மைலேஜ் மற்றும் எமிஷன் கட்டுப்பாட்டில் முறைகேடில் ஈடுபட்ட சுஸூகி
ஜப்பானிய கார் நிறுவனமான சுஸூகி மோட்டார்ஸ் நிறுவனம் மைலேஜ் மற்றும் எமிஷன் டெஸ்டில் ஜப்பானில் முறைகேடு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
ஜப்பானிய கார் நிறுவனமான சுஸூகி மோட்டார்ஸ் நிறுவனம் மைலேஜ் மற்றும் எமிஷன் டெஸ்டில் ஜப்பானில் முறைகேடு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

ஜப்பான் நாட்டின் நிலம்,கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சத்திடம் சுஸூகி, மஸாடா, டொயோட்டா, ஆகிய நிறுவனங்கள் எமிஷன் டெஸ்டில் முறைகேட்டில் ஈடுபட்டதை ஒப்பு கொண்டுள்ளது. மேலும் தற்போது தயாரிப்பில் உள்ள பொருட்களின் சாம்பிள்களையும் சமர்பித்துள்ளது.

இது முற்றிலும் அனுமதிக்கப்பட்ட அளவில் இருந்து மாறுதலாக இருந்தது. இருந்தாலும் அந்நிறுவனம் தற்போது அவ்வாறாக தயாரிக்கபட்ட ரீகால் செய்யது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுஸூகி நிறுவனம் அதிக அளவிலானக கார்கள் தயாரிக்கப்படுவதால் சரியான அமையாத வாகனங்களை கண்டறிவது எங்களுக்கு கடினமாக உள்ளது. மேலும் எங்கள் நிறுவனமும் தொழிலளர்களுக்கு போதுமானதாக இதை விளக்கவில்லை." என கூறினார்.

சுஸூகி நிறுவனம் கடந்த 2012ம் ஆண்டு தயாரித்த 12,819 வாகனங்களில் 6401 கார்களில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போல மஷாட்டா நிறுவனம் 2014ம் ஆண்டு தயாரித்த 1875 வாகனங்களில் 72 வாகனங்களில் முறைகேடு நடந்துள்ளது.

யமஹாநிறுவனம் தயாரித்த 335 வாகனங்களில் 7 வாகனங்கள் முறைகேடாக தயாரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்நாட்டு அமைச்சகம் வாகன தயாரிப்பாகளுக்கு தாங்கள் தயாரிக்கும் வானகங்களுக்கான சோதனை முடிவுகளை சேமிக்கவும், அதை பின்னால் மாற்றாமல் பாதுகாக்க வழி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்


Click it and Unblock the Notifications








