Just In
- 1 hr ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 6 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 6 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 8 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
Don't Miss!
- News கேரளா லோக்சபா தேர்தலில்.. வெற்றியை தீர்மானிக்கும் ஜாதி, மதங்கள் எவை? யார் எந்த பக்கம்? முழு விவரம்
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டிரக்கில் மோதி தீப்பிடித்த டாடா ஹெக்ஸா கார்... அதிவேகத்தால் நடந்த பயங்கரம்!!
மும்பையில், அதிவேகத்தில் சென்ற டாடா ஹெக்ஸா கார் சாலையை சுத்தப்படுத்தும் டிரக் மீது மோதி பயங்கர விபத்தில் சிக்கியது. அந்த டாடா ஹெக்ஸா கார் மணிக்கு 120 கிமீ வேகத்தில் வந்தபோது டிரக்கில் மோதியதாக போலீசார
மும்பையில், அதிவேகத்தில் சென்ற டாடா ஹெக்ஸா கார் சாலையை சுத்தப்படுத்தும் டிரக் மீது மோதி பயங்கர விபத்தில் சிக்கியது. இதில், இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
அதிவேகத்தில் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து ஏற்கனவே பலமுறை செய்திகள் வழங்கி இருக்கிறோம். அதற்கு சான்றாக சில விபத்து சம்பவங்களின் அடிப்படையிலான செய்திகளையும் தந்து வந்துள்ளோம். அந்த வரிசையில், மும்பையில் நடந்துள்ள டாடா ஹெக்ஸா கார் விபத்து அதிவேகத்தின் ஆபத்தை மீண்டும் ஒருமுறை பாடம் கற்பித்துள்ளது.
மும்பை கார்பரேஷனுக்கு சொந்தமான டிரக் ஒன்று நேற்றுமுன்தினம் அதிகாலை சாலையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்தது. தூய்மைப்படுத்தும் பணிகளின்போது அந்த டிரக் மெதுவாகவே இயக்கப்படும்.
இந்த நிலையில், அந்த சாலையில் அதிவேகத்தில் வந்த டாடா ஹெக்ஸா கார் அந்த டிரக்கின் பின்புறத்தில் அதிவேகத்தில் மோதியது. இந்த பயங்கர விபத்தில் கார் அப்பளம் போல உருக்குலைந்தது. கார் மோதிய வேகத்தில் தீப்பிடித்துக் கொண்டது.
உடனடியாக அந்த சாலையில் சென்றவர்கள் உள்ளே இருந்தவர்களை மீட்க போராடினர். அப்போது காரில் இருந்த இரண்டு இளைஞர்களில் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்றொருவர் இடிபாடுகளில் சிக்கியதால் தீயில் கருகி உயிரிழந்தார்.
இந்த பயங்கர விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காரை ஓட்டியது கல்யாண் பகுதியை சேர்ந்த சாஹர் (21) என்று தெரிய வந்துள்ளது. அவருக்கு பக்கத்தில் அவரது நண்பர் சச்சின் சுபாஷ்(23) அமர்ந்து வந்துள்ளார்.
விபத்தில் சிக்கிய டாடா ஹெக்ஸா கார் மணிக்கு 120 கிமீ வேகத்தில் வந்ததாக போலீசார் கூறினர். அப்போது மெதுவாக இயக்கப்பட்ட டிரக்கை கணிக்க முடியாமல் ஓட்டுனர் மோதி விட்டதாக தெரிய வந்துள்ளது.
சாலைத் தடுப்பில் இருந்த கேபிளில் இருந்து தீப்பொறிகள் ஏற்பட்டு காரில் தீப்பற்றியதற்கு காரணமாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் காரில் பற்றிய முழுமையாக அணைக்கப்பட்ட பின்னரே சச்சினின் உடல் மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டாடா ஹெக்ஸா கார் மிகச் சிறந்த கட்டுமானம் பெற்றிருந்தாலும், இவ்வளவு அதிவேகத்தில் செல்லும்போது ஏர்பேக், கட்டுமானத் தரம் போன்றவை கைகொடுக்காது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி இருக்கிறது.
மேலும், நகரச் சாலைகளில் ஓட்டும்போது இந்தளவு வேகத்தில் ஓட்டுவதும் எந்தநேரத்திலும் விபத்தை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்து கொள்ளலாம். எந்த நேரத்தில் வாகனங்கள் அல்லது பாதசாரிகள் குறுக்கே வருவார்கள் என்பதை கணிக்க முடியாத விஷயம்.
நாம் ஏற்கனவே சொன்னது போல், இரவு நேரங்களில் போதிய பார்வை திறன் இருக்காது என்பதுடன், காலியாக இருக்கும் சாலைகளில்தான் அதிக கவனத்துடன் செல்ல வேண்டும். அந்த நேரத்தில்தான், பாதசாரிகள் அல்லது வாகனங்கள் வேகமாக கடக்க முயலும் என்பதையும் மனதில் வைக்கவும்.
எவ்வளவு அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட காராக இருந்தாலும், மிதமான வேகத்தில் இயக்குவதன் மூலமாகவே, இதுபோன்ற பயங்கர விபத்துக்களை தவிர்க்க முடியும். குறிப்பாக, இரவு நேரத்தில் அதிவேகத்தில் செல்வது ஆபத்தை இரட்டிப்பாக்கும்.
Source: DNA
-
இந்த விலைக்கு இப்படி ஒரு ஹூண்டாய் காரா! எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு வண்டிய எடுத்துருவீங்க!
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!