Just In
- 4 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 4 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 4 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 9 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கார்களின் பாதுகாப்பை அதிகரிக்க டிபிஎம்எஸ் டிவைஸை கையிலெடுத்த மாருதி சுசூகி...அப்படினா என்ன?
மாருதி சுசூகி நிறுவனம் தனது ஸ்விப்ட், டிசையர், ப்ரீஸா உள்பட அனைத்து கார்களுக்கும், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (டி.பி.எம்.எஸ்.) என்ற பாதுகாப்பு டிவைஸை வழங்குகிறது. டிபிஎம்எஸ் எப்படி வேலை செய்கிறது
மாருதி சுசூகி நிறுவனம் தனது ஸ்விப்ட், டிசையர், ப்ரீஸா உள்பட அனைத்து கார்களுக்கும், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (டி.பி.எம்.எஸ்.) என்ற பாதுகாப்பு டிவைஸை வழங்குகிறது. டிபிஎம்எஸ் எப்படி வேலை செய்கிறது? அதன் மூலம் விபத்துக்களை எப்படி தவிர்க்கலாம்? என்பது தொடர்பான விரிவான தகவல்களை பார்க்கலாம்.
டயர் வெடித்து கொத்து கொத்தாய் மடியும் உயிர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே, கார் டயர் வெடித்து அரசு பஸ் மீது மோதியது. கடந்த ஜனவரி மாதம் நடந்த இந்த கோர விபத்தில், 6 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் டயர் வெடித்ததால், சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இந்த விபத்திலும் 6 பேர் மரணம் அடைந்தனர்.
இப்படி கொத்து கொத்தாய் உயிர்களை பலி வாங்கிய மேற்கண்ட 2 விபத்துக்களும் பொதுவான ஒரு விஷயமாக இருப்பது டயர் வெடிப்புதான். காற்றின் அழுத்தம் சரியான அளவில் இல்லாத சூழ்நிலைகளில் வாகனங்களின் டயர்கள் வெடித்து விடுகின்றன.
குறிப்பாக வாகனங்கள் அதிக வேகத்தில் செல்லும்போதுதான், திடீரென டயர்கள் வெடித்து விடுகின்றன. இதனால் கட்டுப்பாட்டை இழந்து விடும் வாகனங்கள், தாறுமாறாக ஓடி விபத்தில் சிக்கி, பல உயிர்களை ஆட்கொண்டு விடுகின்றன.
டிபிஎம்எஸ்
டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (டி.பி.எம்.எஸ்.) இந்த பிரச்னைக்கு சரியான தீர்வாக இருக்கும். வாகனங்களுக்கான பாதுகாப்பில் டி.பி.எம்.எஸ் டிவைஸ்களின் பங்கு இன்றியமையாதது.
மாருதி சுசூகி கார் நிறுவனமானது தற்போது இந்த டிவைஸ்களை, அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரிஸாக வழங்குகிறது. இதன் விலை 12,990 ரூபாய்.
புதிய ஸ்வீப்ட், டிசையர், ப்ரிஸா உள்பட மாருதி சுசூகியால் விற்பனை செய்யப்பட்ட ஏறத்தாழ அனைத்து கார்களிலும், இந்த டிவைஸை, அந்த நிறுவனத்தின் டீலர்கள் பொருத்தவுள்ளனர்.
எப்படி வேலை செய்கிறது?
டிபிஎம்எஸ் டிவைஸ் பொதுவாக 5 சென்சார்களை கொண்டது. ஸ்பேர் சக்கரம் உள்பட காரின் ஒவ்வொரு சக்கரத்திலும் ஒரு சென்சார் பொருத்தப்படும். டயர்களில் உள்ள காற்றின் அழுத்தத்தை கணக்கிடும் பணியை இந்த சென்சார்கள் செய்கின்றன.
பின்னர் டயர்களில் உள்ள காற்றின் அழுத்தம் குறித்த தகவல்களை, டேஸ்போர்ட் இன்ஸ்ட்ரூமெண்டல் பேனலில், அந்த சென்சார்கள் தெரியப்படுத்தும். ப்ளூடூத் டெக்னாலஜி மூலமாக, இந்த பணியை அந்த சென்சார்கள் செய்யும்.
இதன்மூலமாக காரின் டிரைவர்கள், டயர்களில் உள்ள காற்றின் அழுத்தத்தை, சீராக கண்காணித்து, அதற்கு ஏற்றபடி காற்றின் அழுத்தத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும்.
டயர்களில் உள்ள காற்றின் அழுத்தம் குறிப்பிட்ட எல்லையை கடந்து செல்லும்போது, குறிப்பாக மிக அதிக வேகத்தில் கார் சென்று கொண்டிருக்கையில், அப்படி நிகழ்ந்தால், டிரைவருக்கு உடனடியாக அந்த சென்சார்கள் எச்சரிக்கையை வழங்கி விடும்.
இதன்மூலம் டிரைவர் சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு, டயர்களை கூல் ஆக்கிய பின்பு, மீண்டும் பயணத்தை தொடரலாம்.
ஒருவேளை டயரில் உள்ள காற்றின் அழுத்தம் வழக்கத்தை விட குறைவாக சென்று விட்டாலும் கூட, டிரைவரால் அதனை சரியான அளவுக்கு கொண்டு வர முடியும்.
டயரின் உள்ளே இருந்து மிக துல்லியமான ரீடிங்குகளை அந்த சென்சார்கள் வழங்குகின்றன. எனவே பாதுகாப்பை அதிகரித்து கொள்ள வேண்டுமானால், டிபிஎம்எஸ் டிவைஸ்களை பொருத்தி கொள்வதே சிறந்தது.
இந்தியாவிலேயே மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்கள்தான் அதிகம் விற்பனையாகின்றன. ஆனால் பிற நிறுவனங்களின் பாதுகாப்பு அம்சங்களோடு ஒப்பிட்டால், மாருதி சுசூகி நிறுவனம் பின்தங்கி விடுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்கள் நிறுவன கார்களின் பாதுகாப்பை அதிகரிப்பதில் மாருதி சுசூகி தற்போது அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
மாருதி சுசூகி கார்களுக்கு மட்டுமல்ல. அனைத்து வாகனங்களுக்கும் டி.பி.எம்.எஸ். டிவைஸை பொருத்தி கொள்ள முடியும். மார்க்கெட்டில் பல டி.பி.எம்.எஸ். யூனிட்கள் கிடைக்கின்றன. உங்கள் காருக்கு பொருத்தமான டி.பி.எம்.எஸ். யூனிட்டை தேர்வு செய்ய நீங்கள் இன்டர்நெட்டின் உதவியை நாடலாம்.
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?