Just In
- 6 min ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 2 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 8 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 8 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
Don't Miss!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பீஜோ - பிர்லா நிறுவனத்தின் கார் எஞ்சின் ஆலை ஓசூரில் திறப்பு!
பிஎஸ்ஏ- சிகே பிர்லா கூட்டணி இணைந்து கார்களுக்கான எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன் உற்பத்திக்கான PSA AVTEC பவர்ட்ரெயின் என்ற பெயரில் புதிய ஆலையை ஓசூரில் அமைத்துள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ கார் குழுமம் பீஜோ மற்றும் சிட்ரோவன் பிராண்டுகளில் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், இந்த நிறுவனம் மீண்டும் இந்தியாவில் கால் பதிப்பதற்கான முயற்சிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரம் காட்டி வருகிறது.
மேலும், இந்தியாவில் தனித்து இறங்குவதைவிட, இந்திய நிறுவனத்தின் கூட்டணியுடன் செயல்படுவது சிறந்தது என்று முடிவு செய்தது. அதன்படி, ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் தாய் நிறுவனமான சிகே பிர்லா குழுமத்துடன் இணைந்து செயல்பட இருக்கிறது. மேலும், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான அம்பாசடர் காரின் பெயர் உரிமத்தையும் பெற்றுள்ளது பிஎஸ்ஏ குழுமம்.
இந்த நிலையில், பிஎஸ்ஏ- சிகே பிர்லா கூட்டணி இணைந்து கார்களுக்கான எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன் உற்பத்திக்கான PSA AVTEC பவர்ட்ரெயின் என்ற பெயரில் புதிய ஆலையை ஓசூரில் அமைத்துள்ளது. இந்த ஆலை திறப்பு விழாவில் பிஎஸ்ஏ குழுமத் தலைவர் கார்லோஸ் தவேர்ஸ் மற்றும் சிகே பிர்லா குழுமத்தின் தலைவர் பிர்லா ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இந்த புதிய ஆலையில் ஆண்டுக்கு 3 லட்சம் யூனிட்டுகள் டிரான்ஸ்மிஷன்கள், 2 லட்சம் யூனிட்டுகள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான கார் எஞ்சின்களையும் உற்பத்தி செய்ய இயலும். இந்த ஆலை ரூ.600 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு இருக்கிறது. நேரடியாக 800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஆலையிலிருந்து உற்பத்தியாகும் எஞ்சின்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன்கள் இந்தியாவிற்கான கார் மாடல்களுக்கு மட்டுமின்றி, உலக அளவில் விற்பனை செய்யப்படும் பீஜோ மற்றும் சிட்ரோவன் காகர்களில் பயன்படுத்தப்படும். வெளிநாடுகளில் செயல்படும் பிஎஸ்ஏ குழுமத்தின் கார் ஆலைகளுக்கு, இங்கிருந்து கார் எஞ்சின்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன்களை ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.
Recommended Video
பிஎஸ்ஏ குழுமத்தின் கார்களுக்கான கியர்பாக்ஸ்களை முதல் கட்டமாக இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. அதேபோன்று, 2020ல் இந்தியாவில் அமலுக்கு வர இருக்கும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின்களும் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
இதன்மூலமாக, பிஎஸ்ஏ குழுமம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் கார்களில் பெரும்பான்மையான உதிரிபாகங்கள் இந்திய சப்ளையர்களிடமிருந்தே பெறப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், விலையை சந்தைப்போட்டிக்கு தக்கவாறு சவாலாக நிர்ணயிக்க முடியும்.
இந்த நிலையில், அம்பாசடர் காரை மீண்டும் புதிய தலைமுறை மாடலாக பிஎஸ்ஏ குழுமம் அறிமுகம் செய்யும் என்ற தகவலும் இந்திய கார் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான விஷயமாக கருதப்படுகிறது. ஆனால், இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இப்போது இல்லை.
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?