Just In
- 30 min ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- 5 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 5 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 6 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
உயிர்பலி வாங்கும் மாருதி சுசூகி ; உயிரை காக்கும் டாடா கார்கள்: சமீபத்திய விபத்துகளின் ரிப்போர்ட்
சமீபத்தில் இந்தியாவில் நடந்த சில விபத்துக்கள் செய்திகளாக வந்துள்ளன. இவற்றை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்தியாவில் மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்கள் மோசமான பாடி பில்ட் காரணமாக விபத்தின் போது அதிக சே
சமீபத்தில் இந்தியாவில் நடந்த சில விபத்துக்கள் செய்திகளாக வந்துள்ளன. இவற்றை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்தியாவில் மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்கள் மோசமான பாடி பில்ட் காரணமாக விபத்தின் போது அதிக சேதாரம் மற்றும் உயிர் பலி ஆகியுள்ளது. ஆனால் டாடா நிறுவன கார்கள் பயணிகளின் உயிரை காத்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் அதிக அளவில் கார்களை விற்பனை செய்வதில் மாருதி சுசூகி நிறுவனம் தான் நம்பர் இடத்தில் இருக்கிறது. இந்நிறுவனத்தின் கார்கள் எல்லாம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாக உள்ளது.
குறிப்பாக இந்நிறுவனம் வெளியிட்ட ஸிவிப்ட் என்ற மாடல் கார் இந்தியர்கள் மனதை கவர்ந்தது. இதன் தாக்கம் பல ஆண்டுகளாக அதிகம் அளவில் இந்த கார்கள் விற்பனையாகி வருகின்றது. இந்தியாவில் இந்த கார்கள் அதிகளவில் விற்பனையானாலும் இந்த கார்கள் விபத்தில் சிக்கும் போது அதிக சேதாரம் ஏற்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் கணவனும் மனைவியில் காரில் சண்டை போட்டு கொண்டே சென்று கொண்டிருந்தனர். அதை பின்னால் வந்த வாகனத்தில் வந்தவர் பார்த்து அவர்களை நிறுத்தி சண்டை போடாமல் செல்லும் படி அறிவுறித்து விட்டு சென்றார்.
ஆனால் அதை ஒரு பொருட்டாக மதிக்காத அவர்கள் தொடர்ந்து சண்டை போட்டு கொண்டே காரில் சென்றனர். சிறித தூரத்தில் ஒரு ஆட்டோவும் இந்த காரும் பலமாக மோதிக்கொண்டது.
இதில் காரில் இருந்த கணவன் மனைவி மற்றும் ஆட்டோவில் இருந்த இருவர் பரிதாபமாக பலியானர். கணவன் மனைவி சண்டை போட்டதால் 4 உயிர்கள் பரிதாபமாக பலியானது. இந்த விபத்து நடந்த பின் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கும் போது காருக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.
ஆட்டோ மோதியதற்கே கார் பலத்த சேதமாகியுள்ளது. பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்கள் பெரும்பாலும் இந்த பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவிலும் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது.
கேரளாவில் புதிதாக கார் வாங்க ஷோரூம் சென்ற ஒருவர் புதிய ஸ்விப்ட் காருக்கான பணத்தை கட்டி விட்டு பணத்திற்காக காத்து கொண்டிருந்தார். அப்பொழுது காரை எடுக்க சென்ற மெக்கானிக் கார் வரும் போது எதிர்பாராத விதமாக ஆட்டோவுடன் லேசாக மோதியது.இதற்கே கார் பலத்த சேதம் ஏற்பட்டது.
அதன் பின் அந்த ஷோரூம் நிர்வாகம் அவருக்கு புதிய காரை வழங்கியது. இதுபோல் சமீப காலங்களில் மாருதிசுசூகி நிறுவனத்தின் கார்கள் அதுவும் குறிப்பாக ஸ்விப்ட் ரக கார்கள் அதிக அளவில் விபத்தில் சக்கி பெரும் சேதாரமாகின்றன.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் நடந்த விபத்து ஒன்றின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதிலும் மாருதி ஸ்விப்ட் கார் ஒன்று ரேட்டோரம் ராங் சைடு பார்க்கிங் நிறுத்தப்பட்டிருந்த லோடு ஆட்டோ மீது மோதியது. இதில் காரின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. அந்த வீடியோவை நீங்கள் கீழே பார்க்கலாம்.
இந்த விபத்து நடந்த இடம் பற்றி தெரியவில்லை ஆனால் இந்த சம்பவம் அருகில் இரு்நத ஒரு கட்டடத்தில் உள்ள சிசிடி.வி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த காட்சியை தான் நீங்கள் மேலே பார்த்தீர்கள். இந்த விபத்தில் லோடு ஆட்டோவை ராங் சைடில் பார்க் செய்திருந்தது மிகப்பெரிய தவறு.
எனினும் இந்த விபத்திற்கே தாங்காத புதிய மாருதி ஸ்விப்ட் கார் பெரும் சேதமடைந்துள்ளது. இதனால் காருக்குள் இருப்பவர்களின் உயிருக்கு பாதுகாப்பு என்பது குறைவும் தான். மேலும் அவர்களுக்கு பலத்தகாயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு மாருதி சுசூகி கார்கள் விபத்தில் சிக்கி பெரும் சேதத்தை சந்தித்து வரும் சூழ்நிலையில் டாடா நிறுவனத்தின் கார்கள் விபத்தில் சிக்கும் போது பல ஆச்சரியமான அளவில் காருக்குள் இருந்தவரை பாதுகாத்துள்ள சம்பவமும் சமீபத்தில் நடந்தது.
வடஇந்தியாவில் இரவில் டாடா நெஸ்கார் ஒன்று நெடுஞ்சாலையில் சென்றபோது விபத்தில்சிக்கி 2-3 முறை உருண்டது ஆனால் காருக்குள் இருந்தவருக்கு சிறு கீறல் கூட ஏற்படவில்லை. அந்த அளவிற்கு அதன் காரின் பாடி பில்ட் தரம் வாய்ந்ததாக இருந்துள்ளது.
அதோ போல் கடந்த மாதம் டாடா நெக்ஸான் கார் 20 பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானதிலும் காரில் இருந்தவர் எந்த வித காயமும் இன்றி உயிர் தப்பினார். இதனால் சமூக வலைதளங்களில் பலர் டாடா நிறுவன கார்களின் பில்ட் குவாலிட்டி குறித்து பேசி வருகின்றனர்.
அதே நேரத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தில் கார்களின் மோசமாக பில்ட் குவாலிட்டியால் உயிர்கள் பலியாவது குறித்தும் அதிக அளவில் விவாதங்கள் நடந்துவருகிறது. என்னதான் பில்ட் குவாலிட்டி மோசமாக இருந்தாலும் அந்நிறுவனத்தின் கார் தான் இந்தியாவில் நம்பர் 1 விற்பனை.
சில நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் காரை பூப்போல பார்த்துக்கொள்ளலாம். அதற்காக காரே பூவாக இருந்தால் எப்படி, விபத்தில் சகிக்கி சின்னா பின்னமாக மாறிவிடாதா? எனவும் கிண்டல் செய்து வருகின்றனர்.
-
இந்தியாவுலேயே நல்லா சேல்ஸ் ஆகுற கார் இதெல்லாம்! ஆனா இந்த விஷயம் தெரிஞ்சா யாரும் வாங்க மாட்டாங்க!
-
திரும்பி வரதே வாங்கிய அடிய திருப்பி கொடுக்கதானா! ஃபேமிலியோட போற மாதிரியான காருக்கு பேடண்ட் பதிவை பெற்ற ஃபோர்டு
-
டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!! விற்பனையில் நம்பர் 1, 2 இடங்களில் டாடா தான்!