Just In
- 36 min ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 3 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- 4 hrs ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- 6 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
Don't Miss!
- News மோடியிடம் கொடுத்த ராஜினாமா கடிதம்? திமுகவை விட்டு விலகியது ஏன்? ரகசியம் உடைத்த பாரிவேந்தர்!
- Movies இளையராஜா பயோபிக்.. தனுஷ் போட்டிருக்கும் பிளான் இதுவா?.. 100 கோடியாம் ப்பு.. பரபர தகவல்
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இரண்டு நாள் சிறைவாசம் சென்ற 6 வாகன ஓட்டிகள்.... எதற்காக தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க!!!
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட குற்றத்திற்காக வாகன ஓட்டிகள் ஆறு பேருக்கு 2 நாள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் போக்குவரத்துத்துறைக்கும் மிகப்பெரிய தலைவலியாக, போக்குவரத்து விதிமீறல்களும், வாகனங்கள் சார்ந்து அரங்கேறும் குற்றச் சம்பவங்களும் இருக்கின்றன.
இதில், போக்குவரத்தால் ஏற்படும் பின்விளைவுகள் எண்ணிலடங்காதவையாக இருக்கின்றன. அதிலும், மிக முக்கியமான இடத்தில் விபத்தே இருக்கின்றது.
அந்தவகையில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் மட்டுமின்றி, அவர்களால் எதிர்புறத்தில் வரும் அப்பாவிகளின் வாகனங்களும் விபத்தில் சிக்கி பெருத்த சேதத்தைச் சந்திக்கின்றன.
ஆகையால், இவற்றை இரும்புக் கரம் கொண்டு கட்டுபடுத்தும் விதமாக, மத்திய மற்றும் மாநில அரசுகளல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதரபாத்தில், தவறான பாதையில் வந்த குற்றத்திற்காக ஆறு வாகன ஓட்டிகளுக்கு இரண்டு நாள் ஜெயில் தண்டனை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த தகவலை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில செய்தி தளம் வெளியிட்டுள்ளது.
பொதுவாக, இம்மாதிரியான போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு, மோட்டார் வாகன சட்டம், 119 மற்றும் 177-ன் பிரிவுகளின் கீழ் ரூ. 1,100 அபராதம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை வாகன ஓட்டிகள் மத்தியில் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஹைதராபாத்தின் 14வது சிறப்பு நீதிமன்றம் ஆறு வாகன ஓட்டிகளுக்கு இரண்டு நாள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இவர்களை வெவ்வேறு தினங்களில், வெவ்வேறு பகுதிகளில் இருந்து பிடிக்கப்பட்டதாக பௌனபள்ளி போலீஸார் தெரிவிக்கின்றனர். அந்தவகையில், கடந்த 17, 18, 19 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அவர்களை 6 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, அவர்கள் மீது, தவறான பாதையில் சென்று போக்குவரத்தைத் தடைச் செய்ய குற்றத்திற்ககாக பிரிவு 21/76-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்களுக்கு ரூ. 50 அபராதம் விதித்ததுடன் இரண்டு நாள் சிறைத்தண்டனையை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து, காவல் ஆணையர் அஞ்ஜனி குமார் கூறியதாவது, "முறைகேடில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதைக் கண்டு மற்ற வாகன ஓட்டிகள் முறையாக போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பார்கள் என நம்பப்படுகின்றது" என்றார்.
அதேசமயம், தெலங்கானா மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறல் அண்மைக் காலங்களாக அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது. அந்தவகையில், நடப்பு 2019ம் ஆண்டு ஆரம்பித்து ஆறு மாதங்களே முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை 1,05,346 வழக்குகள் தவறான பாதை பயணத்திற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுக கடந்த வருடத்தைக் காட்டிலும் 115 சதவீதம் அதிகம் என கூறப்படுகின்றது.
இது பல மடங்கு அதிக வளர்ச்சியாகும். அதிலும், ஆறு மாதங்களே முடிவடைந்துள்ள நிலையில் 115 சதவீத வளர்ச்சி என்பது அதீத வளர்ச்சியாக பார்க்கப்படுகின்றது. இதன்காரணமாகவே, அண்மைக் காலங்களாக விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம், தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு வாகன ஓட்டியில் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. இதனால், கணிசமாக போக்குவரத்து விதிமீறல்கள் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், இந்த சம்பவம்குறித்து ஹைதராபாத்தின் வடக்கு மண்டல டிசிபி கூறியதாவது, "பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, தவறான பாதையைப் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அவர்கள் செயல்படும் நேரத்தில், எதிர்புறத்தில் வரும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாக நேர்கின்றது. மேலும், சில சமயங்களில் இரு புறத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட இதுபோன்ற செயல்கள் காரணாகிவிடுகின்றன. ஆகையால், அவற்றை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது" என்றார்.
இவ்வாறு, முறைகேட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக இரும்பு கரங்களைக் கொண்டு செயல்பட்டுவரும் போலீஸார், யாரென்றே தெரியாத பெண்ணுடன் சேர்ந்து பைக்கில் சாகசம் செய்த வாலிபரை அண்மையில் கைது செய்தனர்.
பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்த தகவலை கீழே உள்ள ஸ்லைடரில் காணலாம்.
பைக்குகளில் 'ஸ்டண்ட்' செய்யும் கலாச்சாரம் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. பல இளைஞர்கள் பைக் ஸ்டண்ட் என்ற விஷயத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். தேவையான பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு, பைக் ஸ்டண்ட் செய்வதில் தவறில்லைதான்.
பைக் ஸ்டண்ட்டில் ஈடுபடுபவர்கள் ஹெல்மெட், க்ளவுஸ், பேட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட முக்கியமான பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருப்பது அவசியம். ஒருவேளை துரதிருஷ்டவசமாக விபத்து அசம்பாவிதம் நிகழ்ந்தால், இவை உங்கள் உயிரை காப்பாற்றும்.
அத்துடன் பிறருக்கு தொந்தரவு இல்லாத இடங்களில் பைக் ஸ்டண்ட் செய்து தங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்வதும் முக்கியமானது. பொது சாலைகளில் பைக் ஸ்டண்ட் செய்தால், அது உங்களுக்கு மட்டுமல்லாது, மற்ற வாகன ஓட்டிகளின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
ஆனால் ஒரு சில இளைஞர்கள் இதனை புரிந்து கொள்வதில்லை. ஹெல்மெட் உள்பட எவ்விதமான பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல், பொது சாலையில் பைக் ஸ்டண்ட் செய்து, அதனை வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
இந்த வகையில், ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் வாலிபர் ஒருவர் மிகவும் அபாயகரமான முறையில் ஸ்டண்ட் செய்யும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. அவர் செய்த ஸ்டண்ட்டின் பெயர் வீலி. இது மிகவும் அபாயகரமானது.
ஆனால் அதனை எல்லாம் பொருட்படுத்தாத அந்த வாலிபர், பொது சாலையில் இந்த ஸ்டண்ட்டை செய்தார். போதாக்குறைக்கு ஹெல்மெட் உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு கவசங்களையும் அவர் அணியவில்லை. அத்துடன் இளம்பெண் ஒருவரும் ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்திருந்தார்.
அவரும் பாதுகாப்பு உபகரணங்கள் எதையும் அணியவில்லை. ஸ்டண்ட் செய்த வாலிபரின் ஒரு காலை அவர் இறுக பற்றியிருந்தார். கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகே உள்ள தேவனஹள்ளி-நந்தி ஹில் சாலையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருந்தது.
சமூக வலை தளங்களில் இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து பெங்களூர் போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர். இதில், பெங்களூர் எலகங்கா பகுதியை சேர்ந்த நூர் அகமது என்ற வாலிபர்தான் இந்த அபாயகரமான ஸ்டண்ட்டை செய்திருந்தது தெரியவந்தது.
இதர இளைஞர்களுக்கும் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தியதால், போலீசார் உடனடியாக அவரை கைது செய்தனர். 21 வயது மட்டுமே நிரம்பியுள்ள நூர் அகமது, அங்குள்ள அரசு கல்லூரி ஒன்றில் பி.காம் படித்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
நூர் அகமதுவின் தந்தை ஆட்டோ டிரைவராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏழ்மையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர் என்பதால், நூர் அகமதுவால் சொந்தமாக டூவீலர் வாங்க முடியவில்லை. நண்பர்களின் டூவீலர்களில்தான் ஸ்டண்ட் செய்ய கற்று கொண்டுள்ளார்.
பைக் ஸ்டண்ட் தொடர்பாக நண்பர்களுடன் சேர்ந்து நூர் அகமது அடிக்கடி பயிற்சி மேற்கொண்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் வீலி, ஸ்டாப்பி உள்பட பல்வேறு ஸ்டண்ட்களை செய்ய பயிற்சி பெற்றுள்ளனர்.
அதே சமயம் நூர் அகமது ஸ்டண்ட் செய்த நேரத்தில் பின்னால் அமர்ந்திருந்த பெண் யார்? என்ற கேள்வி போலீசார் மனதில் எழுந்தது. ஆனால் அந்த பெண் யார்? என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என போலீசாரிடம், நூர் அகமது கூறியுள்ளார்.
இரு சக்கர வாகனங்களில் ஸ்டண்ட் செய்வதில் நூர் அகமதுவிற்கு உள்ள திறன்களை பார்த்து வியந்த அந்த பெண், தானாக முன்வந்து இந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. போலீசாரிடம் நூர் அகமது இவ்வாறுதான் கூறியுள்ளார்.
வீடியோவில் இருந்த ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் பதிவு எண் மூலமாகதான் போலீசார் நூர் அகமதுவை பிடித்துள்ளனர். பதிவு எண்ணை வைத்து, முதலில் ஸ்கூட்டரின் உரிமையாளரை பிடித்துள்ளனர். அதன் பின் நூர் அகமது சிக்கியுள்ளார்.
பொது சாலையில் மிகவும் அபாயகரமான ஸ்டண்ட்டை நூர் அகமது செய்தது தொடர்பாக டிவி9 கன்னடா செய்தி வெளியிட்டுள்ளது. சமூக வலை தளங்களில் வைரலாக பரவிய அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இதேபோன்றதொரு சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் கூட நடைபெற்றது. அங்கு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல், பொது சாலையில் பைக் ஸ்டண்ட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு