Just In
- 31 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 42 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 3 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Movies ஹீரோ மாதிரி இருக்கும் அப்பாஸ் மகன்.. களத்தில் இறங்கிடுவாரோ.. ட்ரெண்டாகும் புகைப்படம்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பெயர் மாற்றம் சர்ச்சையான நிலையில் அலகாபாத் கும்பமேளாவிற்கு அச்சுறுத்தல்... அதிரடி காட்டிய யோகி...
அலகாபாத் கும்பமேளா விழாவிற்கு வருகை தரவுள்ள விஐபிக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவல்களையடுத்து உத்தரபிரதேச அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அலகாபாத் கும்பமேளா விழாவிற்கு வருகை தரவுள்ள விஐபிக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவல்களையடுத்து உத்தரபிரதேச அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் (தற்போது பிரயக் ராஜ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), வரும் ஜனவரி மாதம் 15ம் தேதி முதல் மார்ச் மாதம் 4ம் தேதி வரை, மிகவும் பிரசித்தி பெற்ற கும்பமேளா விழா நடைபெறவுள்ளது.
இதில், பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அத்துடன் பல்வேறு இடங்களை சேர்ந்த விஐபி மற்றும் விவிஐபிக்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பமேளா விழா தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.
இந்த சூழலில் கும்பமேளா விழாவிற்கான ஏற்பாடுகள் தொடர்பாக விவாதிக்க, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், 25 கோடி ரூபாய் மதிப்பில் 112 சொகுசு கார்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Recommended Video
2019 கும்பமேளா விழாவிற்கான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், கும்பமேளா விழாவிற்கு வருகை தரவுள்ள விஐபி மற்றும் விவிஐபிகளின் பாதுகாப்பிற்காகவும்தான் 25 கோடி ரூபாய் மதிப்பில் 112 சொகுசு கார்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
112 கார்களுக்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு காரின் சராசரி விலை சுமார் 22.23 லட்ச ரூபாய் ஆகும். என்னென்ன கார்கள் வாங்கப்படவுள்ளன? என்ற விபரங்களை உத்தரபிரதேச மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் வெளியிட்டுள்ளார்.
இதன்படி உத்தரபிரதேச மாநில தோட்டக்கலை துறையின் பயன்பாட்டிற்காக 5 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, 5 மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் 7 ஹோண்டா சிட்டி என மொத்தம் 17 கார்கள் வாங்கப்படவுள்ளன. இவற்றின் மதிப்பு 2.46 கோடி ரூபாய்.
இதுதவிர கூடுதலாக 4 ஸ்கார்பியோ, 2 ஜாமர் ஃப்ரீ கார்கள், 3 புல்லட் ப்ரூஃப் (Bullet proof) டாடா சபாரி, 7 டாடா சபாரி ஸ்ட்ரோம் இஎக்ஸ் உள்பட மொத்தம் 16 கார்கள் தனியாக வாங்கப்படவுள்ளன. இவற்றின் மதிப்பு 6.30 கோடி ரூபாய்.
எஞ்சிய 79 கார்கள் 16.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்படவுள்ளன. இந்த 79 கார்களிலும் ஒரு சில புல்லட் ப்ரூஃப் கார்கள் இடம்பெறவுள்ளன. ஆக மொத்தத்தில் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 112 கார்கள் வாங்கப்படவுள்ளன.
இதுகுறித்து உத்தரபிரதேச மாநில அதிகாரிகள் கூறுகையில், ''கும்பமேளா விழா நெருங்கி வருகிறது. இதில், விஐபி மற்றும் விவிஐபிக்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஆனால் அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
அவர்களுடன் சேர்த்து கும்பமேளா விழாவிற்கு வருகை தரவுள்ள பக்தர்கள் அனைவருக்கும் உச்சகட்ட பாதுகாப்பை வழங்குவது என முடிவு செய்துள்ளோம். எனவே அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துரித கதியில் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாகதான் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 112 கார்கள் வாங்கப்படவுள்ளன. புதியதாக வாங்கப்படவுள்ள கார்களை, பழைய கார்களுக்கு பதிலாக பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். புதிய கார்களை வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை போலீசார்தான் முன்வைத்தனர்'' என்றனர்.
அலகாபாத் என்ற பெயரை கும்பமேளா விழாவை முன்னிட்டுதான் பிரயக் ராஜ் என பெயர் மாற்றம் செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு உள்ளூர் உள்பட நாடு முழுவதும் ஆதரவும், வரவேற்பும் ஒரு சேர நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.