இந்தியாவின் மிக விலையுயர்ந்த சொகுசு கார் செகண்ட் ஹேண்டில் விற்பனை: வங்கியவர் எந்த ஊர்காரர் தெரியுமா?
இந்தியாவின் விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்று செகண்ட் ஹேண்டில் விற்பனைச் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவின் மிக அதிக விலைக் கொண்ட கார் ஒன்று செகண்ட் ஹேண்டில் விற்பனைச் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏங்க, செகண்ட் ஹேண்ட்ல கார் விற்பனை செய்யுறத எல்லாம செய்தியா போடுவீங்க என நீங்கள் கேட்கலாம். இந்த தகவலை நாங்கள் வழங்க பல காரணங்கள் இருக்கின்றன. அதில், ஒன்றுதான் அந்த காரின் உச்சபட்ச விலை.

இதன்காரணமாகவே, இந்தியாவின் மிக அதிக விலைக் கொண்ட கார்களில் ஒன்றான பென்ட்லீ நிறுவனத்தின் முல்சான் கார் விற்பனை செய்தது குறித்த தகவலை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.
இந்த காரை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓர் தொழிலதிபர் வாங்கியிருப்பதாக கூறப்படுகின்றது. இதுகுறித்த தகவலை நியூஸ் 18 ஆங்கில தளமும் வெளியிட்டுள்ளது.

பிரிட்டிஷ் பயலாஜிக்கல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான விஎஸ் ரெட்டிதான் தற்போது இந்த விலையுயர்ந்த காரை சொகுசு காரை செகண்ட் ஹேண்டில் வாங்கியுள்ளார்.
பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த கார் இந்தியாவில் ரூ. 9.5 கோடி என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது, இந்தியாவில் விற்பனையாகும் உச்சபட்ச விலைக் கொண்ட கார்களில் ஒன்றாகும்.

ஆனால், இந்த காரை வி.எஸ். ரெட்டி எத்தனை கோடி கொடுத்து செகண்ட் ஹேண்டில் வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை.
ரெட்டிக்கு வழங்கப்பட்ட இந்த காரின் உட்புறத்தில் ரோஸ்-தங்க நிறத்திலான வண்ணம் காட்சியளிக்கின்று. இது ராயல் லுக் மட்டுமின்றி அதிக கவர்ச்சியான தோற்றத்தையும் காருக்கு வழங்குகின்றது.

இத்துடன் சிறப்பு வசதியாக முல்லினர் டிரைவிங் வசதி பென்ட்லீ முல்சான் காரில் வழங்கப்பட்டுள்ளது. எனவே, காரில் பயணிப்பது மட்டுமின்றி அதனை இயக்குவதிலும் தனியொரு அலாதியான உணர்வு கிடைக்கும் என கூறப்படுகின்றது.

தொடர்ந்து, பென்ட்லீ முல்சான் காருக்கு பிரிமியம் லுக்கினை வழங்கும் வகையில் 21 இன்ச் அளவிலான பாலிஸ் செய்யப்பட்ட அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், காரின் உட்புறத்திற்கு டயமண்ட் குவில்டட் லெதர் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன், வேனிட்டி கண்ணாடிகள், லேம்பு ஊல் ரக்குகள் மற்றும் கைவினையால் செய்யப்பட்ட பென்ட்லீ முல்லினர் அச்சிடப்பட்ட பிளேட்டுகள் உள்ளிட்டவை காருக்கு கூடுதல் கவர்ச்சியை வழங்கும் வகைில் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக, முல்சான் சொகசு காரில் தொழில்நுட்பம் மற்றும் கூடுதல் சிறப்பு வசதியாக பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், பென்ட்லீயின் சொந்த முயற்சியால் உருவாக்கப்பட்ட காற்று அழுத்தம் கொண்ட கால் சோர்வு நீக்கிகள், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் காணப்படுகின்றதைப் போன்ற இருக்கைகள் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன.

இத்துடன், 10.4 இன்ச் கொண்ட டிஸ்பிளே ஸ்கிரீன் மற்றும் 14 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவையும் நிறுவப்பட்டுள்ளன.
மேலும், காரின் உச்சபட்ச விலைக்கேற்ப, நட்சத்திர விடுதிகளில் காணப்படும் பல வசதிகள் இந்த காரில் காணப்படுகின்றன. இதன் காரணமாகவே, பல கோடி செலவில் பிரிட்டிஷ் பயலாஜிக்கல் நிர்வாக இயக்குநர் வி.எஸ். ரெட்டி, பென்ட்லீ முல்சான் காரை வாங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications








