புதிய ஸ்விஃப்ட் மாடல் விற்பனைக்கு வருவதற்கு முன்னரே ரூ. 17000 வரை கார்கள் விலையை உயர்த்திய மாருதி..!
புதிய ஸ்விஃப்ட் மாடல் விற்பனைக்கு வருவதற்கு முன்னரே ரூ. 17000 வரை கார்கள் விலையை உயர்த்திய மாருதி சுஸுகி..!!
Recommended Video

வாகன விற்பனைக்கான நிர்வாகம் மற்றும் விநியோகம் துறைகளில் செலவீனங்கள் அதிகரித்துள்ளதால், இந்தியாவில் மாருதி சுஸுகி கார்களின் விலை கடந்த 10ம் தேதி முதல் உயர்ந்துள்ளன.

மாடல்களுக்கு ஏற்றவாறு ரூ. 1,700 முதல் ரூ. 17,000 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை மாருதி சுஸுகியின் அனைத்து கார்களிலும் இந்த விலையேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருந்தாலும் எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை என்பது இதுவரை மாருதி சுஸுகி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. விரைவில் அதற்கான தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மாருதி சுஸுகியின் கார்களில் என்ட்ரி லெவல் மாடல் ஆல்டோ 800 முதல் பீரிமியம் தர எஸ்-கிராஸ் வரை அனைத்துமே இந்த விலையேற்றத்தில் அடங்குகின்றன.

டிரைவஸ்பார்க்கிற்கு கிடைத்துள்ள தகவலின் படி என்ட்ரி லெவல் முதல் ப்ரீமியம் தரம் கார்கள் ரூ. 2.45 லட்சம் முதல் ரூ. 11.29 லட்சம் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலை பெறுகின்றன.
Trending On Drivespark Tamil:

கடந்த ஜூலை 2017ம் ஆண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் தனது கார்களின் விலையை குறைத்தது. அந்நிறுவனத்தின் டீசல் வேரியன்ட்ஸ் உட்பட செடான் முதல் எம்விபி, மைல்டு ஹைஃபிரிட் கார்களை தவிர மற்ற மாடல்களின் விலை 3 சதவீதம் வரை குறைந்தது.

2017 ஜூலை தொடக்கத்தில் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறை அமலுக்கு வந்ததால், இந்த விலை குறைப்பு நடவடிக்கையை மாருதி சுஸுகி மேற்கொண்டது. மேலும் இது வாடிக்கையாளர்களுக்கு நன்மையாக அமைந்தது.

மாருதியின் கார்கள் இந்திய சந்தையில் வலிமையான போட்டியை வாகன துறையில் உருவாக்கியுள்ளன. அது தயாரித்த ஏறக்குறையை அனைத்து கார் மாடல்களுமே நல்ல விற்பனை திறனை பெற்றுள்ளது.

ஹூண்டாய், ஹோண்டா, மஹிந்திரா போன்ற இந்தியாவின் மற்ற முன்னணி கார் விற்பனையாளர்கள் ஏற்கனவே தங்களது தயாரிப்புகளுக்கான விலை ஏற்றத்தை தெரிவித்துவிட்டனர்.

இருந்தாலும் அந்நிறுவனங்கள் எந்தெந்த மாடல்களுக்கு எது வரை விலை ஏற்றத்தை அறிவிக்கின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளிவரும்.
Trending On Drivespark Tamil:

இத்தனை ஆண்டு கால கார் விற்பனையில் மாருதி சுஸுகி பல்வேறு ஏற்றங்கள் மற்றும் சறுக்கலகளை ஒருங்கே சந்தித்துள்ளது.

இந்தியாவில் நல்ல விற்பனை திறனை பெற்று வரும் மாருதி சுஸுகி, கார்களின் விலை ஏற்றம் குறித்த அறிவிப்பை வெளியிடும் போது மாருதி சுஸுகி தனிப்பட்ட முறையில் தயக்கம் காட்டும்.

தற்போது வாகன வணிகத்துறையில் நிலவும் நிர்வாகம் மற்றும் விநியோகம் ஆகிய பிரிவுகளின் செலவீனங்கள் அதிகரித்துள்ளன. அதற்காகவே இந்த விலை ஏற்றம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாருதி சுஸுகி விற்பனை மற்றும் சர்வீஸ் தேவைகளில் நாடு முழுவதும் அக்கறையுடன் செயல்படுகிறது. அதன் காரணமாக இந்த விலை ஏற்ற நடவடிக்கைக்கு மாற்று திட்டத்தை மாருதி சுஸுகி விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Trending DriveSpark YouTube Videos


Click it and Unblock the Notifications