டிசம்பரில் அறிமுகமாகும் ஆடி ஏ8எல் காருக்கு இப்போதே புக்கிங் தொடங்கியது... சிறப்பு தகவல்!
அறிமுகத்திற்கு நான்கு மாதங்கள் உள்ள நிலையில், ஆடி நிறுவனத்தின் ஏ8எல் காருக்கு இப்போதே புக்கிங் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, உலகின் பல்வேறு நாடுகளில் அதன் தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றது.
அந்தவகையில், இந்தியாவிலும் அந்நிறுவனம் அதன் சொகுசு ரக கார்களை விற்பனைக்கு களமிறக்கி வருகின்றது.

இந்த நிலையில், மீண்டும் ஓர் புதிய ரக காரை அந்நிறுவனம் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வாறு, அந்நிறுவனம் செடான் ரக ஆடி ஏ8எல் மாடல் காரை வருகின்ற டிசம்பர் மாதம் இந்தியாவில் களமிறக்க இருக்கின்றது.

இந்நிலையில், ஆடி நிறுவனம் ஏ8எல் மாடலுக்கான புக்கிங்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆகையால், நாடு முழுவதும் அந்நிறுவனத்தின் டீலர்கள் கடந்த 2ம் தேதியில் இருந்து காருக்கான புக்கிங்கை பதிவு செய்து வருகின்றனர்.

முன்பதிவிற்காக எவ்வளவு வசூலிக்கப்படுகின்றது என்ற தகவல் முழுமையாக வெளிவரவில்லை. அதேசமயம், இந்த காருக்கான புக்கிங் கணிசமான அளவு ஏற்கனவே பெறப்பட்டுவிட்டதாக அறிவித்துள்ளது.

ஆடி ஏ8எல் மாடல் லாங் வீல் பேஸ் கொண்ட காராகும். இது, இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 7 செரீஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக களமிறக்கப்படுகின்றது.

இந்த காரின் நான்காவது தலைமுறை மாடல் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக, பார்சிலோனாவில் நடைபெற்ற ஆடி கார் கண்காட்சியில்தான் இந்த கார் முதல் முறையாக அறிமுகம் என்பது குறிப்பிட்டதகுந்தது.

இதைத்தொடர்ந்து, இந்தியாவில் களமிறக்கப்பட்டது. அதேசமயம், களமிறக்கப்பட்டது என்னமோ ஜூலை மாதமாக இருக்கின்றது. ஆனால், அதன் உரிமையாளர்களின் பயன்பாட்டிற்கு ஆக்டோபர் மாதத்திற்கு பின்னரே கிடைத்துள்ளது.

ஆடி நிறுவனத்தின் 2019 ஏ8எல் மாடல் கார் பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷனில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், ஹவுரங்காபாத்தில் உள்ள பிளாணட்டில் வைத்து இந்த கார் அசெம்பிள் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகின்று.

இந்த காரின் டிசைன் ஸ்போர்ட்ஸ் காரைப் போன்று தோற்றமளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, இதன் தோற்றம், 2019 புரோலோக் கான்செப்ட் மாடலை தழுவி தயாரிக்கப்பட்டுள்ளது. இத்துடன், பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சொகுசு வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கூடுதல் பாதுகாப்பு வசதியும் இதில் நிறுவப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், ஆடி ஏ8 மாடலின் அடிப்படையில் அவை உருவாக்கப்பட்டுள்ளன.

ஆடி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த செடான் ரக கார்களில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது. ஆகையால், இந்தியர்கள் மத்தியில் இந்த கார் மிகுந்த வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த கார் வருகின்ற டிசம்பர் களமிறங்க இருக்கும் இந்த காருக்கு கணிசமான புக்கிங் குவியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








