Just In
- 1 hr ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 2 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 4 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- News செ.கு. தமிழரசன் வந்துட்டாரு.. முதல் குறியே பாஜக + நிர்மலா சீதாராமன்தான்.. எடப்பாடி பழனிசாமிக்கு குஷி
- Movies அபிராமியை தீர்த்து கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மின் கம்பத்தில் மோதிய டாடா நெக்ஸான்... இந்த முறையும் அடடே, மூன்று ஆச்சர்ய குறி!!!
கோவாவில் உள்ள நான்கு வழிச் சாலை ஒன்றில் சென்ற புத்தம் புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி கட்டுப்பாட்டை இழந்து, மின் கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியது.
கார் ஓட்டும்போது கவனக்குறைவும், அதிவேகமும் அழையா விருந்தாளிகளாக விபத்துக்கு வழி வகுக்கும் என்பதை விளக்க பல சம்பவங்களை சான்றாக வழங்கி இருக்கிறோம். இந்த சூழலில், அதிவேகத்தால் ஏற்பட்ட மற்றொரு கார் விபத்து நமக்கு மீண்டும் எச்சரிக்கையை தந்துள்ளது.
கோவாவில் உள்ள நான்கு வழிச் சாலை ஒன்றில் புத்தம் புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி அதிவேகமாக சென்றுள்ளது. நான்கு வழிச்சாலை காலியாக இருந்ததால், ஓட்டுனர் காரை அதிவேகத்தில் செலுத்தியதாக தெரிகிறது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த நெக்ஸான் எஸ்யூவி சாலைக்கு நடுவில் உள்ள தடுப்புப் பகுதியில் இருந்த மின் கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் டாடா நெக்ஸான் காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. கூரை, பின்புறம் வரை அந்த மோதல் தாக்கத்தால் பலத்த சேதமடைந்துள்ளது.
குறுக்கே ஏதேனும் வாகனம் அல்லது பாதசாரி வந்ததால், ஓட்டுனர் காரை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், அந்த கார் தற்காலிக பதிவு எண்ணுடன் இருப்பதால், டீலர் பணியாளர்களால் எடுத்து வரப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
கார் விபத்துக்குள்ளானதும் அதில் இருந்த மூன்று பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும், கார் கதவுகள் திறந்து கொண்டதால், அவர்கள் எளிதாக வெளியேறியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறி இருக்கின்றனர்.
இதுபோன்ற விபத்துக்களின்போது கார் கதவுகள் நசுங்கி பூட்டிக் கொண்டால், காரில் பயணித்தவர்கள் அவசர சமயத்தில் வெளியேற முடியாது. இந்த காரில் கதவுகள் திறந்து கொண்டதால் எளிதாக வெளியேறி இருப்பது நல்ல விஷயம்.
ஒவ்வொரு காரின் இயங்கு தன்மை மற்றும் சமநிலை ஆகியவை மாறுபடும். எனவே, நீண்ட கார் ஓட்டிய அனுபவம் இருந்தபோதிலும், புதிய காரை ஓட்டும்போது நிதானம் அவசியம். சில நாட்கள் ஓட்டி பிடிபட்ட பிறகு சற்று வேகத்தை கூட்டுவது பயன்தரும்.
மேலும், நகரங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் வழியாக செல்லும் நான்கு வழிச்சாலைகளில் கார் ஓட்டும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். சிறு கவனக் குறைவு கூட விபத்துக்கு வழிகோலும்.
அத்துடன், குடியிருப்பு உள்ள பகுதிகளில் வழியாக செல்லும் நான்கு வழிச்சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்தாலும் கூட அதிவேகத்தில் செல்வதை அறவே தவிர்ப்பது அவசியம். நிதானமான வேகத்தில் கடந்து சென்று குடியிருப்புப் பகுதிகளை தாண்டிய பிறகு வேகத்தை கூட்டிச் செல்வது புத்திசாலித்தனமாக இருக்கும்.
பொதுவாக ஓட்டுனர்களுக்கு அதிக நிதானமும், சகிப்புத் தன்மையும் இருக்க வேண்டும். இல்லையெனில், இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க முடியாத விஷயமாகவிடும். இந்த விபத்தில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டு இருப்பதே பெரிய விஷயம்.
Source: Team-BHP
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?