2030-க்குள் வாகன பயன்பாட்டை மின்சார ஆற்றலுக்கு மாற்ற திட்டம் ஏதுமில்லை... மாத்திப்பேசும் மத்தியரசு!
2030-க்குள் வாகன பயன்பாட்டை மின்சார ஆற்றலுக்கு மாற்ற திட்டம் ஏதுமில்லை... மாத்திப்பேசும் மத்தியரசு..!!
சரியாக 2017 ஆகஸ்டில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவின் அனைத்து வாகன பயன்பாடும் மின்சார ஆற்றலுக்கு மாற்றப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அன்று முதல் மின்சார கார் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு இந்தியாவில் அச்சாரம் போடப்பட்டதாக கருதப்பட்டது.
இந்திய அரசின் இந்த கொள்கை முடிவை ஏற்று பல வாகன தயாரிப்பு நிறுவனங்களும் மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கின.
Recommended Video


தொடர்ந்து வாகன நிறுவனங்களின் செயல்பாடுகளும், அரசு சார்பில் எடுக்கப்பட்ட ஊக்கமும், 2030ம் ஆண்டிற்கு முன்பாகவே இந்தியாவில் மின்சார வகான பயன்பாடு சாத்தியமாகிவிடும் என்ற தோற்றத்தை தந்தது.

ஆனால் அதே சமயத்தில் இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டை கொண்டுவருவதை விடவும், அதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவது தான் கடினம் என்ற கருத்தும் இருந்து வருகிறது.

இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டை கொண்டுவருவது தொடர்பான விவாதம் பெரியளவில் உருவாகி இருக்க, தற்போது இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது மத்திய அரசு.

மக்களைவியில் எழுந்த கேள்வி நேர விவதாத்தின் போது ஒரு பேசிய கனரக தொழில்துறை அமைச்சர் பாபுல் சூப்போரியா, 2030ம் ஆண்டிற்குள் வாகன தேவைகளை மின்சாரத்திற்கு மாற்ற தற்போது திட்டங்கள் ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளார்.
Trending On Drivespark Tamil:

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பை நம்பி தான், பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்புகளை உருவாக்கி வருகின்றன.

இதற்காக மத்திய அரசும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு மேலும் நிதி அயோக் திட்டத்தின் கீழ், மின்சார வாகன பயன்பாட்டிற்கான ரோடுமேப் அமைப்பும் பணியையும் முடுக்கிவிட்டது.

தற்போதைய பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பாபுல் சூப்போரியா பேசியதை பார்க்கும் போது, இந்திய அரசு மின்சார வகான பயன்பாட்டிற்காக தொடங்கிய அனைத்து திட்டங்களும் வீண் என்றே தெரிகிறது.

இந்தியாவின் மின்சார வாகன நகர்வுக்கு ஏற்றவாறு மாருதி சுஸுகி, மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே மின்சார கார்களை தயாரித்து அதை வெளியிடும் பணிகளில் இறங்கியுள்ளன.

இதுபோக ஜப்பானின் டொயோட்டா மற்றும் சுஸுகி நிறுவனங்கள் 2020ம் ஆண்டிற்குள் மின்சார வகானங்களை தயாரித்து இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருகின்றன.

இவை எல்லாவற்றையும் முந்தி தற்போது விற்பனை செய்து வரும் இரண்டு கார் மாடல்களில் மஹிந்திரா மின்சார கார்களை விரைவில் வெளியிடும் பணியில் மும்முரமாக உள்ளது.

தொடர்ந்து ரூ. 600 கோடியை இந்தியாவில் மின்சார வாகன கட்டமைப்பிற்காக மட்டும் மஹிந்திரா முதலீடு செய்வதாகவும் அறிவித்துள்ளது.
இதுதவிர டாடா மோட்டார்ஸ் தயாரித்து வரும் 10,000 மின்சார டிகோர் கார்களை மத்திய அரசின் இ.இ.எஸ்.எல் நிறுவனத்திற்கு வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

இதில் 500 கார்களை டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே இ.இ.எஸ்.எல் நிறுவனத்திற்கு வழங்கிவிட்டது. தொடர்ந்து நடக்கும் தயாரிப்பு பணிகளை வைத்து மீதமுள்ள 9500 டிகோர் கார்கள் மேலும் வழங்கப்படவுள்ளன.

மின்சார கார் பயன்பாட்டினை இந்தியாவில் ஏற்பது தொடர்பான மத்திய அரசின் தற்போதைய நிலைபாடு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

இருந்தாலும், மின்சார கார்களை மக்களிடையே கொண்டு சேர்க்க பல்வேறு பிரோமோஷன் யுக்திகளை அரசு கையாண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Trending On Drivespark Tamil:

இதற்கிடையில் 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் வாகன பயன்பாடு அனைத்தும் மின்சார ஆற்றலுக்கு மாற்றப்படும் என்ற கொள்கைக்கு ஏற்ப பல வாகன நிறுவனங்கள் துரிதமாக செயல்பட்டு வருகின்றன.
Trending DriveSpark YouTube Videos


Click it and Unblock the Notifications








