Just In
- 2 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 2 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 3 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 7 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மஹிந்திரா மராஸ்ஸோ காரின் விலை கணிசமாக உயர்கிறது!
கடந்த செப்டம்பர் மாதம் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.9.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் களமிறக்கப்பட்டது. அப்போதே, அது அறிமுகச் சலுகை வி
அண்மையில் விற்பனைக்கு வந்த புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் விலை கணிசமாக உயர்த்தப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
கடந்த செப்டம்பர் மாதம் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.9.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் களமிறக்கப்பட்டது. மாருதி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களுக்கு இடையிலான ரகத்தில் நிலைநிறுத்தப்பட்டது.
அறிமுகம் செய்யப்படும்போதே, ரூ.9.99 லட்சம் ஆரம்ப விலை என்பது அறிமுகச் சலுகை விலையாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் ஜனவரி 1ந் தேதி முதல் மஹிந்திரா மராஸ்ஸோ காரின் விலை உயர்த்தப்பட இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.
வேரியண்ட்டுக்கு தக்கவாறு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரையில் விலை உயர்வு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய கார் சரியான விலையில் களமிறக்கப்பட்டதால், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கார் 10,000க்கும் அதிகமான முன்பதிவுகளை முதல் இரண்டு மாதங்களில் பெற்றிருக்கிறது.
அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதத்தில் 2,829 மராஸ்ஸோ கார்களும், இரண்டாவது மாதமான அக்டோபரில் 3,810 மராஸ்ஸோ கார்களும் விற்பனையாகி இருக்கின்றன. புதிய மாருதி எர்டிகா கார் வருகை தர இருப்பதால், கடந்த மாதம் எர்டிகா காரின் விற்பனை கணிசமாக குறைந்தது. இதனால், மராஸ்ஸோ காரின் விற்பனையில் உயர்வு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில், இன்னும் சில நாட்களில் புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் வந்த பிறகு, மஹிந்திரா மராஸ்ஸோ காருக்கு நிச்சயம் நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிகிறது.
புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் M2, M4, M6 மற்றும் M8 ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது. இந்த காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. அண்மையில் ஆப்பிள் கார் ப்ளே செயலியை சப்போர்ட் செய்யும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய மராஸ்ஸோ காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 17.3 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
எம்பிவி கார் ரகத்தில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது புதிய மஹிந்திரா மராஸ்ஸோ. விரைவில் விலை உயர்த்தப்பட இருப்பதால், இப்போதே முன்பதிவு செய்து கொள்வது சிறந்ததாக இருக்கும்.
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு