Just In
- 4 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 4 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 5 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 5 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பெட்ரோல் விலை உயர்வால் விற்பனையின்றி டீலர்களிடம் தேக்கமடையும் கார்கள்...
இந்தியாவில் உள்ள டீலர்ஷிப்களில் கடந்த 2 மாதங்களாக கார்கள் விற்பனை ஆகாமல் தேக்க நிலையிலேயே இருக்கிறது. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை, போதுமான மழையின்மை, மக்களிடையே அதிகரித்து வரும் கடன் சுமை
இந்தியாவில் உள்ள டீலர்ஷிப்களில் கடந்த 2 மாதங்களாக கார்கள் விற்பனை ஆகாமல் தேக்க நிலையிலேயே இருக்கிறது. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை, போதுமான மழையின்மை, மக்களிடையே அதிகரித்து வரும் கடன் சுமை ஆகியவையே இதற்கு காரணங்களாக கூறப்படுகிறது.
இதனால் ஆட்டோமொபைல் துறையில் இந்த மாதம் விற்பனை மிக மந்தமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் இதன் தாக்கம் அதிகமாக தென்படுகிறது. இதற்கிடையில் வட இந்தியாவில் இது ஷாரத் காலமாகும். இந்த காலகட்டத்தில் மக்கள் அதிக விலை மதிப்புள்ள நிலங்கள், வீடுகள் மற்றும் வாகனங்களை வாங்க மாட்டார்கள்.
இந்தியா முழுவதும் உள்ள 5 பெரிய பயணிகள் வாகன டீலர்களிடம் நடத்திய சர்வேயின் படி மாருதி சுசூகி மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் சுமார் அடுத்த 45 நாட்களுக்கு ஸ்டாக் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. சாதாரணமாக 25-30 நாட்களுக்கான ஸ்டாக்குகள் மட்டுமே டீலர்களிடம் இருக்கும். டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் டீலர்களிடம் தற்போது 35-40 நாட்களுக்கான ஸ்டாக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி நிறுவனம் குஜராத்தில் உள்ள அவர்களது ஆலையில் சுமார் 2,50,000 வாகனங்களை கட்டமைத்து வருகின்றனர். இது டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களுக்கு தூண்டுதலாக அமைந்து அவர்களும் அதிக உற்பத்தியில் ஈடுபட வழிவகுத்துள்ளது. இதன் காரணமாகவே இரண்டு மாத தேக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தினரிடம் கேட்ட போது, கடந்த 4 மாதங்களுக்கு முன்பாகவே இந்தியாவில் தற்போது நடந்து வரும் பண்டிகை கால விற்பனைக்காக கார்களை ஸ்டாக் செய்ய துவங்கிவிட்டோம். இது போல் இதற்கு முன்னர் நிகழ்ந்தது இல்லை. இதற்கு முன்னர் பண்டிகை காலத்திற்கு சுமார் 2 மாதங்களுக்கு முன்பாகவே ஸ்டாக் செய்ய துவங்குவோம் என்றனர்.
இந்தியாவை பொறுத்தவரை மொத்தமாக கார் டீலர்களுக்கு செல்லும் கணக்கே மொத்த கார் விற்பனை கணக்காக சொல்லப்படுகிறது. டீலர்களுக்குதான் மாதம் எவ்வளவு கார்கள் விற்பனையாகிறது என்பது தெரியும்.
பெரும்பாலான கார் தயாரிப்பாளர்கள் மார்கெட்டில் விற்பனையாகும் கார்களில், தங்கள் கார்கள் எவ்வளவு விற்பனையாகிறது என்பதை கணக்கிடும் மார்கெட் ஷேர் நிலவரத்தில் தங்கள் நிறுவனம் நல்ல சதவீதத்தை பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதால் இன்று சுமார் 45 நாட்களுக்கான கார்கள் ஸ்டாக்கில் உள்ளது. அடுத்த மாதம் இந்த நிலைமை இன்னும் மோசமாகும்.
கடந்த ஜூலை மாதம் பயணிகள் வாகனங்களின் விற்பனை சுமார் 2.7 சதவீதமும், ஆகஸ்ட் மாதம் 2.46 சதவீதமும் வீழ்ச்சியை சந்தித்தது. இதற்கு முக்கிய காரணம் கேரள வெள்ளம் என சொசைட்டி ஆப் இந்தியன் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டது.
தற்போது டீலர்களிடம் உள்ள ஸ்டாக்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமாகியுள்ளது. பண்டிகை காலம் என்பதால் அதிக ஸ்டாக் இருப்பது இயல்புதான். ஆனால் மிக அதிக அளவு ஸ்டாக் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மாருதி நிறுவனத்தின் ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களுக்கு முன்பு காத்திருக்கும் காலம் என்பது இருக்கும். ஆனால் தற்போது நிலையை தலைகீழாகி டில்லியில் இந்த கார்களுக்கு ரூ.20 ஆயிரம் வரை தள்ளுபடி மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி என வழங்கப்பட்டு வருகிறது.
மாருதி நிறுவன டீலர்களிடம் சுமார் 45-50 நாட்களுக்கான கார்கள் ஸ்டாக்கில் உள்ளது. வழக்கமாக 20-25 நாட்களுக்கான ஸ்டாக்குகள்தான் இருக்கும். இதே போல மற்ற நிறுவனங்களும் தற்போது டீலர்களிடம் கார்களை தள்ள முயற்சித்து வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் மார்கெட்டில் நல்ல ஷேரை தக்க வைக்க முயற்சித்து வருகின்றனர்.
இதற்கிடையில் தற்போது எதிர்பார்த்த அளவிற்கு கார் புக்கிங்கள் வரவில்லை என சில டீலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆனால் மாருதி நிறுவனம் தற்போது அதை மறுத்துள்ளது. விற்பனையும் ஸ்டாக்கும் சீரான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் இந்த நிதியாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை பெரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து ஹூண்டாய் நிறுவனம், டீலர்களிடம் பண்டிகை காலத்தை கணக்கிட்டு அதற்கு தேவையான சரக்குகளையே ஸ்டாக் வைத்திருப்பதாகவும், மேலும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு அந்நிறுவனம் அடுத்த மாதம் புதிய காரை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர். டாடா நிறுவனம் இது குறித்து பதிலளிக்க மறுத்து விட்டது.