Just In
- 2 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- 3 hrs ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- 5 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 10 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
Don't Miss!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- News ரேஷனில் புதிய பொருள்.. குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக விவசாயிகளுக்கு ஹேப்பி.. சபாஷ்
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Movies ஜப்பான் வாடை வருதே.. தலைவர் 171 போஸ்டரை ட்ரோல் செய்யும் விஜய் ஃபேன்ஸ்.. லியோவுக்கு பதிலடியா?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
முதலில் இதை செய்து விடுங்கள்.. இல்லாவிட்டால் உங்கள் காரை எப்போது வேண்டுமானாலும் போலீசார் தூக்கலாம்..
இந்தியாவில் வாகனங்களுக்கு கட்டாயம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் என்பது கட்டாயம். இதனால் வாகனங்கள் வாங்கும் போதே இன்சூரன்ஸூம் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் வாகனங்களுக்கு கட்டாயம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் என்பது கட்டாயம். இதனால் வாகனங்கள் வாங்கும் போதே இன்சூரன்ஸூம் வழங்கப்படுகிறது.
புதிய வாகனம் வாங்கும் போது ஒரு வருட இன்சூரன்ஸ் மட்டுமே கட்டாயம் வழங்கப்படுகிறது. அதன் பின் அவர்கள்தான் அதை அவர்களது வசதிக்கு ஏற்றார்போல் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். ரூ.2 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான மதிப்பீடு கொண்ட இன்சூரன்ஸ் கட்டாயம் இருக்க வேண்டும்.
தற்போது பெறப்படும் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் காலம் உயர்த்தப்பட்டிருந்தாலும், பழைய கார்கள் இவ்வாறே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அந்த வாகனங்களின் இன்சூரன்ஸை புதுப்பிக்காமலேயே தொடர்ந்து சாலைகளில் பயன்படுத்தி வருகின்றனர்.
அவ்வப்போது போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டாலும் அவர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு இவர்கள் தொடர்ந்து இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களையே சாலைகளில் பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்கள் விபத்தில் சிக்காத வரை அரசிற்கு பிரச்னை இல்லை. ஆனால் அந்த வாகனங்கள் விபத்தில் சிக்கினால் அரசு பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டியது உள்ளது.
இந்த கார்கள் விபத்தில் சிக்கி அதில் மூன்றாம் நபருக்கு ரத்த காயமோ உயிரிழப்போ ஏற்பட்டால் அவர்கள் நேரடியாக கோர்ட்டில் வந்து அதற்கான நஷ்டஈடை கோருகின்றனர். அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இல்லாததால் கோர்ட்டை தவிர வேறு வழியில்லை.
இந்த சம்பவத்தில் காரின் உரிமையாளர் இன்சூரன்ஸ் வாங்காத தவறுக்கு கார் விபத்தில் சிக்கிய மூன்றாம் நபர் இன்னல்களை சந்திக்க வேண்டியது உள்ளது.
சமீபத்தில் இது குறித்த வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டிற்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் விபத்தில் பாதிக்கப்படும் மூன்றாம் நபர் எந்த தவறும் செய்யாதவர். அதே நேரத்தில் விபத்தும் தவிர்க்க முடியாதவையே.
இவ்வாறான சம்பவங்கள் இனி நிகழ்ந்தால் அதில் பாதிக்கப்பட்ட நபருக்கான நஷ்ட ஈட்டை இன்சூரன்ஸ் பெறாத வாகனத்தின் உரிமையாளரேதான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பு இந்தியா முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பியது.
கோர்ட் வழங்க சொல்லிய நஷ்ட ஈட்டை வாகனத்தின் உரிமையாளரால் வழங்க முடியவில்லை என்றால் அவர் மீது மீண்டும் ஒரு வழக்கு தொடரப்படலாம். இறுதியாக அவர் சிறைக்கு செல்லாம்.
அவ்வாறு நடந்தால் பாதிக்கப்பட்ட நபருக்கான நஷ்ட ஈடு கிடைக்காது. முதலில் வழக்கு தொடரப்பட்டதே நஷ்டத்தை ஈடு செய்ய கோரிதான். இவ்வாறு நடக்கும் பட்சத்தில் நஷ்டத்தை ஈடு செய்யவே முடியாது. இதை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் கோர்ட்டிற்கு சென்றது. அதில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் விபத்தை ஏற்படுத்தி அதில் பாதிக்கப்படும் மூன்றாம் நபருக்கு ஏற்படும் நஷ்டத்தை இன்சூரன்ஸ் இல்லாத வாகன உரிமையாளர்கள் ஈடு செய்ய வேண்டும்.
இதை அவர்கள் சம்பவம் நிகழ்ந்து 90 நாட்களில் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அது பொதுவெளியில் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகை மூன்றாம் நபருக்கு நஷ்ட ஈடாக வழங்கப்பட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
இதன் மூலம் இனி இந்தியாவில் இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் விபத்தை ஏற்படுத்தினாலும் அதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பலர் இன்சூரன்ஸ் வாங்கும் போது மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸைதான் அதிகமாக விரும்புகின்றனர். அதற்கான முக்கிய காரணம் அதற்காக செலுத்த வேண்டிய கட்டணம் குறைவும், அரசும் அதை மட்டும் தான் கட்டாயமாக்கியுள்ளது.
ஆனால் சொந்த சேதாரத்திற்கான இன்சூரன்ஸூம் மார்கெட்டில் உள்ளது. சொந்த சேதாரம் மற்றும் மூன்றாம் நபருக்கான சேதாரம் சேர்ந்து ஒட்டு மொத்தமாக காம்பிரஹேன்ஸிவ் இன்சூரன்ஸ் என்ற வகை இன்சூரன்ஸூம் உள்ளது.
இது போன்ற செய்திகளை உங்கள் மொபைலில் உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்!
நீங்கள் உங்களது தேவையை கணக்கிட்டு இன்சூரன்ஸ் மூலம் நீங்கள் விபத்தில் சிக்கினால் உங்களுக்கு கிடைக்கும் தொகையையும் கணக்கிட்டு உங்களுக்கு தகுந்த இன்சூரன்ஸை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!