2020ம் ஆண்டு வரை சிங்கப்பூரில் இனி யாரும் புதிய கார்கள் வாங்கக்கூடாது... காரணம் இதுதான்..!!
2020ம் ஆண்டு வரை சிங்கப்பூரில் இனி யாரும் புதிய கார்கள் வாங்கக்கூடாது... காரணம் இதுதான்..!!
சிங்கப்பூரில் கார்களின் எண்ணிக்கையை 0.25 சதவீதத்திலிருந்து, பூஜ்ஜியமாக மாற்றுவதற்கான முயற்சியில் அந்நாட்டு அரசு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதன்படி, அடுத்தமாதம் பிப்ரவரி முதல் 2020ம் ஆண்டு வரை புதிய கார் விற்பனையை தடை செய்யப்போவதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.
Recommended Video


உலகளவில் மக்கள் தொகையை அதிகம் கொண்ட நாடுகள் ஆசிய கண்டத்தில் தான் உள்ளன. அவற்றில் சிங்கப்பூரும் முக்கிய இடம் பிடிக்கிறது.

தொழில் வளர்ச்சி, சுகாதாரம், தொழில்நுட்ப மேம்பாடு என மனித வாழ்க்கையில் அடிப்படை வசதிகளை தாண்டிய அத்தியாவச வாழ்க்கை முறைக்கு சிங்கப்பூர் சிறந்த நாடாக உள்ளது.

ஆசியாவில் இருக்கும் நாடுகளில் தொழில் சார்ந்த வளர்ச்சிக்காக மட்டுமில்லாமல், மேம்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழவும் பலர் சிங்கப்பூரை தேர்வு செய்கிறார்கள்.
Trending On Drivespark Tamil:

தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள் பெருக்கத்தால், உலகளவில் மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நாடுகளில் சிங்கப்பூரும் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அந்த நாட்டில் சாலைகளில் வாகன நெரிசலும் கடுமையான அளவு உயர்ந்துவிட்டது. அதற்கு மாற்றாக பொதுபோக்குவரத்து தேவைகளும் சரி விகிதமாக உள்ளன.

இருந்தாலும், தனி நபர் வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்கள் என போக்குவரத்து தேவைக்கான வாகன பயன்பாடு அங்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது.

சிங்கப்பூரின் மொத்த நிலப்பரப்பில், 12 சதவீதம் சாலைப்போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டது என அந்நாட்டு அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதான தேவைகளுக்காக நாட்டின் ஏனைய பகுதிகளிலும் சாலை கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு விட்டன. இதனால் சிங்கப்பூர் அரசுக்கு புதிய சாலை வசதிகள் செய்வதற்கான எந்த நோக்கமும் இல்லை.

இந்த காரணத்தினால் தான் வரும் பிப்ரவரி முதல் 2020ம் ஆண்டு வரை புதிய கார் விற்பனையை நிறுத்தப்போவதாக சிங்கப்பூர் அரசு விளக்கமளித்துள்ளது.

2000ம் ஆண்டிற்கு பிறகு சிங்கப்பூரின் மக்கள் தொகை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு 6 லட்சம் தனியார் மற்றும் வாடகை கார்கள் இயங்குகின்றன.
Trending On Drivespark Tamil:

இந்த தகவலை சிங்கப்பூரின் வாகன போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
ஆனால் இந்தியா போன்ற பல்வேறு நாடுகள் செய்ய முயற்சித்து வரும் மின்சார கார் தயாரிப்பிலும் சிங்கப்பூர் அரசு ஈடுபாடு காட்டி வருகிறது.

2018 முதல் 2020 வரை அரசின் உத்தரவு மூலம் கிடைத்துள்ள இந்த கால இடைவெளியை சரியாக பயன்படுத்தி, திறம்பட செயல்பட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்களும் புதிய முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trending DriveSpark YouTube Videos


Click it and Unblock the Notifications