Just In
- 58 min ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- 2 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 7 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 7 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
Don't Miss!
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Movies அச்சச்சோ முதலில் அஜித் இல்லை சூர்யாதான்ங்க.. ஜோதிகா சொன்ன பல வருட சீக்ரெட்
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க கியா நிறுவனம் திட்டம்
இந்திய அரசுக்காக எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க முன்வந்துள்ளது கியா கார் நிறுவனம். ஆந்திராவில் கார் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவனவுள்ளதை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது அந்நிறுவனம்.
இந்திய அரசுக்காக எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க முன்வந்துள்ளது கியா கார் நிறுவனம். ஆந்திராவில் கார் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவனவுள்ளதை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது அந்நிறுவனம்.
மத்திய அரசு அதன்பயன்பாட்டிற்காக கடந்தாண்டு 500 எலெக்ட்ரிக் கார்களை வாங்கியது. மஹேந்திரா மற்றும் டாடா நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து மத்திய அரசின் இ.எஸ்.எஸ்.எல். நிறுவனத்திற்கு வழங்கி வருகின்றனர்.
இதையடுத்து இந்தாண்டிற்காக சுமார் 10,000 எலெக்ட்ரிக் கார்கள் தேவை என கடந்த 9ம் தேதி ஏலத்தை நடத்தியது இ.எஸ்.எஸ்.எல்., இந்த ஏலத்தில் சமீபத்தில் ஆந்திரா மாநிலத்தில் கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க அனுமதி பெற்றிருக்கும் கொரியன் கார் கம்பெனியான கியா நிறுவனமும் பங்கெடுத்துள்ளது.
தற்போது கியா நிறவனம் அமைக்கப்படும் தொழிற்சாலையில் ஆண்டிற்கு 3 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் திறனுடன் அமைக்கப்படுவதால் அந்த கட்டமைப்பை கருத்தில் கொண்டு அந்நிறுவனம் இந்த ஏலத்தில் பங்கெடுத்துள்ளது.
ஏற்கனவே ஆட்டோ எஸ்போ - 2018 ல் அறிமுகமான எஸ்பி கான்செப்ட் எஸ்யூவி காருடன் 2019ம் ஆண்டு இரண்டாம் பாதியில் இந்தியாவிற்குள் அறிமுகமாக திட்டமிட்டுள்ள கியா நிறுவனம் தனது அடுத்த காராக எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் பயணிகள் பயன்பாட்டிற்கும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இவை அனைத்தும் வரும் காலங்களில் மத்திய அரசு எலக்ட்ரிக் கார்களுக்காக கட்டமைக்கவுள்ள கார் சார்ஜ் போடும் இடங்கள் உள்ளிட்ட பல அம்சங்களை கருத்தில் கொண்டே இந்த முடிவு இறுதி செய்யப்படும்.
அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் அதிக அளவு கார் தயாரிக்கும் கம்பெனிகளில் 3 அல்லது 4வது இடத்தை பிடிக்க கியா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் கார்களை அதிகளவு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள கியா நிறுவனத்திற்கு மத்திய அரசின் இந்த எலக்ட்ரிக் கார் திட்டத்திற்கு கார் தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்தியாவில் அவர்களுக்கு கார் தயாரிக்க ஆகும் செலவு இந்தியர்களின் தேவையை பயணிகள் கார் தயாரிக்கும் முன்பே அறிந்த கொள்ள சிறந்த வாய்ப்பாக இருக்கும்.