Just In
- 16 min ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 55 min ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 1 hr ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 1 hr ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News வாங்களேன்.. உட்கார்ந்து பேசி உங்களுக்கு நல்லா புரிய வைக்கிறேன்.. மோடிக்கு கார்கே கடிதம்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
உங்கள் காசுக்கு வேட்டு வைக்கும் “ஹெட்லைட் எமன்”; போலீஸ் கிட்ட மாட்டுனா அவ்வளவு தான்..!
கேரளாவில் அதிகமாக வெளிச்சம் கொண்ட மாடிஃபிகேஷன் ஹெட்லைட்களுடன் வலம் வரும் வாகனங்களின் ஹெட்லைட்களின் அளவுகளை கண்காணிக்கும் லக்ஸ் மீட்டர் தற்போது கேரள போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. கேரளாவில் அதிக வ
கேரளாவில் அதிகமாக வெளிச்சம் கொண்ட மாடிஃபிகேஷன் ஹெட்லைட்களுடன் வலம் வரும் வாகனங்களின் ஹெட்லைட்களின் அளவுகளை கண்காணிக்கும் லக்ஸ் மீட்டர் தற்போது கேரள போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. கேரளாவில் அதிக வாகனங்கள் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் இந்த நடவடிக்கையை அதிகாரிகள் எடுத்துள்ளனர்.
வாகனங்களில் பகல் நேரங்களிலும் எரியும் ஹெட்லைட் கட்டாயம் இருக்க வேண்டும் என்று ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அரசு உத்தரவிட்டிருந்தது. இதை தற்போது புதிதாக தயாரிக்கும் வாகனங்களில் டிஆர்எல்களை பொருத்தி ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் சிலர் கார்களிலோ அல்லது பைக்குகளிலோ எதிரே வருபவர்களின் கண்கள் கூசும்படியாக ஹெட்லைட்களை எரியவிட்டு வருகின்றனர். இவர்கள் பொருத்தியிருக்கும் இந்த ஹெட்லைட்டால் எதிரில் வருபவர்கள் முன்னே வரும் வாகனம் கூட தெரியமால் விபத்தில் சிக்கும் அபாயமும்ஏற்பட்டுள்ளது.
சரி இப்படியான ஹெட்லைட்களை பொருத்தியிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றால் சில உயர் ரக கார்களில் இது போன்ற ஹெட்லைட்கள் உள்ளன. இவை எதிரே வரும் வாகனத்தினரின் கண்களை கூசுவதில்லை. ஆனால் வெளியில் இருந்துபார்த்தால் இரண்டு ஹெட்லைட்களும் ஒரே போல் தான் இருக்கிறது.
இதனால் சட்டவிரோதமாக ஹெட்லைட்களை பொருத்தி வருபவர்கள் என்று போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் ஹெட்லைட்களை மாடிஃபிகேஷன் செய்யும் போலீசாரால் இதை சரி வர கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் திணறினர்.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் மோட்டா வாகனத்துறையினர் தற்போது ஹெட்லைட்களில் இருந்து வரும் வெளிச்சத்தை கண்டுபிடிக்க லக்ஸ் மீட்டர் என்ற கருவியை தற்போது வாங்கியுள்ளனர்.
இந்த லக்ஸ் மீட்டர் என்பது ஹெட்லைட்டில் இருந்து வரும் வெளிச்சத்தின் லுமினோசிட்டியின் அளவை துள்ளியமாக கண்டறியும். இதன் மூலம் எது அரசு அங்கிகரித்த ஹெட்லைட், எது சட்ட விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட ஹெட்லைட் என்பது தெளிவாக தெரிந்துவிடும் இதை கொண்டு சட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
தற்போது கேரள அரசு சுமார் 14 மாவட்ட போலீசாருக்கு இதை வழங்கியுள்ளது. ஒரு மாவட்டத்திற்கு எவ்வளவு லக்ஸ் மீட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் இல்லை. ஆனால் ஒரு லக்ஸ் மீட்டரை ரூ 15 ஆயிரம் என்ற விலையில் வாங்கியுள்ளது.
தற்போது கேரளாவின் தென் மாவட்டங்களுக்கு இந்த லக்ஸ் மீட்டர்கள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, ஆகிய மாவட்டங்களில் அதிக வெளிச்சம் தரும் ஹெட்லைட்களை பொருத்தி வருவபவர்களை எளிதாக கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
வாகன சோதனையின் போது போலீசார் இந்த கருவியுடன் வந்து சில வாகனங்களை நிறுத்தி அந்த வாகனத்தின் ஹெட்லைட் அளவை இந்த கருவியை கொண்டு சோதனையிடுவர் அது அரசு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக வெளிச்சத்தை வெளிப்படுத்தினால் அதற்காக ரூ 1000 அபராதம் விதிக்கப்படும்.
மேலும் அபராதத்துடன் அவர்கள் உடனடியாக ஹெட்லைட் பல்புகளை மாற்றுமாறும் அறிவுறுத்தப்படும். தற்போது கேரள போலீசாருக்கு இந்த கருவியை எப்படி பயன்படுத்துவது என்று பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. விரைவில் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொடர்ந்து இதுபோன்ற அதிக வெளிச்சத்துடன் கூடிய ஹெட்லைட் உடன் பயணிக்கும் வாகனங்கள் மீது அதிக நடவடிக்கை எடுக்க தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் என்ன விதமான தண்டனை என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்த லக்ஸ் மீட்டர் செல் என்ற கருவி உள்ளே இருக்கும். இந்த கருவியின் ஹெட்லைட் வெளிச்சம்படும் போது அது அந்த லைட் எனர்ஜினை எலெக்ட்ரிக்கல் எனர்ஜியாக மாற்றும்.
இவ்வாறு அந்த லக்ஸ் மீட்டர் எவ்வளவு எலெக்ட்ரிக்கல் எனர்ஜி உருவாகிறது என்பதை கணக்கிட்டு கூறும், அதிக வெளிச்சம் வரும் ஹெட்லைட்டில் அதிக எலெக்ட்ரிக் பவரும், குறைவான வெளிச்சம் வரும் ஹெட்லைட்டில் இருந்து குறைந்த எலெக்ட்ரிக் பவரும் உருவாகும்.
குறிப்பாக இந்த ஹெட்லைட் மாடிஃபிகேஷன் பிரச்னை கேரளாவில் தான் அதிகமாக இருக்கிறது. கேரளாவில் தான் வாகனம் வாங்கும் மக்கள் அதை மாடிஃபிகேஷன் செய்து பயன்படுத்தும் பழக்கத்தை அதிகமாக வைத்திருக்கிறார்கள்.
இந்த அதிக வெளிச்சம் தரும்ஹெட்லைட் விவகாரம் பெரும் பூதாகரத்தை கிளப்பியதால் தான். கேரள அரசு இந்த ரக கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இது போன்று சட்டவிரோதமாக கார்களை மாடிஃபிகேஷன் செய்பவர்களை கண்டுபிடிக்க முடியும் என அவர்கள் கருதுகின்றனர்.
பொதுவாக கேரளாவில் எஸ்யூவி கார் வைத்திருப்பவர்கள் அதிக அளவில் மாடிஃபிகேஷன் செய்கின்றனர். அவர்கள் ரூப் டாப் லைட்கள், பானட் மீது லைட்கள் என வித விதமாக கார்களை மாடிஃபிகேஷன் செய்கின்றனர். இதனால் அந்த வாகனம் ரோட்டில் செல்லும் போது எதிரே வருபவர்களுக்கு ரோடு சரியாக தெரியாமல் கண்களில் கூச்சம் ஏற்படும் இதனால் விபத்துக்கள் கதுட நிகழலாம்.
பொது மக்கள் பயன்படுத்தும் சாலையில் ஆக்ஸிலரி லேப்கள் கூட தடை செய்யப்பட்டுள்ளது. ஆக்ஸிலரி லேம்ப்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் பயன்படுத்தினால் அதை கவர் செய்து கொண்டு தான் வர வேண்டும்.
இது போன்ற செய்திகளை உங்கள் மொபைலில் உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்
தற்போது கேரளா அரசு வாங்கிய இந்த கருவியை இந்தியாவில் உள்ள பிற மாநில அரசுகளும் கட்டாயம் வாங்கி வாகன சோதனையில் போலீசார் பயன்படுத்துவதற்காக வழங்க வேண்டும். இது போன்று சட்டவிரோதமாக வாகனங்கைள மாடிஃபிகேஷன் செய்து மற்ற வாகனங்களை விபத்திற்குள்ளாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கருத்து.