பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இனி தனித்தனி கலர் ஸ்டிக்கர்கள் ஓட்ட வேண்டும்
டில்லியில் மாசுவை கட்டுப்படுத்த 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களையும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து சட்டவிதிமுறைகள் மீறப்பட்டு தான் வருகி
டில்லியில் மாசுவை கட்டுப்படுத்த 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களையும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து சட்டவிதிமுறைகள் மீறப்பட்டு தான் வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு தனித்தனி கலர் ஸ்டிக்கரில் அந்த கார் பதிவு செய்யப்பட்ட ஆண்டு பிரிண்ட் செய்பட்ட ஸ்டிக்கர்களை ஓட்ட உத்தரவு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

டில்லி சுப்ரீம் கோர்டில் டில்லியில் ஏற்படும் மாசுவை குறைப்பது தொடர்பான வழக்கு ஒன்று நடந்து வருகிறது. இந்த வழக்கில் முன்னதாக வாகனங்களில் இருந்து வரும் புகை மூலம் அதிகஅளவிற்கு மாசு ஏற்படுவதாகவும் அதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோர்ட் கூறியிருந்தது.

இதற்கிடையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பெட்ரோல் வாகனங்கள் டில்லியில் இயங்க அனுமதியில்லை. அந்த வாகனங்களுக்கான எப்சி மற்றும் இதர அனுமதிகள் வழங்குவது கோர்ட் உத்தரவு படி நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் விவாத்தின் போது அனுமதிக்கப்படாத வாகனங்கள் தொடர்ந்து டில்லியில் இயங்கி தான் வருவதாக கூறப்பட்டது. அதற்கு அரசு தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட பதிலில்:"டில்லியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த எல்லா வாகனங்களையும் நிறுத்தி அவர்கள் வைத்திருக்கும் பேப்பர்களை சோதனை செய்து அனுமதிக்கப்படாத வாகனங்களை கண்டறிவது கடினமான காரியம்.

இதை எளிமைப்படுத்த அரசு சார்பில் பெட்ரோல், டீசல், எலெக்ட்ரிக், ஹைட்ரஜன், ஹைபிரிட், மற்றும் பிஎஸ்4, பிஎஸ் இந்த ஒவ்வொரு வகையான வாகனத்திற்கும் ஒரு கலர் கோட் விதம் காரின் முகப்பு கண்ணாடியில் ஒட்ட உத்தரவிடப்படவுள்ளது.

அது மட்டும் அல்லாமல் அந்த ஸ்டிக்கரில் இந்த கார் பதிவு செய்யப்பட்ட ஆண்டு எழுதப்பட்டருக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதன் மூலம் போலீசார் விதிமுறைகளை மீறி செயல்படும் வாகனங்களை எளிதாக போலீசார் கண்டிறிய முடியும். " என கூறப்பபட்டது.

தற்போது இந்த பிரச்னை டில்லி மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து வருகிறது. இங்கு அதிகமான அனுமதிக்கப்படாமல் பயன்படுத்தப்படுகிறது. இந்த உத்தரவு நாடு முழுவதும் அமலுக்கு வந்தால் காற்று மாசுவை அதிகமாக கட்டுப்படுத்த முடியும். என மக்கள் கருதுகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்


Click it and Unblock the Notifications








