நீங்கள் புக் செய்த கேப் கேன்சல் ஆனால் உங்களுக்கு ரூ 25 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்
இந்தியாவில் சமீபகாலமாக செல்போன் ஆப்கள் மூலம் டாக்ஸி புக் செய்வது அதிக அளவில் நடந்த வருகிறது. மக்கள் தங்களுக்கு வசதியாக இருப்பதாலும், தங்கள் பயணத்தை குறைந்த செலவில் மேற்கொள்ள முடிவதாலும் அதிக அளவில்
இந்தியாவில் சமீபகாலமாக செல்போன் ஆப்கள் மூலம் டாக்ஸி புக் செய்வது அதிக அளவில் நடந்த வருகிறது. மக்கள் தங்களுக்கு வசதியாக இருப்பதாலும், தங்கள் பயணத்தை குறைந்த செலவில் மேற்கொள்ள முடிவதாலும் அதிக அளவில் மக்கள் இந்த சேவையை தேர்ந்தெடுக்கின்றனர்.

சுமார் 7-8 ஆண்டுகளாக இந்த சேவை தொடர்ந்து வந்தாலும் கடந்த 2017ம் ஆண்டு தான் இதற்காக விதிகள் நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்த டில்லி அரசு திட்டமிட்டு வருகிறது.

அதன் படி அம்மாநில அமைச்சர் ஜெயின் திட்டங்களை வகுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் "கேப்ஸ்களை இன்று மக்கள் பெரும் அளவில் பயன்படுத்தி வருகின்றனர். டில்லியில் முக்கிய போக்கவரத்து வாகனமாக செல்போன் ஆப்ஸ் மூலம் செயல்படும் ஆப்கள் மாறிவிட்டது. அதனால் அதற்கான விதிகளை அவசரக காலமாக எடுக்க வேண்டிய சூழ்நிலையில் அரசு உள்ளது" என கூறினார்.

இந்த விதிகளின் படி டில்லியில் நடத்தப்படும் கேப் சர்வீஸ்கள் கட்டாயம் அரசிடம் லைசன்ஸ் பெற்று இருக்க வேண்டும். மேலும் அவர்கள் 24x7 வாடிக்கையாளர் சேவை மையத்ததையும் வைத்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கேப்ஸ் சர்வீஸில் ஈடுபடும் வாகனங்களில் கட்டாயம் ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும், அதே போல அந்த அந்த ஜிபிஎஸ் தகவல்கள் போக்குவரத்து துறையுடன் பகிரப்பட வேண்டும் எனவும், டில்லியில் பதிவு செய்யப்பட்ட கார்களை கேப் சர்வீஸிற்கு பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ்கள் மூலம் பயணத்திற்கு முன்பாவே அவர்கள் செல்லும் இடத்திற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை குறைந்த பட்ச கட்டணம், அதிகபட்ச கட்டணம் என்ற முறையில் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் இவை ஏதேனும் ஒரு இடத்தில் மீறப்பட்டாலும் ரூ 25,000 அபராதம் வதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல ஒருவருக்கான கேப் உறுதி செய்யப்பட்டு கடைசி நிமிடத்தில் கேன்சல் செய்யப்பட்டால் அவருக்கு நஷ்ட ஈடாக கேப் நிறுவனம் ரூ 25 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கேப்களில் பயணிக்கம் பயணிகளுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் அவர்கள் ஆப்ஸ்களை கட்டமைக்க வேண்டும். தற்போது வெளியாகி யுள்ள திட்டத்தின் படி ஷேர் ரைடிங் குறித்த தகவல்கள் இல்லை.

அதேபோல கேப் டிரைவர் பயணியின் பாலினம், மதம், ஜாதி, இயலாமை உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கான புக்கிங்கை கேன்சல் செய்ய கூடாது.

இதே போல ஆப்ஸ் வழங்கும் நிறுவனங்கள் தங்கள் ஆப்ஸில் பயணிப்பவர் அவரது லைவ் லோக்கேஷனை குறைந்தது இரண்டு நபரிடமாவது ஷேர் செய்யும் ஆப்ஷன் இருக்க வேண்டும். ஆப்ஸில் பேனிக் பட்டன் கள் கட்டாயம் அழுத்தப்பட்டிருக்க வேண்டும். அழுது அழுத்தப்பட்டால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் செல்லும் வகையில் கட்டமைக்கப்பட வேண்டும்.

இது மட்டும் இல்லாமல் கேப் உறுதியானவுடன் கேப் டிரைவரின் தெளிவான புகைப்படம், மற்றும் அவர் குறித்த விபரம் பயணிக்கு சென்ற விட வேண்டும். மேலும் காரிலும் 6 இன்ச்க்கு குறையான டிஸ்பிளே ஜிபிஎஸ் டிஸ்பிளே கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் அந்த அப்ஸ் பயர்வால் மற்றும் தனி நபர் தகவல்களை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும்.

மேலும் கடந்த 7 ஆண்டுகளில் யாரேனும் போதைப்பொருள், அல்லது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி போலீசில் சிக்கியிருந்தால் அவர்களை பணியில் அமர்த்தக்கூடாது. பெண் ஓட்டுநர்களை இணைக்க கேப் நிறுவனம் முயற்சி செய்ய வேண்டும்.

இது மட்டும் இல்லாமல் கேப்ஸிற்காக பயன்படுத்தப்படும் எல்லா டாக்ஸிகளிலும் ஏசி வசதி இருக்க வேண்டும். மேலும் எக்கானமி லக்ஸரி என்ற இரண்டு விதமான கார் ஆப்ஷன்கள் பயணிகளுக்கு வழங்கப்படு வேண்டும். அது காரின் நீளத்தை பொருத்து மாறுபடலாம்.

4 மீட்டருக்கு குறைவான நீளம் உள்ள கார்களை எக்கானமி மற்றும் 4 மீட்டருக்கு அதிகமான நீளம் உள்ள கார்களை லக்ஸரி என்ற வகையில் கேப் நிறுவனங்கள் பிரித்து செயல்படுத்தலாம். இதில் எக்கானமி மற்றும் லக்ஸரி காரை பிரிக்கும் வகையில் எக்கானமி கார்களில் மஞ்சள் நிற ஸ்டிக்கரும், லக்ஸரி காரில் பச்சை நிற ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.

இந்த டாக்ஸியில் கட்டாயம் டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்ப்டிருக்க வேண்டும். மேலும் ரூப் பகுதியில் எல்சிடி பேனல்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதில் டாக்ஸி ப்ரியாக இருந்தால் பச்சை நிறத்திலும் ஆட்களை ஏற்றி பயணித்து கொண்டிருந்தால் சிவப்பு நிறத்திலும் விளக்குகள் எரிய வேண்டும்.

டாக்ஸிகள் அனைத்தும், சிஎன்ஜி, எல்பிஜி, எலெக்ட்ரிக் ஆகிய வகையிலான எரிபொருளை கொண்டே இயக்கும் படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

டாக்ஸிகளில் கட்டாயம் முதலுதவி பெட்டி மற்றம் தீ அணைப்பான்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும் கேப்ஸிற்காக பயன்படுத்தப்படும் கார்களில் கட்டாயம் சென்டர் லாக்கிங் சிஸ்டம் இருக்க வேண்டும். என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது வளர்ந்து வரும் கேப்ஸ் சர்வீஸ்களுக்கு மத்தியில் இது போன்ற சட்டம் மிக அவசியமானது எனவும், இந்த சட்டம் வருங்காலங்களில் கட்டாயம் மாற்றியமைக்கவோ மேலும் கடுமைக்காவோ படலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








