Just In
- 25 min ago புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
- 2 hrs ago 2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
- 7 hrs ago இந்த விலைக்கு இப்படி ஒரு ஹூண்டாய் காரா! எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு வண்டிய எடுத்துருவீங்க!
- 7 hrs ago 2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!
Don't Miss!
- News வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைப்பு.. மணிப்பூரில் 'பூத் கேப்சர்' முயற்சி! இன்று மறு வாக்குப்பதிவு!
- Lifestyle 4 கத்திரிக்காயை வெச்சு இப்படியொரு சட்னி செய்யுங்க.. கத்திரிக்காய் பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..
- Finance டியூஷன் டீச்சருக்கு 2.5 லட்சம் ரூபாய் சம்பளம்.. துபாயில் இப்படியொரு வாய்ப்பா..?
- Sports வாயை மூடுங்க டுபிளசிஸ்! ரோகித் சர்மாவை பார்த்து திருந்துங்க.. ரெய்னா கடும் தாக்கு
- Technology மே 1 முதல் அமல்.. ICICI BANK-ன் புது ரூல்ஸ்.. IMPS உட்பட பல சேவைகளின் Service Charge-ல் திடீர் மாற்றம்!
- Movies கில்லி அளவுக்கு ’கோட்’ வந்தா நான் பினிஷ்.. வெங்கட் பிரபுவுக்கு ரசிகர்களின் ஒரே கோரிக்கை இதுதான்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
ராங் சைடில் வந்த காரை சரமாரியாக தாக்கிய பாதசாரி.. நம்மள விட கோவக்காரனா இருப்பான் போல!
ராங் சைடில் வந்த கார் ஒன்றை சரமாரியாக தாக்கி உண்டு இல்லை என்றாக்கிய பாதசாரி ஒருவரின் வீடியோ, பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ராங் சைடில் வந்த கார் ஒன்றை சரமாரியாக தாக்கி உண்டு இல்லை என்றாக்கிய பாதசாரி ஒருவரின் வீடியோ, பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான வாகன ஓட்டிகள் ராங் சைடில் (Wrong-side) வாகனம் இயக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். விரைவாக செல்ல வேண்டும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்ள கூடாது என்பது போன்ற காரணங்களுக்காகதான் அவர்கள் ராங் சைடில் பயணம் செய்கின்றனர்.
எதிரே வரும் வாகனத்துடன் நேருக்கு நேராக மோதி விடக்கூடிய அபாயம் உள்ளது என்பதை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளாமல் தொடர்ச்சியாக பலர் ராங் சைடில் வாகனங்களை இயக்கி கொண்டுதான் உள்ளனர். இதனால் அவர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படபோவதில்லை.
சரியான திசையில் வரும் வாகன ஓட்டிகளுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. ஆனால் ராங் சைடில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் இம்மியளவுக்கும் கூட அதனை பொருட்படுத்துவதே இல்லை.
இந்த சூழலில் கோவா மாநில தலைநகர் பனாஜியில் உள்ள ஒரு சாலையில், மாருதி சுஸுகி ஸ்விப்ட் கார் ஒன்று ராங் சைடில் வந்தது. இதனை கண்ட பாதசாரி ஒருவர் மிக கடுமையாக ஆத்திரமடைந்தார். உடனடியாக சாலையின் நடுவே சென்ற அவர், ராங் சைடில் வந்த ஸ்விப்ட் காரை வழிமறித்து நிறுத்தினார்.
சம்பவம் நடைபெற்ற சாலையில் நிரந்தரமான டிவைடர் எதுவும் இல்லை. ஆனால் அனைத்து வாகனங்களும் அதனதன் லேன்களில் சரியாக பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக சாலையின் நடுவில் ஆங்காங்கே சற்றே இடைவெளி விட்டு கூம்புகள் மட்டும் வைக்கப்பட்டிருந்தன.
முன்னதாக ராங் சைடில் வந்த ஸ்விப்ட் காரை பின்னோக்கி செல்லும்படி அந்த பாதசாரி கூறினார். அப்போது எதிர் திசையில் ஒரு கார் வந்தது. உடனே அந்த காரை முன்னோக்கி வரும்படி அந்த பாதசாரி வலியுறுத்தினார்.
ராங் சைடில் வந்த ஸ்விப்ட் காருக்கான வழியை அடைக்க வேண்டும் என்பதற்காகவே எதிர் திசையில் வந்த காரை முன்னோக்கி கொண்டு வந்து நிறுத்தும்படி அந்த பாதசாரி கூறினார். ஆனால் எதிர் திசையில் வந்த காரின் டிரைவருக்கு சற்றே தயக்கம் இருந்திருக்கலாம் என தெரிகிறது.
அவர் காரை முன்னோக்கி செலுத்தவில்லை. அப்படியே காரை நிறுத்தி கொண்டார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அந்த பாதசாரி, ராங் சைடில் வந்த ஸ்விப்ட் காரை தனது கைகளாலும், கால்களாலும் சரமாரியாக தாக்க தொடங்கினார்.
இதனால் ராங் சைடில் வந்த ஸ்விப்ட் காரின் டிரைவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ரிவர்ஸ் கியர் போட்டு காரை பின்னோக்கி செலுத்தினார். இதன் காரணமாக கூம்புகளுக்கும், எதிரே வந்து நின்று கொண்டிருந்த காருக்கும் இடையே சற்று இடைவெளி கிடைத்தது.
இதனை பயன்படுத்தி கொண்டு அந்த ஸ்விப்ட் காரின் டிரைவர் எஸ்கேப் ஆகிவிட்டார். ஆனால் ஸ்விப்ட் கார் அங்கிருந்து செல்லும் வரை, அந்த பாதசாரி அதனை தாக்கி கொண்டேதான் இருந்தார். இந்த சம்பவங்கள் எல்லாம் எதிரே வந்த காரின் டேஷ் போர்டு கேமராவில் பதிவாகியிருந்தன. கிரன் சிட்னிஸ் என்பவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
நகர பகுதிகளில் உள்ள சாலைகள் ஆகட்டும் அல்லது தேசிய நெடுஞ்சாலைகள் ஆகட்டும் ராங் சைடில் பயணிப்பது என்பது இந்தியாவில் ஒரு பொதுவான விஷயமாகவே மாறிவிட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக ராங் சைடில் வரும் வாகனங்களால் விபத்து நிகழ்ந்து உயிர் பலி ஏற்படுகிறது.
அதே நேரத்தில் நகர பகுதிகளில் உள்ள சாலைகளில் ராங் சைடில் வரும் வாகனங்களினால் போக்குவரத்து நெரிசலும், தேவையில்லாத குழப்பமும் ஏற்படுகிறது. சில சமயங்களில் ராங் சைடு வாகனங்களால் போக்குவரத்து அப்படியே ஸ்தம்பித்து நின்று விடுகிறது.
ராங் சைடில் செல்வதன் மூலமாக நேரத்தை மிச்சம் பிடிக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் ராங் சைடில் வாகனத்தை ஓட்டி வரும் வாகன ஓட்டிக்கும், எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கும் அது பாதுகாப்பானது அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ராங் சைடில் பயணம் செய்வது என்பது இந்தியாவில் ஒரு குற்றமாக கருதப்படுகிறது. எனவே ராங் சைடில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரத்தை நமது சட்டம் போலீசாருக்கு வழங்கியுள்ளது.
ஆனால் மிக அதிக அளவிலான தொகை அபராதமாக விதிக்கப்படுவது கிடையாது. அத்துடன் ஒரு சில போலீசார் பணத்தை பெற்று கொண்டு, ராங் சைடில் வரும் வாகன ஓட்டிகளை அனுப்பி விடுகின்றனர். இது போன்ற காரணங்களால்தான் தொடர்ந்து பலர் ராங் சைடில் வாகனங்களை இயக்கி கொண்டே உள்ளனர்.
ராங் சைடில் வரும் வாகனங்களால், வாகன ஓட்டிகளுக்கு இடையே மோதல் ஏற்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட வீடியோவில் கண்ட பாதசாரியே மிகுந்த ஆத்திரத்தில்தான் இருந்தார். அந்த நேரத்தில் ஸ்விப்ட் காரில் இருந்தவர்கள் வெளியே வந்திருந்தால் ஒருவேளை கைகலப்பு நிகழ்ந்திருக்க கூடும்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படியான அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. என்றாலும் கடந்த சில மாதங்களுக்கு முன், ராங் சைடில் வந்த வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தியதால், இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்ட விபரீதம் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
மஹிந்திரா தார் கார் ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன் ராங் சைடில் வந்து கொண்டிருந்தது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் அந்த மஹிந்திரா தார் காரை தடுத்து நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த மஹிந்திரா தார் டிரைவர், காரை விட்டு இறங்கி வந்து, இரு சக்கர வாகன ஓட்டியை தாக்க தொடங்கினார்.
எனினும் தவறை தட்டிக்கேட்ட அந்த இரு சக்கர வாகன ஓட்டிக்கு உதவி செய்ய ஒருவர் கூட முன்வரவில்லை என்பதுதான் துரதிருஷ்டம். ஆனால் நல்ல வேளையாக கோவாவில் ராங் சைடில் வந்த ஸ்விப்ட் காரை தடுத்து நிறுத்திய பாதசாரிக்கு அவ்வாறான அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை.
இதர வாகன ஓட்டிகளுடனான தேவையில்லாத வாக்குவாதம், கைகலப்புகளுக்கும் கூட ராங் சைடு டிரைவிங் ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்பதை இந்த சம்பவங்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. எனவே ராங் சைடில் பயணம் செய்வதை நிறுத்தினால் இது போன்ற பிரச்னைகளையும் தவிர்த்து விட முடியும்.
அத்துடன் போலீசார் விதிக்கும் அபராதங்களில் இருந்தும் தப்பித்து விடலாம். ஆம், உண்மைதான். சாலையில் சண்டையிட்டு கொள்ளும் வாகன ஓட்டிகளால் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே அவ்வாறான வாகன ஓட்டிகளின் புகைப்படங்களை யார் வேண்டுமானாலும் போலீசாருக்கு அனுப்பலாம்.
அதன்பின் அந்த புகைப்படங்கள் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்திவிட்டு சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பர். இந்தியாவின் சில மாநிலங்களில் மட்டும் தற்போது இந்த நடைமுறை அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
-
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
-
இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?