Just In
- 29 min ago இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
- 5 hrs ago இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
- 7 hrs ago ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
- 8 hrs ago ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 23 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப் பெரிய நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது...
- News கடலூர் பெண் கொலை பற்றி அவதூறு.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீஸ் வழக்குப்பதிவு
- Sports ரஹானே தொடக்க வீரராக மாறியது ஏன்? சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் மாற்றம் வருகிறது.. மைக்கில் ஹஸி கருத்து
- Technology பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?
- Movies Durai: தேசிய விருது இயக்குநர் துரை காலமானார்.. பசி படத்தால் கவனம் ஈர்த்தவர்!
- Finance ஓரே அறிவிப்பு, மொத்த முதலீட்டாளர்களுக்கும் ஹேப்பி..!! அம்பானி கொடுத்த டிவிடென்ட் சர்பரைஸ்..!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
செப்டம்பர் விற்பனையில் முதல் 6 இடங்களை பிடித்த முன்னணி கார் நிறுவனங்கள்!
2019 செப்டம்பரில் அதிகம் விற்பனையான கார்களின் முழு தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. இதன்படி பார்க்கும் போது அனைத்து நிறுவன கார்களின் விற்பனையும் இந்திய மார்கெட்டில் இறங்குமுகமாக தான் உள்ளது.
மாருதி சுசுகி உள்பட முன்னணி நிறுவனங்களும் விற்பனையில் வீழ்ச்சியையே சந்தித்து வருகின்றன. அவற்றின் விற்பனை நிலவரத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.
மாருதி சுசுகி
மாருதி சுசுகி, இந்தியாவின் மிக பெரிய கார் தயாரிப்பு நிறுவனம். இது 2019ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்தே வீழ்ச்சியையே சந்தித்து வருகிறது. செப்டம்பரிலும் இந்த நிலை தொடர்ந்த வண்ணம் தான் உள்ளன. கடந்த மாதத்தில் 24 சதவீத வீழ்ச்சியை இந்த நிறுவனம் பெற்றிருந்தாலும் ஆகஸ்ட் மாதத்தை விட மிக பெரிய முன்னேற்றம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் ஆகஸ்ட்டில் மாருதி சுசுகி நிறுவனம் 34 சதவீத வீழ்ச்சியடைந்திருந்தது.
இந்த செப்டம்பரில் இந்நிறுவனத்தின் 122,640 கார்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால் அதேசமயம் 2018 செப்டம்பரில் 162,290 யூனிட்கள் விற்பனையாகியிருந்தன. ஏப்ரல்- செப்டம்பர் இடையிலான நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தை பொறுத்தவரை பார்த்தோமேயானால், 6,75,423 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் 9,19,240 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதனால் மாருதி சுசுகி நிறுவனம் இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 26.5 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
ஹூண்டாய்
கொரியா கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாயும் இந்திய மார்கெட்டில் கடந்த செப்டம்பர் மாதத்தில் வீழ்ச்சியையே சந்தித்துள்ளது. கடந்த மாதம் 40,705 யூனிட் கார்கள் இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தாலும் 14.8 சதவீதம் வீழ்ச்சியை அடைந்துள்ளது. 2018 செப்டம்பரில் ஹூண்டாய் நிறுவனம் 47,781 கார்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சரிவு ஒருபுறம் இருந்தாலும் மாருதி சுசுகி நிறுவனத்தை போல இந்நிறுவனமும் கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட விற்பனையில் முன்னேற்றத்தையே அடைந்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் ஆகஸ்ட்டில் 16.58% சதவீத வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது. இந்த முன்னேற்றத்திற்கு சமீபத்தில் அந்நிறுவனம் அறிமுகம் செய்திருந்த வென்யூ எஸ்யூவி மற்றும் கிராண்ட் ஐ10 நியோஸ் காரும் நல்ல விதத்தில் விற்பனையானதும் ஒரு காரணமாகும்.
டாடா மோட்டார்ஸ்
இந்திய மார்கெட்டில் கடந்த மாதத்தில் அதிகப்படியான வீழ்ச்சியை சந்தித்த நிறுவனம் என்றால் அது டாடா மோட்டார்ஸ் தான். கடந்த செப்டம்பர் மாதத்தில் இதன் வீழ்ச்சி 56%. 2018 செப்டம்பரில் 69,991 கார்களை விற்பனை செய்திருந்த இந்நிறுவனம் கடந்த மாதத்தில் வெறும் 36,376 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
இந்த வீழ்ச்சி குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மயங்க் பரீக் கூறுகையில், இந்த மாதத்திலிருந்து பார்க்கும் போது, வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான கடமை எங்களுக்கு உள்ளது என்பதை நினைவூட்டுகிறது. ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் வாடிக்கையாளர்கள் இந்த செப்டம்பர் மாதத்தில் 11 சதவீதம் கூடுதலாக விற்பானையை வழங்கியுள்ளனர். இருந்த போதிலும் நிறுவனம் இன்னும் வீழ்ச்சியை தான் சந்தித்து வருகிறோம்," என்றார்.
மஹிந்திரா
டாடா நிறுவனத்தை போல மற்றொரு இந்திய நிறுவனமான மஹிந்திராவுக்கும் சரிவு முகமாகவே அமைந்தது. இந்த செப்டம்பர் மாதத்தில் கார் விற்பனையில் 55,022 கார்களை விற்பனை செய்ந்திருந்த இந்நிறுவனம் 21% வீழ்ச்சியை அடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் விற்பனை மேம்பட்டுள்ளது ஆறுதலான விஷயம். கடந்த ஆகஸ்ட்டில் 43,343 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.
உள்நாட்டு விற்பனையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் இந்த செப்டம்பரை ஒப்பிட்டால் 21 சதவீத வீழ்ச்சியை மஹிந்திரா நிறுவனம் அடைந்துள்ளது. 40,642 யூனிட் கார்களை உள்நாட்டில் கடந்த மாதம் விற்பனை செய்த இந்நிறுவனம், கடந்த ஆண்டு இதே மாதத்தில் 51,268 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. மஹிந்திராவின் வெளிநாட்டு விற்பனை கடந்த மாதத்தில் 29 சதவீத வீழ்ச்சியுடன் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இதுகுறித்து மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங் மேனஜர் வீஜய் ராம் நக்ரா கூறுகையில், நவரத்திரி போன்ற விழா காலங்கள் தற்போது நடைபெற்று கொண்டுள்ளதால் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளோம். மேலும் சமீபத்தில் பெய்த பருவ மழை சாதகமாகவும், அரசாங்கம் அறிவித்த வரிச் சலுகைகளும் எங்கள் நிறுவனத்தை காப்பாற்றியுள்ளது என்றார்.
ஹோண்டா கார்ஸ் இந்தியா
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் இந்த செப்டம்பர் காலத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்த வருட ஆகஸ்ட்டில் 50 சதவீதம் என்ற மிக பெரிய வீழ்ச்சியில் இருந்த இந்நிறுவனம் அதை அத்தனையையும் வெற்றிகரமாக சமாளித்துள்ளது. இருந்தபோதிலும் மொத்த விற்பனையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட 37 சதவீதம் வீழ்ச்சியில் தான் சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 14,820 கார்களை விற்பனை செய்திருந்த இந்நிறுவனம் கடந்த மாதத்தில் 10,247 கார்களை விற்பனையாக்கியுள்ளது.
இதுகுறித்து ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் சீனியர் துணை உரிமையாளர் ராஜேஷ் கோயல் கூறுகையில், இந்திய மார்கெட்டில் விற்பனை என்பது மிகவும் கடினம் என்பதை இந்த செப்டம்பர் மாதம் மீண்டும் ஒருமுறை காட்டிவிட்டது. இருந்தாலும் 2019 ஆகஸ்ட்டை விட நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்பதால் உற்சாகம் தந்துள்ளது. எங்களுக்கு வாடிக்கையாளர்களின் செண்டிமெண்ட் மீது நம்பிக்கை உள்ளது. அதன்மூலம் என்களது விற்பனை அதிகரிக்கும் என்று நம்புகிறோம். தற்சமயம் சந்தையில் கண்கவரும் கார்கள் பல இறக்குமதியாகியுள்ளதால், இதுவே வாடிக்கையாளர்கள் புது கார்களை வாங்குவதற்கு சரியான தருணம் என கூறினார்.
டொயோட்டா மோட்டார்ஸ் இந்தியா
இந்தியா மார்க்கெட்டில் சரிவை சந்தித்த மற்றொரு நிறுவனம் டொயோட்டா மோட்டார்ஸ். ஜப்பான் கார் நிறுவனமான இது கடந்த மாதத்தில் வெறும் 10,911 யூனிட்கள் விற்பனையாகி 17 சதவீத வீழ்ச்சியை அடைந்துள்ளது. இதில் ஏற்றுமதியான 708 கார்களும் அடங்கும்.
இந்த விற்பனை சரிவை குறித்து டொயோட்டா நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் என்.ராஜா கூறுகையில், வாடிக்கையாளர்கள் செண்டிமெண்ட் இந்த செப்டம்பர் மாதத்திலும் தொடர்ந்துள்ளதை விற்பனை வீழ்ச்சியை வைத்து அறிய முடிகிறது. இதனால் வர போகும் நவராத்ரி மற்றும் தீபாவளி பண்டிக்கைகளுக்கு தான் அட்வன்ஸாக நன்றி சொல்ல வேண்டும். இந்த விழா காலத்தில் எங்களது போட்டியாளர்களை விட வாடிக்கையாளர்களை எதிர்ப்பார்க்கும் நல்ல தயாரிப்புகளை தருவோம் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார்.
செப்டம்பர் மாதத்தின் இந்த கார் விற்பனை நிலவரத்தை பார்த்தால் இந்திய மார்கெட்டில் ஆட்டோமொபைல்களின் விற்பனை கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து சரிந்து வருகிறது. வருகின்ற விழா காலங்கள் தான் தங்களது நிறுவனத்தை காப்பாற்றும் என முன்னணி நிறுவனங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களும் நம்பியிருக்கின்றன.