Just In
- 5 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 5 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 8 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 8 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
10 பேர் பரிதாப பலி... இந்த விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி வாகனங்களில் பயணம் செய்யவே மாட்டீர்கள்
சாலையில் நடந்த கொடூர விபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு காரணம் என்னவென்று தெரிந்தால், இனி வாகனங்களில் பயணம் செய்வதையே நீங்கள் தவிர்க்க கூடும்.
சாலையில் நடந்த கொடூர விபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு காரணம் என்னவென்று தெரிந்தால், இனி வாகனங்களில் பயணம் செய்வதையே நீங்கள் தவிர்க்க கூடும்.
உலகிலேயே சாலை விபத்துக்களின் காரணமாக அதிகப்படியான உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலை விபத்துக்கள் காரணமாக இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.
உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் அதிர்ச்சிகரமான இந்த தகவல் சுட்டி காட்டப்பட்டுள்ளது. ஆனால் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் மட்டுமே, சாலை விபத்துக்களுக்கு முக்கியமான காரணம் என நினைத்து விட வேண்டாம்.
ஹெல்மெட் அணியாமல் டூவீலர்களில் பயணம் செய்வது, செல்போனில் பேசிக்கொண்டே வாகனங்களை இயக்குவது, குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது என்பதெல்லாம் இந்தியாவில் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது.
பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு இப்படிப்பட்ட போக்குவரத்து விதிமுறை மீறல்களே மிக முக்கிய காரணமாக அமைகின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால் இவை அனைத்தையும் தாண்டி, சில சமயங்களில், எந்த தவறுமே செய்யாதவர்களும் விபத்தில் கொடூரமாக உயிரிழக்க நேரிடுகிறது.
பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் பகுதியில், இன்று காலை (ஜன.4) நடைபெற்ற ஒரு கோரமான சாலை விபத்து அதற்கு ஒரு சாட்சி மட்டுமே. முசாபர்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 28-ல், இன்று காலை 7.30 மணியளவில் வாகனங்கள் எல்லாம் வழக்கம்போல பயணித்து கொண்டிருந்தன.
அப்போது திடீரென பல்வேறு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன. இந்த கோர விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதவிர 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், இதுபோன்ற சாலை விபத்துக்கள் சமீப காலமாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. டெல்லியின் புறநகரில் உள்ள கஞ்சவாலா-பவானா சாலையில் நேற்று (ஜன.3) 25 வாகனங்கள் திடீரென ஒன்றோடு மோதி கொண்டன.
இதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக நேற்று உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்டத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று (ஜன.1) சுமார் அரை டஜன் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டதில், ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். ஆனால் இவை அனைத்தையும் மிஞ்சும் கோரமான விபத்து ஒன்று, கடந்த டிசம்பர் 24ம் தேதி நடைபெற்றது. டெல்லி மற்றும் ஹரியானாவிற்கு இடையே உள்ள ரோஹ்டக்-ரிவாரி நெடுஞ்சாலையில்தான் இந்த விபத்து அரங்கேறியது.
அன்றைய தினம் சுமார் 50 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதி கொண்டன. இதில், பள்ளி பேருந்துகளும் அடக்கம் என்பதுதான் சோகத்தின் உச்சகட்டம். இந்த கோர விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், 7 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட 4 சாலை விபத்துக்களில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். உறைய வைக்கும் மூடு பனிதான் இந்த சாலை விபத்துகளுக்கு எல்லாம் காரணம். வட இந்திய பகுதிகளில் கடந்த 2 வார காலமாக கடும் மூடு பனி நிலவி வருகிறது.
அங்கு எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு மூடு பனி நிலவி கொண்டுள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று மோதி கொள்கின்றன. மேற்கண்ட சாலை விபத்துக்கள் அனைத்திற்கும் மூடு பனிதான் காரணம்.
இதனால் வட இந்தியாவை சேர்ந்த வாகன ஓட்டிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். அதே நேரத்தில் தென் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த வாகன ஓட்டிகளும் இதற்கு விதி விலக்கு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனெனில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட மலை பிரதேசங்கள் உள்பட தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக, வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்தபடியேதான் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
மூடு பனி நிலவும் சமயங்களில் வாகனங்களை சற்று கூடுதல் கவனத்துடன் இயக்குவது நல்லது. இத்தகைய சமயங்களில், வாகனங்களை இயக்குவதற்கு முன்பாக முதலில் உங்கள் ஊரின் வானிலை நிலவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
காலை, மாலை நேரங்களில்தான் கடும் மூடு பனி நிலவும். எனவே அத்தகைய சமயங்களில் வாகனங்களை இயக்குவதை முடிந்த வரைக்கும் தவிர்த்து விடுங்கள். அதையும் மீறி வாகனங்களை இயக்கி ஆக வேண்டிய சூழ்நிலை பலருக்கும் ஏற்படும்.
அப்போது மற்ற வாகனங்களிடம் இருந்து அதிக இடைவெளி விட்டு பயணம் செய்யுங்கள். இல்லாவிட்டால் முன்னே செல்லும் வாகனத்தின் மீது மோதி விடக்கூடிய அபாயம் உள்ளது. பனிக்காலத்தின் கார்களின் விண்டுஷீல்டில் (Windshield), அதாவது முன்பக்க கண்ணாடியில் அதிக பனி படரும்.
இதன் காரணமாக ஏற்படும் ஈரப்பதத்தால், எதிரே வரும் வாகனங்களை சரியாக கவனிக்க முடியாமல் போகும். என்றாலும் ஈரப்பதத்தை அகற்ற வைப்பர்கள் (Wipers) உதவி செய்யும். எனவே வைப்பர்கள் சரியாக வேலை செய்கிறதா? என்பதை காரை எடுக்கும் முன்பாக பரிசோதித்து கொள்ளுங்கள்.
ஆனால் அதையும் மீறி காரை மேற்கொண்டு இயக்க முடியாத அளவிற்கு பனி படர்ந்தால், உடனடியாக ஓரம் கட்டி விடுங்கள். அத்துடன் ஹசார்டு லைட்ஸ் (Hazard Lights) எனப்படும் எச்சரிக்கை விளக்குகளை எரிய விடுங்கள்.
இதன் மூலமாக உங்கள் வாகனம் அங்கு நின்று கொண்டிருப்பதை மற்ற வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ள முடியும். பனிக்காலங்களில் ஒரு வாகனம் திடீரென பழுதாகி சாலையின் நடுவில் அப்படியே நின்று விட்டால், அதனை பின் தொடர்ந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு அது தெரியாமல் போய் விடுகிறது.
இதனால்தான் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொள்கின்றன. எனவே முடிந்த வரைக்கும் அதிவேகத்தில் பயணம் செய்வதை தவிர்த்து விடுங்கள்.
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!