Just In
- 2 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 2 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- 4 hrs ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 4 hrs ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
Don't Miss!
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையாது இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மோடிக்கு எதிராக சித்து விளையாட்டை ஆரம்பித்த சந்திரபாபு நாயுடு... பாஜக அதிர்ச்சியடைய காரணம் இதுதான்
பிரதமர் மோடிக்கு எதிராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சித்து விளையாட்டை ஆரம்பித்துள்ளார். இதனால் பாஜக கூடாரம் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
பிரதமர் மோடிக்கு எதிராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சித்து விளையாட்டை ஆரம்பித்துள்ளார். இதனால் பாஜக கூடாரம் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடைபெற்று கொண்டுள்ளது. இந்த சூழலில், அங்குள்ள பிராமண இளைஞர்களுக்கு கார் வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு தற்போது செயல்படுத்தியுள்ளது.
பிராமண இளைஞர்களுக்கு வழங்குவதற்காக முதற்கட்டமாக 50 மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) கார்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், 30 கார்கள் நேற்று (ஜன.4) பிராமண இளைஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
ஆந்திர மாநிலத்தின் அமராவதி நகரில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். பின்னர் மாருதி சுஸுகி டிசையர் கார்களின் சாவிகளை, 30 பிராமண இளைஞர்களுக்கு அவர் வழங்கினார்.
தற்போதைய நிலையில், வேலையில்லாமல் இருக்கும் பிராமண இளைஞர்களுக்கு மட்டும் மாருதி சுஸுகி டிசையர் கார்கள் வழங்கப்படுகின்றன. இந்த கார்கள் 5.60-9.45 லட்ச ரூபாய் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால் கார்களை வாங்குவதற்கு பிராமண நல சங்கம் தலா 2 லட்ச ரூபாயை மானியமாக வழங்குகிறது. எனவே காரின் விலையில் 10 சதவீத தொகையை மட்டும் பயனாளிகள் செலுத்தினால் போதும். எஞ்சிய தொகையை, ஆந்திர பிரதேச பிராமண கூட்டுறவு கடன் சங்கம், தவணை முறை கடனாக வழங்குகிறது.
வேலையில்லாமல் உள்ள பிராமண இளைஞர்களின் குடும்ப நலனிற்காக மாருதி சுஸுகி டிசையர் கார்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள இந்த கார்களை டாக்ஸிகளாக இயக்கி, அவர்கள் வருமானம் ஈட்ட முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியின்படி, மாருதி சுஸுகி டிசையர் கார்களை தவிர, இளைஞர்களுக்கு 1.40 கோடி ஸ்மார்ட் போன்கள் வழங்கும் திட்டத்தையும் ஆந்திர பிரதேச அரசு அறிவித்துள்ளது. ஸ்மார்ட் போன்கள் வாழ்க்கையை எளிதாக்கும் என அம்மாநில அரசு கூறியுள்ளது.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. இதன் பதவிக்காலம் வெகு விரைவில் முடிவடைய உள்ளது. எனவே இன்னும் ஒரு சில மாதங்களில் நாடாளுமன்றத்திற்கு பொது தேர்தல் நடக்கவுள்ளது.
இந்த பொது தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் மிக தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆனால் ஆந்திர பிரதேச மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்ற பொது தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகி கொண்டுள்ளது.
ஆம், அங்கு இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது. இதன் காரணமாகதான் மாருதி சுஸுகி டிசையர் கார் மற்றும் ஸ்மார்ட் போன்கள் போன்ற பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளை ஆந்திர பிரதேச அரசு வழங்கி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக பாஜகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என கங்கணம் கட்டி கொண்டது போல் சந்திரபாபு நாயுடு செயல்பட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக வெளியாகி வரும் கார், ஸ்மார்ட் போன் போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளால், பாஜக அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இதுதவிர பாஜகவிற்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளையும் சந்திரபாபு நாயுடு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஆல் நியூ மாருதி சுஸுகி டிசையர் கார் கடந்த 2018ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வாடிக்கையாளர்கள் வழங்கிய அமோக வரவேற்பின் காரணமாக, டிசையர் காரின் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியது.
இதன்மூலம் மிகவும் புகழ்பெற்ற மாருதி சுஸுகி ஆல்டோவையே பின்னுக்கு தள்ளி விட்டு, மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் காராக டிசையர் உருவெடுத்தது. ஆல் நியூ டிசையர் கார், புதிய ஹார்ட்டெக்ட் (HEARTECT) பிளாட்பார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் மாருதி சுஸுகி டிசையர் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் டிசையர் டீசல் கார்களின் உற்பத்தியை மட்டும் நிறுத்தி விட மாருதி சுஸுகி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.
அனேகமாக 2020ம் ஆண்டு முதல், அதாவது அடுத்த ஆண்டு முதல், டிசையர் டீசல் கார்களின் உற்பத்தியை மாருதி சுஸுகி நிறுவனம் கைவிடலாம் என கூறப்படுகிறது. மாருதி சுஸுகி டிசையர் காரானது செடான் வகையை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!