்து நடைபெற்றதில் இருந்து முதல் ஒரு மணி நேரம்தான் 'கோல்டன் ஹவர்' என அழைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபருக்கு, கோல்டன் ஹவரில் மருத்துவ சிகிச்சை வழங்குவது என்பது அத்தியாவசியமானது. இதன்மூலம் பாதிக்கப்பட்ட நபர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
ஆனால் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என அலைய வேண்டியது வரும் என்பதால், விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய பெரும்பாலானோர் முன்வருவதில்லை. ஏனெனில் விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்யும் நபர்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு எதுவும் இதுவரை இல்லை.
எனினும் விபத்துக்களினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்பவர்களை பாதுகாக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவின் பேரில், சில வழிகாட்டு நெறிமுறைகளை மட்டும், மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு வழங்கியது.
என்றாலும் கூட உதவி செய்யும் நபர்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு என்ற ஒன்று இல்லாமல்தான் இருந்தது. இந்த சூழலில், விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் நபர்களை பாதுகாக்கும் வகையிலான புதிய சட்டம் ஒன்றை கர்நாடக மாநில அரசு இயற்றியுள்ளது.
இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன்மூலம் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்களை சட்டப்பூர்வமான முறையில் பாதுகாக்கும் இந்தியாவின் முதல் மாநிலம் என்ற பெருமையை கர்நாடகா பெறுகிறது.
விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்களுக்கு உதவி செய்த நபர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவும்தான், கர்நாடக மாநில அரசு இந்த சட்டத்தை இயற்றியுள்ளது.
இந்த புதிய சட்டத்தின்படி, விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய நேரத்தில் உதவி செய்யும் நபர்களுக்கு பொருளாதார ரீதியிலான உதவிகள் கிடைக்கும். விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு அவர்கள் உடனடியாக கிளம்பி விடலாம்.
அத்துடன் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் கோர்ட்டிற்கு மீண்டும் மீண்டும் அலைய வேண்டியது இல்லை. ஒரு வேளை போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டிற்கு வர நேரிட்டால், அதற்கு உண்டான செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.
விபத்தில் சிக்கிய நபர்கள் அனுமதிக்கப்படும் பட்சத்தில், எவ்வித விசாரணையும் நடத்தி நேரத்தை கடத்தாமல், உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் என அனைத்து மருத்துவமனைகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
இதுகுறித்து கர்நாடக மாநில அரசு உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''விபத்தில் சிக்கிய நபர்களுக்கு உதவாமல் பலர் செல்பி எடுக்கவும், வீடியோ எடுக்கவும் செய்கின்றனர். இது மனித நேயமற்ற செயல். ஒரு சிலர் போலீஸ் விசாரணைக்கு பயந்து கொண்டு உதவி செய்யாமல் இருக்கின்றனர்.
ஆனால் இந்த புதிய சட்டத்தின்படி, விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்யும் நபர்கள் எந்த வகையிலும் தொந்தரவுகளுக்கு ஆளாக மாட்டார்கள். அதனை உறுதியாக தெரிவித்து கொள்கிறோம்'' என்றார்.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!