“இந்த” விஷயத்தில் சீனாவை முந்திய இந்தியா..! விரைவில் நம்பர்-1 ஆகுமாம்..!

சீனாவில் உள்ள எலெக்ட்ரிக் கார்களை விட இந்தியாவில் ஓடும் எலெக்ட்ரிக் ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று மூலம் தெரியவந்துள்ளது.

சீனாவில் உள்ள எலெக்ட்ரிக் கார்களை விட இந்தியாவில் ஓடும் எலெக்ட்ரிக் ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று மூலம் தெரியவந்துள்ளது.

“இந்த” விஷயத்தில் சீனாவை முந்திய இந்தியா..! விரைவில் நம்பர்-1 ஆகுமாம்..!

இந்தியாவில் அதிக அளவில் ஆட்டோ ரிக்ஷாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையில் பயன்படுத்தப்பட்டாலும் அனைத்தும் 3 சக்கர வாகனங்களாகவே உள்ளன. இந்த ஆட்டோ ரிக்ஷாக்களில் இருந்து அதிக அளவிற்கு புகை மற்றும் காற்று மாசு ஏற்படுவதாக புகார் எழுந்தது.

“இந்த” விஷயத்தில் சீனாவை முந்திய இந்தியா..! விரைவில் நம்பர்-1 ஆகுமாம்..!

இதையடுத்து இன்று இந்தியாவின் பெரு நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.

“இந்த” விஷயத்தில் சீனாவை முந்திய இந்தியா..! விரைவில் நம்பர்-1 ஆகுமாம்..!

இந்த எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் பழைய பெட்ரோல், டீசல் ஆட்டோக்களை விட சத்தம் குறைவாகவும், வேகமாகவும், காற்று மாசு ஏற்படுத்தாலும் பயணிக்கும். மேலும் இதன் விலையும் மிக குறைவாக இருக்கும். இதன் காரணமாக ஆட்டோ ரிக்ஷாக்கள் தினமும் பழைய ஆட்டோக்களை விட அதிக ரைடுகளை எடுக்க முடியும்.

“இந்த” விஷயத்தில் சீனாவை முந்திய இந்தியா..! விரைவில் நம்பர்-1 ஆகுமாம்..!

இன்றைய சூழ்நிலையில் மாதத்திற்கு 11 ஆயிரம் எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் இந்தியாவில் விற்பனையாகிறது. இந்த விற்பனை வரும் 2021ல் 9 சதவீதம் அதிகரிக்கும் என கணக்கிடப்படுகிறது.

“இந்த” விஷயத்தில் சீனாவை முந்திய இந்தியா..! விரைவில் நம்பர்-1 ஆகுமாம்..!

தற்போது மஹிந்திரா மற்றும் கைனட்டிக் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் இந்த ரக ஆட்டோ ரிக்ஷாக்களை அதிக அளவில் தயாரித்து விற்பனை செய்கின்றன. ஒரு கணிப்பின்படி இந்தியாவில் ஆட்டோ ரிக்ஷா விற்பனை சந்தையின் மதிப்பு சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“இந்த” விஷயத்தில் சீனாவை முந்திய இந்தியா..! விரைவில் நம்பர்-1 ஆகுமாம்..!

இதற்கிடையில் தற்போது ஓலா நிறுவனம் இந்தியாவில் வரும் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாத்திற்குள் சுமார் 10 ஆயிரம் ஆட்டோக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது.

“இந்த” விஷயத்தில் சீனாவை முந்திய இந்தியா..! விரைவில் நம்பர்-1 ஆகுமாம்..!

சீனாவில் மொத்தம் 13.5 லட்சம் எலெக்ட்ரிக் பயணிகள் வாகனங்கள் இயங்கி வருகிறது. ஆனால் இந்தியாவில் 60000 வாகனங்கள்தான் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய கார் விற்பனையாளரான மாருதி சுஸூகி நிறுவனத்திடம் 2020 வரை எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வரும் திட்டமில்லை.

“இந்த” விஷயத்தில் சீனாவை முந்திய இந்தியா..! விரைவில் நம்பர்-1 ஆகுமாம்..!

பிரதமர் மோடி தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை பொது போக்குவரத்து வாகன பயன்பாட்டில் அதிகமாக கொண்டு வர திட்டமிட்டு வருகிறார். அதன்படி டாக்ஸிகள், பஸ்கள், ஆட்டோக்களில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டு வரும் வகையில் திட்டங்களை வகுத்து வருகிறார்.

“இந்த” விஷயத்தில் சீனாவை முந்திய இந்தியா..! விரைவில் நம்பர்-1 ஆகுமாம்..!

மத்திய நிதி அமைச்சகமானது 4 ஆயிரம் கோடியை இந்தியாவில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கவும் மற்றும் எலெக்ட்ரிக் பஸ்களுக்கான மானியமாகவும் வழங்குகிறது

“இந்த” விஷயத்தில் சீனாவை முந்திய இந்தியா..! விரைவில் நம்பர்-1 ஆகுமாம்..!

டெல்லியை சேர்ந்த அணில் சவுத்ரி என்பவர் சைக்கிள் மாடல் ரிக்ஷா ஒட்டி வந்தார். அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எலெக்டரிக் ஆட்டோ ரிக்ஷா ஓட்ட துவங்கினார். அதன் பின் அவரது வருமானம் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அதனால் தனது குடும்ப செலவை எளிதாக சமாளிக்கிறார்.

ஆட்டோ மொபைல் குறித்த செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!

“இந்த” விஷயத்தில் சீனாவை முந்திய இந்தியா..! விரைவில் நம்பர்-1 ஆகுமாம்..!

மேலும் அடுத்த எலெக்ட்ரிக் ஆட்டோவை வாங்குவதற்கும் கிட்டத்தட்ட பணம் சேர்த்து விட்டார். இவ்வாறு எலெக்ட்ரிக் வாகனங்கள் பலரது வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

“இந்த” விஷயத்தில் சீனாவை முந்திய இந்தியா..! விரைவில் நம்பர்-1 ஆகுமாம்..!

பெட்ரோல், டீசல் ஆட்டோக்கள் அதிக அளவிற்கு காற்று மாசுவை ஏற்படுத்துகிறது. அதன் காரணமாகவே எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக அளவில் ஊக்குவிக்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனம் மட்டும் அல்ல மாற்றுசக்தி கொண்ட எல்லா தொழிற்நுட்பமும் ஊக்குவிக்கப்படுகிறது.

“இந்த” விஷயத்தில் சீனாவை முந்திய இந்தியா..! விரைவில் நம்பர்-1 ஆகுமாம்..!

கடந்த நிதியாண்டில் இந்தியாவில் மொத்தம் 6,35,698 பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் ஆட்டோ ரிக்ஷாக்கள் விற்பனையானது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 24 சதவீத வளர்ச்சியாகும். அதே போல 33 லட்சம் பயணிகள் கார் விற்பனையாகியுள்ளது. இதில் பெரும்பாலும் டீசல் மற்றும் கேஸ் கார்களாகும்.

“இந்த” விஷயத்தில் சீனாவை முந்திய இந்தியா..! விரைவில் நம்பர்-1 ஆகுமாம்..!

எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரிக்காததற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது போதுமான சார்ஜிங் ஸ்டேஷன் மற்றும் பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்கள் இல்லாததுதான். இந்தியாவில் 425 சார்ஜிங் ஸ்டேஷன்கள் பொது பயன்பாட்டில் உள்ளது. 2022ம் ஆண்டில் 2800 சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

“இந்த” விஷயத்தில் சீனாவை முந்திய இந்தியா..! விரைவில் நம்பர்-1 ஆகுமாம்..!

இதற்கிடையில் சில நிறுவனங்கள் தாங்களாவே சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க முன் வந்துள்ளனர். ஸ்மார்ட் இ என்ற நிறுவனம் டெல்லி மெட்ரோவுடன் இணைந்து 10 ஸ்டேஷன்களில் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதை 2020ம் ஆண்டிற்குள் 214 ஸ்டேஷன்களாக விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

“இந்த” விஷயத்தில் சீனாவை முந்திய இந்தியா..! விரைவில் நம்பர்-1 ஆகுமாம்..!

அதே நேரத்தில் டெல்லி, உ.பி போன்ற இடங்களில் இன்றும் சைக்கிள் ரிக்ஷாக்கள் இயக்கப்பட்டுதான் வருகிறது. அவர்களுக்கு எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்களை வாங்கும் அளவிற்கு பண வசதியில்லை.

“இந்த” விஷயத்தில் சீனாவை முந்திய இந்தியா..! விரைவில் நம்பர்-1 ஆகுமாம்..!

இதனால் டெல்லி, உ.பி போன்ற இடங்களில் அதிகமாக எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்களை விற்பனை செய்யும் இ வோல்ட்ஸ் லிமிட்டட் நிறுவனம் தங்களால் மாதம் 1000 வாகனங்களை தயாரிக்க முடிந்தும் அதை அவர்கள் செய்வது இல்லை. காரணம் அங்குள்ள சைக்கிள் ரிக்ஷா ஓட்டுநர்களுக்கு இதை வாங்க கூடிய அளவிற்கு போதிய வருமானம் இல்லை.

“இந்த” விஷயத்தில் சீனாவை முந்திய இந்தியா..! விரைவில் நம்பர்-1 ஆகுமாம்..!

அரசு அவர்களுக்கு வங்கிகள் மூலம் கடனும் தனியாக சைக்கிளில் இருந்து ஆட்டோ ரிக்ஷாவிற்கு மாறுபவர்களுக்கு மானியமும் வழங்கினால் அந்த வாகனமும் எலெக்டரிக் வாகனமாக மாறும். சைக்கிள் ரிக்ஷாக்களால் காற்று மாசு இல்லாவிட்டாலும் இதன் மூலம் அவர்களின் வாழ்வினை உயர்த்த முடியும்.

“இந்த” விஷயத்தில் சீனாவை முந்திய இந்தியா..! விரைவில் நம்பர்-1 ஆகுமாம்..!

மொத்தத்தில் இந்தியாவில் சீனாவை விட அதிக அளவிற்கு எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரித்து விரைவில் இந்தியா எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உலகின் நம்பர் 1 மார்கெட்டாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

Article Published On: Monday, October 29, 2018, 19:07 [IST]
English summary
More EV's fleeting in india than china. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+