Just In
- 38 min ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 42 min ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 2 hrs ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 3 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
புதிய கார் எனக்கூறி பழைய காரை வாடிக்கையாளரின் தலையில் கட்டிய டீலர்.. வசமாக சிக்கி கொண்டது டாடா
புதிய கார் என்ற போர்வையில், வாடிக்கையாளருக்கு பழைய காரை விற்பனை செய்த டாடா நிறுவன டீலரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய கார் என்ற போர்வையில், வாடிக்கையாளருக்கு பழைய காரை விற்பனை செய்த டாடா நிறுவன டீலரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், டாடா நிறுவனத்தையும் நுகர்வோர் நீதிமன்றம் தண்டித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியை சேர்ந்தவர் அதுல் குமார் அகர்வால். பஞ்ச்குலாவில் உள்ள பனர்ஸிதாஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தில், 3.61 லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய டாடா கார் ஒன்றை, கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி, அதுல் குமார் அகர்வால் வாங்கினார்.
ஆனால் வாங்கிய முதல் நாளில் இருந்தே கார் அடிக்கடி பழுதாகி கொண்டே இருந்தது. எனினும் முதல் சர்வீஸ் முடிந்த பிறகு, பிரச்னைகள் சரியாகி விடும் என அதுல் குமார் அகர்வால் நினைத்தார். இதன்படி 2015ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி, முதல் சர்வீசுக்கு கார் விடப்பட்டது. ஆனால் அதன்பின்பும் முன்னேற்றம் இல்லை.
இதனால் காரில் ஏற்பட்ட பிரச்னைகளை எல்லாம், சண்டிகரில் உள்ள பெர்க்லி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு (டாடா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையம்), அதுல் குமார் அகர்வால் பல முறை தெரியப்படுத்தினார். ஆனால் அங்குள்ள டெக்னீசியன்கள் எவரும் காரை சரி செய்து தரவில்லை.
குறிப்பாக, காரில் இருந்து அதிக அளவில் கரும்புகை வெளியாகும் பிரச்னை நீடித்து கொண்டே இருந்தது. எனவே அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான டாடா டீலர்களிடம் அதுல்குமார் அகர்வால் சென்று விட்டார். ஆனால் ஒருவராலும் பிரச்னையை சரி செய்ய முடியவில்லை.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அதுல் குமார் அகர்வால், மாவட்ட குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் உத்தரவின் பேரில், சண்டிகரில் உள்ள பிஇசி யுனிவர்சிட்டி ஆப் டெக்னாலஜி பேராசிரியர்கள் அடங்கிய கமிட்டி, அதுல் குமார் அகர்வாலின் காரை பரிசோதனை செய்தது.
அப்போது டர்போசார்ஜர், இன்ஜெக்டர், ப்யூயல் லைன் ஆகியவற்றை மாற்றியும் கூட, அதிக அளவிலான கரும்புகை வெளியாவது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் பிக் அப் மிகவும் மந்தமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக அந்த கார் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது.
எல்லாவற்றுக்கும் மேலாக, பனர்ஸிதாஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனமானது, புதிய கார் என்ற பெயரில் பழுதடைந்த பழைய காரை அதுல் குமார் அகர்வாலுக்கு விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கி, தற்போது நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதன்படி பழைய காரை புதிது என விற்பனை செய்த பனர்ஸிதாஸ் ஆட்டோமொபைல்ஸ், பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்காத பெர்க்லி டாடா மோட்டார்ஸ் (அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையம்) மற்றும் டாடா மோட்டார்ஸ் (கார் உற்பத்தியாளர்) ஆகியோர், அதுல் குமார் அகர்வாலுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
அத்துடன் பழைய காருக்கு பதிலாக அதுல் குமார் அகர்வாலுக்கு புதிய கார் வழங்க வேண்டும் அல்லது 3.61 லட்ச ரூபாயை வட்டியுடன் சேர்த்து திருப்பி வழங்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், ஒருவரது ஸ்கோடா லாரா காரின் ரப்பர் பெல்ட் பழுதானது. இந்த சம்பவத்தில் டீலர்கள் எப்படி எல்லாம் கார் ஓனரை ஏமாற்றப்பார்த்தார்கள், அதில் இருந்து அவர் எப்படி தப்பினார் என்பதையும் இங்கே கிளிக் செய்து பாருங்கள்.
டாடா நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள டாடா டியாகோ என்ஆர்ஜி காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் கீழே காணலாம்...
-
சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் விஜய் பட வில்லன்!! கார்களை விற்றாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு