Just In
- 14 min ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 1 hr ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 1 hr ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 2 hrs ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
Don't Miss!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Movies சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
2 டிரக்குகளுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமான வென்ட்டோ கார்... ஆனால்...!!
கேரளாவில் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் ஒன்று இரண்டு டிரக்குகளுக்கு இடையில் சிக்கி பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் நடந்த அதிசய விஷயம் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.
Recommended Video
கேரளாவில் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் ஒன்று இரண்டு டிரக்குகளுக்கு இடையில் சிக்கி பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் நடந்த அதிசய விஷயம் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் சிறப்பான பாதுகாப்பு வசதிகளுடன் கட்டமைக்கப்படுவதில்லை; பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்ற கருத்து உள்ளது. ஆனால், சில வேளைகளில் அவற்றையெல்லாம் மீறி பயணிகள் உயிர் தப்பும் அதிசயங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
அவ்வாறு கேரளாவில் நடந்த விபத்து ஒன்றில் பயணிகள் மிக பயங்கர விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்து பற்றி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது.
வீடியோவில் இந்த விபத்து குறித்து ஒருவர் மலையாளத்தில் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதன்படி, புதிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் ஒன்று எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற டிரக்குடன் மோதியதாக தெரிகிறது.
இதனையடுத்து, பின்தொடர்ந்து வந்த பிக்கப் டிரக் ஒன்று வென்ட்டோ காரின் பின்புறத்தில் மிக பலமாக மோதியது. இந்த விபத்தில், காரின் முன்பகுதியும், பின்பகுதியும் பலத்த சேதமடைந்தது.
எனினும், காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியதாக வீடியோவை பதிவிட்டவர் கூறுவது ஆறுதல் தரும் விஷயமாக எடுத்துக் கொள்ளலாம்.
பொதுவாக ஃபோக்ஸ்வேகன் கார்கள் சிறப்பான கட்டுமானத் தரம் கொண்டவை என்ற கருத்து உண்டு. அதனை மெய்ப்பிக்கும் விதத்தில் இந்த விபத்து சான்றாக அமைந்துள்ளது.
மேலும், இந்த காரின் க்ரம்பிள் ஸோன் எனப்படும் மோதல் தாக்கத்தை உள்வாங்கி பயணிகளை காக்கும் கட்டமைப்பு நுட்பமும் சிறப்பாக இருப்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது.
க்ரம்பிள் ஸோன் மற்றும் கட்டுமானத் தரம் சிறப்பாக இருப்பதுடன், இதுபோன்ற விபத்துக்களின்போது பயணிகளை பாதுகாக்கும் உள்கூடு வடிவமைப்பும் முக்கியம். அது இந்த காரில் சிறப்பாக இருப்பதையும் உணர்ந்து கொள்ளலாம்.
இந்த விபத்தில் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் சரி செய்ய முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது. இருப்பினும், பயணிகள் உயிர் தப்பியது நிச்சயம் இந்த காரின் மதிப்பை உயர்த்தும் விஷயமாகவே பார்க்க முடியும்.
ஏனெனில், இப்போது எரிபொருள் சிக்கனத்தை அதிகரிக்கும் விதத்தில் காரின் கட்டுமானத் தரத்தில் பல கார் நிறுவனங்கள் சமரசம் செய்து கொண்டுவிடுகின்றன.
ஆனால், ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட சில கார் நிறுவனங்கள் மட்டுமே இந்த விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் இருப்பது இதுபோன்ற விபத்துக்களின் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்தியாவில் கார்களின் பாதுகாப்பு தரத்தை சோதிப்பதற்கான மையங்கள் அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், அவை விரைந்து கொண்டு வர வேண்டியதும் அவசியம். அப்போதுதான் அனைத்து கார் நிறுவனங்களும் கார்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று எதிர்பார்க்க முடியும்.
சூப்பர் பைக்குகளில் வந்தவர்களை வளைத்து பிடித்த கிராம மக்கள்... நடந்தது என்ன?
பெங்களூர் அருகே கேடிஎம் பைக் மோதி சிறுமி பலியான சம்பவத்தையடுத்து, அந்த வழியாக விலை உயர்ந்த பைக்குகளில் வந்த இளைஞர்களை வழிமறித்து கிராமத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வார விடுமுறை நாட்களில் பெங்களூரை சேர்ந்த இளைஞர்கள் தங்களது பைக்குகளில் அருகிலுள்ள நந்தி ஹில்ஸ் மலைப்பகுதி மற்றும் நெடுஞ்சாலைகளில் தங்களது விலை உயர்ந்த பைக்குகளில் பயணம் மேற்கொண்டு மாலையில் பெங்களூர் திரும்புவது வழக்கம்.
நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் மோட்டார்சைக்கிள் குழுவை சேர்ந்தவர்கள் பெங்களூரிலிருந்து வழக்கம்போல் பயணம் மேற்கொண்டுள்ளனர். அதுபோன்று இளைஞர் ஒருவர் ஓட்டிச் சென்ற கேடிஎம் பைக் ஒன்று, சிக்கபள்ளாபூர் சென்றுள்ளது.
அந்த பகுதியில் உள்ள நந்தி உபச்சார் ஓட்டலுக்கு அருகில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையை கடக்க முயன்ற 11வயது சிறுமி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அந்த சிறுமி உயிரிழந்தார்.
இதையடுத்து, அங்கு கூடிய அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பைக்கில் வந்த இளைஞரை கடுமையாக தாக்கினர். மேலும், பைக்கையும் அடித்து நொறுக்கினர்.
அத்துடன், விடாமல் அந்த நெடுஞ்சாலை வழியாக ஹார்லி டேவிட்சன், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட விலை உயர்ந்த மோட்டார்சைக்கிளில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி, மோட்டார்சைக்கிள்களை அடித்து நொறுக்கினர்.
இதனால், அப்பகுதியில் பெரும் பதட்டமும், பரபரப்பும் நிலவியது. இளைஞர்கள் தாக்கப்படுவதும், கேடிஎம் ட்யூக் 390, பிஎம்டபிள்யூ ஆர்ஜி1200 மற்றும் புத்தம் புதிதய ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் பைக்குகள் அடித்து நொறுக்கப்பட்டு கிடப்பது குறித்து பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டன.
மேலும், சம்பத்தில் தொடர்பு இல்லாத மோட்டார்சைக்கிளில் வந்த இளைஞர்கள் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், அந்த வழியில் சாலையில் அமர்ந்து அப்பகுதி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை தருவதாக இருக்கிறது. பைக்கில் வந்த இளைஞர் ஒருவரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததும், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோக்கள் வாகன பிரியர்கள் நடத்தி வரும் சமூக வலைதள பக்கங்களிலும் அதிக அளவில் பகிரப்பட்டது. இந்த சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வழியாக பைக்கில் செல்லும் இளைஞர்கள் அதிவேகமாக செல்கின்றனர் என்ற கோபத்தில் அப்பகுதி மக்கள் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி, விலை உயர்ந்த பைக்குகளில் வந்தவர்களை பிடித்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து போலீசார் வந்தும், தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு நிலைமை அங்கு கைமீறி போய்விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் அந்த வழியை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
நெடுஞ்சாலைகளில் ஜாலி ரைடு என்ற பெயரில் விலை உயர்ந்த பைக் வைத்திருக்கும் இளைஞர்கள் அதிவேகமாக செல்வதாக புகார்கள் உள்ளன. நெடுஞ்சாலைகளில் சென்றாலும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் சற்று நிதானத்தை கடைபிடித்தால் இதுபோன்ற விபத்துக்களையும், விரும்பத்தகாத சம்பவங்களையும் தவிர்க்கலாம்.
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!