கோடைகால சிறப்பு சலுகை திட்டத்தை தொடங்கிய ஆடி நிறுவனம்... எதற்காக தெரியுமா...?

ஆடி நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சிறப்பு கோடை கால சலுகைத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

கோடைகால சிறப்பு சலுகை திட்டத்தை தொடங்கிய ஆடி நிறுவனம்... எதற்காக தெரியுமா...?

சொகுசு கார்களைத் தயாரித்து வரும் ஆடி நிறுவனம், தனது இந்திய வாடிக்கையாளர்களுக்கு கோடை கால சிறப்பு சலுகையை வழங்கும் விதமாக, சம்மர் சர்வீஸ் கேம்ப் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம் சர்வீஸ் செய்யப்படும் கார்களுக்கு 50 சிறப்பு புள்ளிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோடைகால சிறப்பு சலுகை திட்டத்தை தொடங்கிய ஆடி நிறுவனம்... எதற்காக தெரியுமா...?

இந்த புள்ளிகள் மூலம் ஏசி, பிரேக் மற்றும் டயர் உள்ளிட்டவற்றை செக்-அப் செய்துகொள்ள முடியும். மேலும், கார்களுக்குத் தேவையான ஜென்யூன் உதிரி பாகங்களையும் சலுகை விலையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த பாகங்களுக்கு கூட்டப்பட்ட கால வாரண்டி மற்றும் சிறப்பு சர்வீஸ்கள் சலுகைகளும் வழங்கப்பட உள்ளன.

கோடைகால சிறப்பு சலுகை திட்டத்தை தொடங்கிய ஆடி நிறுவனம்... எதற்காக தெரியுமா...?

மேலும், சர்வீஸ் கேம்பில் எக்ஸ்சேஞ் முறையில் புதிய ஆடி காரை வாங்க இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1 லட்சம் வரை சலுகை வழங்கப்பட இருக்கிறது. ஆடியின் இந்த சம்மர் சர்வீஸ் கேம்ப் கடந்த 8ம் தொடங்கியது என்பது குறிப்படித்தக்கது. மேலும், இந்த கேம்ப் வருகின்ற 20ம் தேதி வரை நடக்க இருக்கிறது.

கோடைகால சிறப்பு சலுகை திட்டத்தை தொடங்கிய ஆடி நிறுவனம்... எதற்காக தெரியுமா...?

ஆடியின் இந்த சிறப்பு சம்மர் சர்வீஸ் கேம்ப்-இன் மூலம் வாடிக்கையாளர்கள் 25 சதவீதம் வரை பணத்தை சேமிக்க முடியும் என கூறப்படுகிறது. ஏனென்றால், மற்ற சாதரண நாட்களைக் காட்டிலும் தற்போது, சலுகை முறையிலேயே ஆடி நிறுவனம் சர்வீஸ் செய்து வருகிறது.

கோடைகால சிறப்பு சலுகை திட்டத்தை தொடங்கிய ஆடி நிறுவனம்... எதற்காக தெரியுமா...?

ஆடியின் இந்த சிறப்பு சம்மர் சர்வீஸ் கேம்ப்-இன் மூலம் வாடிக்கையாளர்கள் 25 சதவீதம் வரை பணத்தை சேமிக்க முடியும் என கூறப்படுகிறது. ஏனென்றால், மற்ற சாதரண நாட்களைக் காட்டிலும் தற்போது, சலுகை முறையிலேயே ஆடி நிறுவனம் சர்வீஸ் செய்து வருகிறது.

கோடைகால சிறப்பு சலுகை திட்டத்தை தொடங்கிய ஆடி நிறுவனம்... எதற்காக தெரியுமா...?

இதுகுறித்து ஆடியின் இந்திய தலைமை அதிகாரி ரஹில் அன்சாரி கூறியதாவது, "வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியே எங்களின் குறிக்கோள், இதற்காகதான் தற்போது இந்த சிறப்பு சம்மர் சர்வீஸ் கேம்பினை ஆடி இந்தியா தொடங்கியுள்ளது.

ஆடி நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு காரை ஒப்படைத்தபின்னரும், சிறப்பான சேவையை சர்வீஸை வழங்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. அவ்வாறு, தற்போது இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு எங்களின் தரப்பில் இருந்து சப்போர்ட்டினை வழங்கும் விதமாக, 20 முதல் 25 சதவீதம் வரை டிஸ்கவுண்ட் வழங்கப்பட உள்ளது" என்றார்.

கோடைகால சிறப்பு சலுகை திட்டத்தை தொடங்கிய ஆடி நிறுவனம்... எதற்காக தெரியுமா...?

மேலும் பேசிய அவர், "எங்களின் உலகளாவிய உறுதிமொழியை தக்கவைத்துக்கொள்ளும் வகையில், நாங்கள் ஓர் குடும்பமாக செயல்பட்டு இந்த சர்வீஸினைச் செய்து வருகிறோம். இதனால், வாடிக்கையாளர்களுக்கு உலக தரம் வாய்ந்த சர்வீஸினை ஆடி நிறுவனம் வழங்கும்" என தெரிவித்தார்.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Audi Announces Special Summer Service Camp In India. Read In Tamil.
Story first published: Thursday, April 11, 2019, 12:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X