மாருதி கார்களுக்கான பருவமழை கால சிறப்பு பரிசோதனை முகாம்!!
பருவமழை காலத்தில் கார்களில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த பிரச்னைகள் விபத்துக்கும் வழிகோலும் வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு பருவமழை காலத்திற்கான சிறப்பு கார் பரிசோதனை முகாமுக்
மாருதி கார்களுக்கு பருவமழை கால சிறப்பு பரிசோதனை முகாம் இன்று துவங்கி இருக்கிறது. வரும் 30ந் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த சிறப்பு பரிசோதனை முகாம் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

பருவமழை காலத்தில் கார்களில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த பிரச்னைகள் விபத்துக்கும் வழிகோலும் வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு பருவமழை காலத்திற்கான சிறப்பு கார் பரிசோதனை முகாமுக்கு மாருதி கார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

பருவமழை காலத்திற்கு முன்னதாக கார்களில் இருக்கும் பிரச்னைகளை கண்டறிந்து சரிசெய்து கொடுப்பதற்கான இந்த சிறப்பு பரிசோதனை முகாம்கள் நாடுமுழுவதும் உள்ள அனைத்து மாருதி டீலர்களிலும் நடக்கிறது.

காரின் பிரேக் சிஸ்டம், விண்ட்ஸ்கிரீன் கண்ணாடி, வைப்பர் பிளேடுகள், பேட்டரி மற்றும் எலக்ட்ரிக்கல் சிஸ்டம் உள்ளிட்ட பல முக்கிய பாகங்களின் இயக்கம் குறித்து பரிசோதனை செய்யப்படும். பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டால், அந்த உதிரிபாகம் மாற்றியும் அல்லது லேசான பிரச்னை என்றால் பழுது நீக்கித் தரப்பட உள்ளதாக மாருதி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று துவங்கி இருக்கும் இந்த சிறப்பு பரிசோதனை முகாம் வரும் 30ந் தேதி வரை நடக்கிறது. இந்த சிறப்பு பரிசோதனை முகாம்களில் பங்கேற்கும் கார்களுக்கு உதிரிபாகங்கள் மற்றும் ஆக்சஸெரீகளுக்கு சிறப்பு தள்ளுபடிகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று மாருதி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு பரிசோதனை முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாருதி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வீஸ்க்கான முன்பதிவு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு அருகாமையிலுள்ள மாருதி கார் சர்வீஸ் மையங்களை அணுகி விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்த சிறப்பு பரிசோதனை முகாம்கள் மூலமாக வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கும், காரின் பராமரிப்பையும் உறுதி செய்து கொள்ள முடியும் என்று மாருதி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








