Just In
- 59 min ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 1 hr ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 1 hr ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 2 hrs ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
Don't Miss!
- Movies Blue sattai Maaran: தற்போதைக்கு திருந்திய.. விஜய் ஆண்டனி கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி!
- News எங்க ஏஜெண்டை துரத்திட்டு "கள்ள ஓட்டு" போட்டிருக்காங்க.. மறு வாக்குப்பதிவு தேவை: தமிழிசை பரபர புகார்!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
பெட்ரோல் பெயரில் மக்கள் வரிபணத்தை கொள்ளையடிக்கும் எம்பிக்கள் - ஷாக்கிங் ரிப்போர்ட்
இந்தியாவில் எம்.பிகளுக்கு வழங்கப்படும் பயணப்படியில் பெரும் அளவில் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எம்பிக்களின் வாகன எரிபொருள் செலவிற்காக அரசு கி.மீ. ரூ 16 வழங்குகிறது. அதில் எப்படி
இந்தியாவில் எம்.பிகளுக்கு வழங்கப்படும் பயணப்படியில் பெரும் அளவில் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எம்பிக்களின் வாகன எரிபொருள் செலவிற்காக அரசு கி.மீ. ரூ 16 வழங்குகிறது. அதில் எப்படி மக்கள் பயணம் வீணடிக்கப்படுகிறது. அதை எப்படி தடுக்க வேண்டும் என்பதை கீழே காணலாம்.
அதிகரித்து வரும் பெட்ரோல் விலையை பற்றி உங்களுக்கு சொல்ல தான் தெரிவேண்டும் என்பது இல்லை, லிட்டருக்கு ரூ 80 தாண்டி வரலாறு காணாத வகையில் உயர்ந்து கொண்டிருக்கிறது.
தலைநகர் டில்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 81.09 மற்றும் டீசல் லிட்டருக்க ரூ 73.08 என்றும் விற்பனை செய்யப்படுகிறது அதிகபட்சமாக மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 88.39 மற்றும் டீசல் லிட்டருக்க 77.58 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.
இதையடுத்து மத்திய மாநில அரசுகள் போடும் வரியால் மக்கள் அனைவரும் அதிக விலை கொடுத்து பெட்ரோல் டீசல்களை வேறு வழியின்றி போட்டு வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள எம்பிகள் பெட்ரோல் என்ற பெயரில் பெரும் அளவில் கொள்ளை அடித்து வருவது தற்போது அம்பலமாகியுள்ளது.
எம்.பி களுக்கு அரசு சார்பில் பாராளுமன்ற கூட்ட தொடரில் கலந்து கொள்வதற்காக அவர்கள் டில்லியில் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு வருவதற்கும் மீண்டும் பாராளுமன்றத்தில் இருந்து அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு செல்வதற்கும் பயணப்படி வழங்கப்படுகிறது.
டில்லியில் தற்போது சராசரியாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 81.09 என்ற விலையில் விற்பனையாகிறது. தற்போது எம்.பிகள் பயன்படுத்தும் கார் லிட்டருக்கு 12 கிமீ வரை செல்லும் என்றே வைத்துக்கொள்வோம், அதற்கு சாதாரண மனிதர்களுக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா ஒரு கி.மீருக்கு ரூ 6.75 தான்
ஆனால் நம் எம்பிகளுக்கு மட்டும் கி.மீ. ரூ 16 செலவாகிறது. அட ஆமாங்க அவங்க டில்லியில தங்கியிருக்குற வீட்டில் இருந்து பாராளுமன்றத்திற்கும், பாராமன்றத்தில் இருந்து அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கும் செல்ல ஒரு எம்.பிக்கு ஒரு கி.மீ. பயணத்திற்கு ரூ 16 பயணப்படியாக வழங்கப்படுகிறது.
அதாவது அவர்கள் பயன்படுத்தும் பெட்ரோலுக்காக அவர்கள் செலவு செய்வது கி.மீ. அதிகபட்சம் ரூ 6.75 தான் ஆனால் அவர்கள் பெருவது ரூ 16 அது சுமார் 2.3 மடங்கு அதிகம். அந்த பணம் எல்லாம் மக்களின் வரிப்பணம் தான்.
அதிகபட்சமாகவே கி.மீ. ரூ 6.75 தான் செலவாகும் என்ற நிலையில் ஏன் எம்.பிகளுக்கு கி.மீ. ரூ 16 வழங்கப்படுகிறது என்பது இதுவரை விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது. ஒரு எம்பிக்கு ஒரு கி.மீ. மீட்டருக்க ரூ 9 அதிகமாக வழப்படுகிறது என்றால் பாராளுமன்றத்தில் உள்ள அத்தனை எம்.பிகளுக்கும், எவ்வளவு வீணாக செலவாகும் என்பதை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
பாலாவின் பார்வையில் :
மத்திய மாநில அரசுகள் பெட்ரோலுக்கான வரியை அதிகமாக போட்டு விட்டு இப்படியாக பயணப்படியையும் அதிகம் அளவில் அளிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆக மக்கள் செலுத்தும் வரிப்பணம் எல்லாம் இப்படியாக தான் எம்.பி., எம்எல்ஏ க்களிடம் செல்கிறது. இந்த செயல் ஊழலை சட்டபூர்வமாக மாற்றும் வகையிலாக அமைந்துள்ளது. அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு வீணாக கொள்ளையடிக்கும் பணத்தை கட்டாயம் தடுத்து நிறுத்த வேண்டும்.