ஆதாருடன் இதையும் இணைக்க வேண்டுமா?... வருகிறது புதிய சட்டம்
ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என மத்திய சட்ட மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. பான் கார்டு, சிம் கார்டு, மற்றும் வங்கிக் கணக்கோடும் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி வருகிறது மத்திய அரசு. இதே போல ஓட்டுநர் உரிமம், தேர்தல் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வந்தது.

இந்நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்களை வைத்திருப்பதைத் தடை செய்ய ஆதார் எண்ணுடன் டிரைவிங் லைசென்ஸ் இணைக்க வேண்டும் என்ற புதிய சட்டம் விரைவில் வரவுள்ளது என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அறிவியல் மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் மத்திய சட்ட மற்றும் தகவல்தொழில்நுட்பவியல் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்டார். அங்கு பேசிய அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்களை வைத்துள்ளனர். விதிகளை மீறும்போது ஓர் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டால் மற்றொன்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

போலி பெயர்களிலும் ஓட்டுநர் உரிமங்கள் வாங்கிக் கொள்கிறார்கள். மேலும் இவ்வாறு ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்களை வைத்திருப்பதைத் தடை செய்யும் வகையில். ஆதாருடன் ஓட்டுநர் உரிமத்தை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என கூறினார்.

ஆதார் எண் இணைக்கப்பட்டால் வாகனம் ஓட்டி விபத்தில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டு வெளியூருக்கு தப்பிச் செல்பவர்களை எளிதில் பிடிக்க முடியும் என்றும் ஒருவர் தன்னுடைய பெயரை மாற்றலாம் ஆனால் கைரேகை மற்றும் பயோ மெட்ரிக்ஸ் இவைகளை மாற்ற இயலாது இதனால் போலியான ஓட்டுநர் உரிமம் யாரும் பெற முடியாது என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

ஆதார் கார்டு எண்ணை ஓட்டுநர் உரிமத்துடன் இணைப்பது எப்படி:
உங்கள் மாநில சாலை போக்குவரத்து துறையின் இணையதளத்திற்கு சென்று Link Aadhaar என்பதை கிளிக் செய்து, அடுத்து வரும் டிராப் டவுன் மெனுவை கிளிக் செய்து Driving License என்பதைத் தேர்வு செய்து. அதில் ஓட்டுநர் உரிமத்தின் எண்ணை அளித்து Getdetails என்பதைக் தேர்வு செய்தால் உங்கள் ஒட்டுநர் உரிமத்தின் விவரங்கள் அனைத்தும் காண்பிக்கப்படும்.

அதன்பின் ஆதார் எண்ணை கோரப்பட்டுள்ள இடத்தினை தேர்வு செய்து அதில் விவரங்களை அளிக்க வேண்டும். உங்களின் ஆதார் அட்டை இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் கட்டாயம் தேவை.

ஆதார் எண் அளித்த பிறகு மொபைல் எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச் சொல்லை உள்ளிட்டு Submit என்பதைக் தேர்வு செய்ய வேண்டும். இதனையடுத்து ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமம் இணைப்பை உறுதி செய்யக்கூடிய எஸ்எம்எஸ் வந்துவிடும்


Click it and Unblock the Notifications








