Just In
- 20 min ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 1 hr ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 1 hr ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
Don't Miss!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
இந்தியாவில் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துவதற்கு ஆய்வு: பிஎம்டபிள்யூ தகவல்!
இந்தியாவில் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பிஎம்டபிள்யூ சொகுசு கார் நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
மஹிந்திரா வெரிட்டோ மற்றும் டாடா டிகோர் உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்கள் சந்தைக்கு வந்துவிட்டாலும், கடந்த ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கோனா காருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அனைத்து கார் நிறுவனங்களையும் யோசிக்க வைத்துள்ளது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான கட்டமைப்பு குறைவாக இருக்கும் நிலையிலும், ஹூண்டாய் கோனா காருக்கு சிறப்பான எண்ணிக்கையில் முன்பதிவு கிடைத்துள்ளது. இதனால், முன்னணி கார் நிறுவனங்கள் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்துவதற்கான திட்டத்தை கையில் எடுத்துள்ளன.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் சந்தையில் நுழைந்த சில மாதங்களிலேயே இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த இருக்கிறது. வரும் ஜனவரியில் இந்த கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமும் இந்தியாவில் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துவதற்கான திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தை நிலவரம் குறித்து பிஎம்டபிள்யூ ஆய்வு மேற்கொண்டுள்ளது. மேலும், தனது கீழ் செயல்படும் மினி சொகுசு கார் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் முதலில் களமிறக்கவும் திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மினி நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்திய பிரிவுத் தலைவர் பிராங்கோசிஸ் ரோகா,"எலெக்ட்ரிக் கார்களுக்கு தகுந்த சந்தை வாய்ப்பு இருந்தால், அங்கே நாங்களும் களமிறங்குவோம். சென்னையில் எங்களுக்கு ஆலை இருப்பதால், இதனை சாத்தியப்படுத்துவது எளிதாக இருக்கும். இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தை குறித்து ஆரம்ப கட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.
எலெக்ட்ரிக் கார்களின் சந்தை வலுவாக அமைய அதற்கான சார்ஜிங் நிலையங்களின் கட்டமைப்பும் சிறப்பாக இருக்க வேண்டும். எலெக்ட்ரிக் கார்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பை எட்டுவதற்கு இந்தியா நீண்ட காலம் பயணிக்க வேண்டியிருக்கும்," என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் மினி நிறுவனம் மினி கூப்பர் எஸ்இ என்ற முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை வெளியிட்டது. இந்த காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பிஎம்டபிள்யூ ஆய்வு செய்து வருகிறது. இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 235 கிமீ முதல் 270 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.
இந்த காரில் 32.6 kWh பேட்டரி உள்ளது. இதன் மின் மோட்டார் 0 -100 கிமீ வேகத்தை 7.3 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 150 கிமீ வேகம் வரை செல்லும் திறன் பெற்றிருக்கிறது. ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக இதன் பேட்டரியை 35 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஏற்ற முடியும். முழுமையாக சார்ஜ் ஏற்ற 150 முதல் 210 நிமிடங்கள் பிடிக்கும். இதன் மின் மோட்டார் 184 பிஎச்பி பவரையும், 270 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
Source: ET Auto