நாட்டிற்கே முன்னோடியான திட்டத்தை கையிலெடுத்த கர்நாடக அரசு... என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!!
கர்நாடக அரசு நாட்டிற்கே முன்னோடியான திட்டம் ஒன்றை கையிலெடுத்துள்ளது. இதுகுறித்து கூடுதல் முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவின் பல்வேறு பிரச்னைகளில், தலையாய பிரச்னையாக வாகனங்கள் சார்ந்து நடைபெறும் குற்ற சம்பவங்களும், அவற்றின் பயன்பாட்டால் ஏற்படும் பின்விளைவுகளும் மிகப்பெரியளவில் உருவெடுத்துள்ளன. இதன்காரணமாக, அவற்றைக் குறைக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்தவகையில், வாகனங்கள் சார்ந்து நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க உயர்பாதுகாப்பு கொண்ட பதிவெண் என்ற திட்டம் முன்னதாக நாட்டில் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் , நாட்டின் குறிப்பிட்ட மாநிலங்களில் நடைமுறைக்கு வந்துள்ளநிலையில், தமிழ்நாட்டில் இன்னும் இதுகுறித்த விழிப்புணர்வு மக்களிடையேக் கொண்டுச் செல்லப்படவில்லை.

உயர் பாதுகாப்பு கொண்ட நம்பர் பிளேட்டானது அலுமினியத் தகட்டால் உருவாக்கப்பட்ட, அகற்ற முடியாத ஒன்று. இதனை ஒரு முறை அகற்றினால் மீண்டும் பயன்படுத்த முடியாது. அத்துடன், கிழிக்கேவோ அல்லது அழிக்கவோ முடியாத வகையிலான, அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட குரோமியம் ஹாலோகிராம் ஸ்டிக்கரும் அதில் ஒட்டப்படிருக்கும்.

இத்துடன் 'ஐஎன்டி' என்ற ஸ்டிக்கரும் நம்பர் பிளேட்டில் இடம் பெற்றிருக்கும். இது, இந்தியா என்பதற்கான பொருளாகும். அதற்குக் கீழோ அல்லது பக்காவட்டிலோ வாகனத்திற்கான பிரத்யேக பதிவெண்கள் ஸ்டிக்கராக அல்லாமல் அழுத்தமாக அச்சிடப்பட்டிருக்கும். இதனை அழிக்க முடியாத வகையில் அச்சடிக்கப்படும்.

இத்தகைய சிறப்பம்சங்கள் கொண்ட ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்டைக் கொண்ட வாகனம், குறிப்பிட்ட தூரத்தில் வரும்போதே, வாகனம் குறித்த அனைத்து தகவலையும், பிரத்யேக கருவியின் மூலம் போலீஸாரால் அறிந்துக்கொள்ள முடியும். இதனால், திருட்டு மற்றும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் வாகனங்கள் எளிதில் போலீஸாரின் கண்களில் சிக்கிவிடும்.

இதைத்தொடர்ந்து, போக்குவரத்து விதிமீறல்களைத் தவிர்க்கும் விதமாக, வாகனங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராதங்கள், முன்பைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாக வசூலிக்கும் புதிய மோட்டார் வாகன சட்ட மசோதாவுக்கு அண்மையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இவ்வாறு, வாகனங்கள் சார்ந்து கெடுபிடி காட்டி வரும் மத்திய, மாநில அரசுகள் எரிபொருள் வாகனங்களால் ஏற்படும் பின்விளைவுகளைத் தவிர்க்கும்விதமாகவும் பல்வேறு நடவடிக்கைககளை எடுத்து வருகின்றன.

அந்தவகையில், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு எதிராக பலகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு, தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் எரிபொருள் வாகனங்களை முழுமையாக ஒழித்துகட்டும் விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கர்நாடக மாநில அரசும் இத்தகைய முயற்சி ஒன்றில் களமிறங்கியிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை எகனாமிக் டைம்ஸ் ஆட்டோ ஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.
அதில், அம்மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பொது போக்குவரத்து வாகனங்களை மின் வாகனங்களாக மாற்ற திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

இதனை வருகின்ற 2030ம் ஆண்டிற்குள் செய்து முடிக்க, அம்மாநிலம் இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும் அதில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அந்நகரத்தின் பிஎம்டிசி துறையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், அதிக மாசுபடுத்தும் டீசல் பேருந்துகள் அனைத்தையும், எலக்ட்ரிக் பஸ்களாக மாற்றுவதற்கான சாலை வரைபடத்தை உருவாக்கி வருவதாக தெரிவித்தனர்.

இதற்காக, இன்னும் மூன்று ஆண்டுகளில் சுமார் 1,500 மின் பேருந்துகள் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில், 500 பேருந்துகள் அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளன. அந்த 500 மின் பேருந்துகளில், 90 பேருந்துகள் குளிர்சாதன வசதிகொண்டதாக வாங்கப்பட உள்ளன. அதில், 10 குளிர்சாதன பேருந்து விமான நிலைய பயன்பாட்டிற்கும், மற்ற 80 ஏசி பஸ்கள் பிற சேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளன. பிற 410 பேருந்தும் குளிரூட்டப்படாத பேருந்துகளாகும். அவை, பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளன.

இதைத்தொடர்ந்து, பின்வரும் ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக மின்வாகனங்கள் படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. பிஎம்டிசி போக்குவரத்து கழகத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் 3,067 பேருந்துகள் பிஎஸ்-III தரத்திலும், 3,423 பேருந்துகள் பிஎஸ்-IV தரத்திலும் இருக்கின்றன.

இவற்றை, பயன்பாட்டில் இருந்து விலக்க, முதற்கட்டமாக ஃபேம்-1 திட்டத்தின்கீழ் 80 எலக்ட்ரிக் பஸ்கள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட இருப்பதாக பிஎம்டிசி போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்திற்காக தற்போது ரூ. 75 கோடி நிதி பிஎம்டிசி ஒதுக்கப்பட்டிருப்பதாக அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.சி. தமன்னா தெரிவித்துள்ளார்.

ஃபேம்-2 திட்டத்தின்கீழ் பிபிபி தரத்திலான வாகனங்களுக்கு மட்டுமே சலுகை வழங்கப்படும் என்பதால், ஃபோம்-1 திட்டத்தின்கீழ் பிஎம்டிசி, குத்தகைக்கு வாகனங்களை எடுக்க இருக்கின்றது. இத்திடத்தின்கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபரேட்டர்கள்மூலம் தகுதிவாய்ந்த ஓட்டுனர்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அவை, குறிப்பிட்ட கால கட்டத்திற்கு பெங்களூருவின் சாலைகளில் வைத்து பயன்படுத்தப்பட உள்ளன. ஆனால், இந்த பஸ்கள் ஒவ்வொன்றிலும் கார்ப்பரேஷன் சார்பாக நடத்துனர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த குத்தகையின்மூலம் இயங்கும் பேருந்துகளுக்கு செலவாகும் மின்சாரை செலவைத் தவிர இதர செலவுகளை குத்தகைதாரர்களே செய்ய வேண்டும் என பிஎம்டிசி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications